Feb 27, 2009

சுஜாதா (Sujatha's last writing)

சென்னையில் அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் போட்டி போட்டுக்கொண்டு நிற்கும் சினிமா கட்-அவுட்களில், ஒரு எழுத்தாளருக்கென்று கட்-அவுட் வைக்கப் பட்டது, இது நாள் வரை சுஜாதாவுக்கு மட்டும் தான். அவரது “கனவுத் தொழிற்சாலை” தொடர்கதை ஆரம்பத்தை முன்னிட்டு, ‘ஆனந்த விகடன்” கட்-அவுட் வைத்திருந்தது.

80-களில் சுஜாதா சென்சேஷனலாக புகழின் உச்சியில் இருந்த போது “சுஜாதா லாண்டரிக் கணக்கு எழுதினால் கூட பத்திரிகைகள் வெளியிடும் போல” என்று விமர்சனம் இருந்தது. அதை உண்மையாக்க, ”சாவி” அப்போது சுஜாதா வீட்டு நிஜ லாண்டரிக் கணக்கை வெளியிட்டிருந்தார்!

சென்ற வருடம் சுஜாதாவின் மறைவுக்குப் பின் "ஆனந்த விகடன்" அவரது கடைசி எழுத்தைத் தேடி வெளியிட்டிருந்தது:

சுஜாதா (A Homage to Sujatha)

சென்ற வருடம் இதே நாளில் (Feb-27) சுஜாதா மறைந்தார்.

அவர் மறைவு விட்டுச் சென்ற வெற்றிடம் -vacuum- இன்னும் அப்படியே இருக்கிறது. அவர் நடையின் வேகம், நவீனம் மறந்து, வறட்சியான, உயிரில்லாத தமிழ் எழுத்துக்களை மட்டுமே இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது. விகடன் நெட்டில் முதலாவதாகப் படிக்க 'கற்றதும் பெற்றதும்' இல்லை. அதில் வரும் புறநானூற்று வீரமும் காதலும் இல்லை. தமிழைப் படிப்பதற்கே முன்னைப் போல் ஆர்வம் இல்லை.

சுஜாதாவின் நினைவில் அவருக்கு அஞ்சலியாக இன்று அவரது சில படைப்புக்களை திரும்பிப் பார்க்கலாம்.

'நகரத்'தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. குழந்தையின் நோயகுணமாக்க மதுரை ஆஸ்பத்திரி வரும் ஏழை கிராமத்துப்பெண், டாக்டரை ஒருமுறைமட்டும் பார்த்து, 'லேப்' அது, இது என்று அலைக்கழிக்கப்பட்டு, ஏழ்மையாலும் விவரம் தெரியாமலும் சமாளிக்கத் திராணியின்றி திரும்பிவிடுகிறாள். கொஞ்சம் பொறுப்பான டாக்டர் "எங்கேய்யா அந்தப் பொண்ணு? அந்தக்குழந்தை கேஸ் படு சீரியஸ்....உடனே அட்மிட் பண்ண எழுதியிருந்தேனே..." என்று தேடும்போது அந்தப்பெண் கிராமத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கிறாள்: "வா ராஜா... வீட்டுக்கப் போனதும் எல்லாம் சரியாயிடும்". படித்தவுடன் ஒருநிமிடம் கலங்க வைக்கும் கதை.

"ரேணுகா" -கம்பெனியில் பணம் கையாடல் செய்து சஸ்பென்ட் செய்யப்பட்ட தொழிலாளி யூனியன் அது, இது என்று மேலும் வம்புக்கு அலைய, அவன் மனைவி கைக்குழந்தையுடன் கணவனை வேலைக்கு சேர்த்துவிட்ட தன் மாமாவைப்பார்த்து அழுகிறாள். அவர் "கேஸ் ரொம்ப ஸ்டிராங்-மா அவன் மேலே... எதுக்கும் GM-ஐ ஒருமுறை பார்" என்கிறார். GM வீட்டில் கூர்க்காவிடம் அவள் கெஞ்சுவதைப் பார்த்து GM மனைவி அவளை உள்ளே விட்டு அவள் கதையைக்கேட்க, எல்லாம் சொல்லி அழுகிறாள். "அவர் செஞ்சது தப்புதாம்மா... இந்தவாட்டி அவரை மன்னிச்சு விட்டுருங்கம்மா.... " என்று காலில் விழுந்து கெஞ்சுகிறாள். மறுநாள் அவனைத் திரும்ப வேலைக்கு அழைக்கிறார்கள். வீட்டிற்குத்திரும்பும் கணவன் கொக்கரிக்கிறான்: "மேனேஜ்மென்ட் என்ன நினைச்சான் என்னை? யூனியனா கொக்கா? எச்சரிக்கை நோட்டிஸ் தரானாமில்ல..? அதையும் வாபஸ் வாங்க வைக்கிறேன்" என்று சவால் விட்டு, "ஏய், வாடி" என்று அவசரமாக அவள் உடைகளைக் களைகிறான்.......நம் கவனத்துக்கு வராத கீழ்மட்ட அபலை மனைவியின் அன்றாட நிச்சயமின்மை பற்றிய கதை.

'காணிக்கை' அப்படியே. ஸ்ரீரங்கத்தில் கோவில்களில் டூரிஸ்ட் கைடாக இருக்கும் ஒரு வயதான, ஏழை பிராமணன் பற்றிய கதை. காரில் வந்த இரண்டு பேரிடம் ஆவலுடன் இவர் சரித்திரத்தை விளக்க, அவர்களோ "அதெல்லாம் வுடு, ஐயரே! இங்கே இன்னும் தாசிங்கல்லாம் இருக்காங்களாமே, நெசம்மாவா?" என்கின்றனர். "அந்த வழக்கெல்லாம் முந்தைய காலத்தோட போயிண்டது.." அவர்கள் நம்பவில்லை. "உனக்கெல்லாம் தெரியும் ஐயரே, சொல்லமாட்டேங்கிற" . ஒரு கட்டத்தில் அவரிடம் "எங்களுக்கு ஒரு சந்தேகம் ஐயரே, இந்த 'ஐயர், அய்யங்கார் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?" என்று கேட்க, அவரும் "அவாள் அத்வைதிகள்; நாங்கல்லாம் வசிஷ்டாத்வைதிகள்" என்றதும் "தமாஷா கீது ஐயரே, மேலே சொல்லும்...". அவர்கள் எதிரில் அவர் பெண் அழுக்கு உடையில் வர, அவர்களும் இரக்கப்பட்டு பேசினதிற்கு மேலாகவே பணம் கொடுக்க, அதைத் தொட மனமின்றி ஸ்ரீரங்கம் கோவிலில் காணிக்கையாக உண்டியலில் போட்டு விடுகிறார். மனதை நெருடும் கதை.

'பொய்' ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் காலைக்காட்சியுடன் தொடங்குகிறது. கிச்சனில் இளம் மனைவி. வெராந்தாவில் நியூஸ்பேப்பருடன் கணவன். அடுத்த தெருவிலிருந்து அங்கே உதவி கேட்டு வரும் ஒருவன், தன் தாயார் அதிகாலை இறந்துவிட்டதாகவும், அடக்கம் செய்வதற்கு பணஉதவி செய்யுமாறும் கேட்கிறான். ஏமாற்றுவேலை என்று கூறி இவன் உதவ மறுத்துவிட, மனைவி கணவனிடம் வந்தது யார், என்ன விஷயம் என்கிறாள். "உதவியிருக்கலாம்...அம்மா இறந்துவிட்டாள் என்கிறானே...". அவனுக்குக் கோபம் வருகிறது. "உனக்கு இந்த ஏமாற்று வேலைகள் எல்லாம் தெரியாது...". பின் சிற்றுண்டி பரிமாரும்போதும் அவள் "என்னதான் இருந்தாலும்..... எதோ கொஞ்சமாச்சும் செஞ்சிருக்கலாம்" என்று சொல்ல, அவன் விருட்டென்று எழுகிறான்: "என்னை என்ன, இரக்கம் இல்லாதவன்கிறாயா ..? அடுத்த தெரு என்றுதானே சொன்னான்? இப்பவே போறேன்... நிஜம்மா இருந்தா நிச்சயமா ஹெல்ப் பண்ணறேன். போதுமா?" ஸ்கூட்டரை உதைத்துக்கிளம்புகிறான்.

அடுத்த தெருவின் மூலையில் அந்த சிறிய குடிசையின் முன் நாலு பேர் நின்றுகொண்டிருக்க, வாசலில் ஒரு பிணம் வைக்கப்பட்டிருக்கிறது. காலையில் வந்தவன் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறான்.....

இவன் 'சட்'டென்று திரும்பிவிடுகிறான். மனைவி வாசலில் "என்னங்க?" இவன்: "எல்லாம் பொய். அங்கே யாரும் சாகலை. ஒண்ணும் இல்லை..." அவள் திருப்திப் பெருமூச்சு விடுகிறாள். "அப்பா... எவ்ளோ பொய்..." என்கிறாள். Male-ego வை மெல்லிதாகக் கோடிட்டுக்காட்டும் கதை.

"பாலம்" கொஞ்சம் controversial கதை. கதையின் முக்கிய பாத்திரம் "கொலை உணர்ச்சி மனிதனின் ஆழ்மனதில் புதைந்துகிடக்கும் இயல்பான உணர்வுதான்..." என்கிற ரீதியில் ஆரம்பித்து, தான் செய்த கொலையைத் தன் வாழ்வின் magnum opus இன்று நியாயப்படுத்திப் பேசும் உரையாடல்கள் சுஜாதா கொலையை நியாயப்படுத்திப் பேசுவதாக இருந்தன (அல்லது) எடுத்துக்கொள்ளப்பட்டன.

"வாசல்" ஒரு நாடகம். வருடத்திற்கு ஒருமுறை வரும் மாமா பண்ணும் கலக்கல்களைப் பற்றியது. சின்னச் சின்ன விஷயங்களையும் ரசனையுடன் சொல்லி கதாபாத்திரங்களை நிஜமாக நடமாடவிட்டு, கதைக்கு திருப்பங்களோ, முரணோ, நீதியோ, ஆரம்பம்-முடிவு என்றோ எதுவுமே தேவையில்லை என்று காட்டுகிறார். சிறுகதை மற்றும் நாடகத்தைப் பற்றிய எந்த ஒரு விதிகளுக்குள்ளும் அடங்காமல், ஆனால் நம்மைக் கவனம் கலையாமல் படிக்க வைக்கும் நாடகம். "நாங்களும் மாமாவின் அசட்டுத்தனங்கள ரசித்து, அடுத்தமுறை எப்போ வருவார் என்று எதிர் பார்த்து இருப்போம். (விசும்பலுடன்) அடுத்தமுறை மாமா வரவிலை... அவரைப் பற்றிய செய்திதான் வந்தது" என்று முடியும் சின்ன நாடகம்.

"மாறுதலு"ம நாடகமே. 'மாறவே மாட்டேன்' என்கிற காரக்டரிடம் 'மாறுதல் வந்தே தீரும்' என்பத சொல்லும் இளைஞன். நாடகத்திற்குள் நாடகமாக வந்து 'இதுதான் மாறுதல்' என்று முடிகிறது. புதுக்கவிதை மாதிரி, புது நாடகம்?

"வந்தவன்" வயதான ஏழை பிராமண தம்பதி வீட்டிலேயே சைவ உணவகம் என்று போர்டு போட்டு நடத்தும் ஓட்டலுக்கு ஒருவன் மூடும் சமயம் வருகிறான். "ஏதும் இல்லையேப்பா" என்பவரிடம் "ரொம்பப் பசியாய் இருக்குது, ஐயரே" என்று வந்தவன் சொல்ல, இவர் "சரி, இருப்பதை சாப்பிட்டு போம்" என, மனைவியும் உணவு தயார் செய்கிறார். "இப்போ எல்லாம் முன்னே மாதிரி வியாபாரம் இல்ல" என்று ஐயர் பேசிக்கொண்டிருக்க, இவன் கண்கள் எதையோ தேடியவண்ணம் இருக்கின்றன. வந்தவன் திருடன். பேசிக்கொண்டே சாப்பாட்டை முடித்தவன் கல்லாப் பெட்டிபக்கம் வந்ததும் கத்தியைக்காட்டி, "மன்னிச்சுடு ஐயரே எனக்கு வேறு வழியில்லை. உனக்காவது ஒரு குடும்பம், வீடு, தொழில் இருக்கு..." என்று சொல்லி, கல்லாப் பட்டியின் சில்லறைகளையும், ஐயர் கையில் கட்டியிருந்த வாட்ச்சையும் பிடுங்கிக்கொண்டு ஓடிவிடுகிறான்.

நிமிடத்தில் ஐயர் திகைப்பிலிருந்து மீண்டு, "சொல்ல மறந்துட்டேனே.. அந்த வாட்ச் அப்பப்ப கொஞசம் குலுக்கினாத்தான் ஓடும்..." என்று அவன் ஓடிய திசையில் சொல்கிறார். சாப்பாடு எடுத்துக்கொண்டு வரும் மனைவி, "அதற்குள் போயிண்டாரா? 'பசி’ன்னாரேன்னு பயத்தங்கஞ்சி கொஞ்சம் செஞ்சு கொண்டாந்தேன்..."என்கிறார்.

பெயர் மறந்துவிட்ட இன்னொரு கதை வேலை தேடி ரயிலில் சென்னை செல்லும் இளைஞனைப் பற்றியது. இதுவரை எந்த வேலையும் கிடைக்காமல், இந்த முறையாவது கிடைக்க வேண்டுமே என்ற தவிப்பில், சோகத்தில் அந்த இளன்ஞன். ரயிலில் அவன் பார்க்கும் எல்லோருமே ஆனந்தமாக இருப்பது போல் அவனுக்குத் தெரிகிறது. ஒரு சிறு பெண் குழந்தை துறு, துறு வென்று எல்லோரிடமும் சிரித்துப் பேசி விளையாடுகிறது. எல்லோர் கவனத்தையும் கவர்கிற அந்தக் குழந்தை, அங்கும் இங்கும் ஓடிய வண்ணம் இருக்கிறது. அந்தக் கம்பார்ட்மெண்ட்டின் கதவு மூடாமல், திறந்து இருக்கிறது.

இருளில் ரயில் வேகம் பிடிக்கிறது. கதை அந்த இளைஞனின் எண்ண ஓட்டங்களைச் சொல்லுகிறது. மற்ற பயனிகளை விவரிக்கிறது. கொஞ்சம் நேரத்தில் ஒரு இளம் தம்பதியர் பதற்றத்துடன் தம் குழந்தையைத் தேடி வருகின்றனர். "எங்கே அந்தக் குழந்தை?" என்று எல்லோரும் அங்கும் இங்கும் ஓடி விளையாடிய குழந்தையைத் தேடுகின்றனர். எங்கும் இல்லை. ஒருவர் "முதலில் ரயிலை நிறுத்துங்கப்பா.." என்று சங்கிலியை இழுக்கிறார். டி.டி.ஈ ஒடி வந்து, உடனே விஷயம் புரிந்து, டிரைவர் அழைக்கப் பட்டு, ரயில் கொஞ்ச தூரம் பின்னால் ரிவர்ஸில் போவது என்று முடிவாகி எல்லாக் கம்பார்ட்மெண்ட்டிலும் எல்லோரும் வெளியே பார்த்த வண்ணம் வர, சற்று தூரத்தில் ஒரு புதருக்குள் ’அது’ -அந்தக் குழந்தை- கிடப்பது தெரிகிறது. ஓடிச் சென்று குழந்தையை எடுக்கின்றனர்....

கதை சட்டென்று இளைஞன் இன்டர்வியூ சீனுக்கு மாறுகிறது. இன்டர்வியூ கமிட்டியில் ஒரு பெண் கண்ணில் ஆர்வத்துடனும் பதற்றத்துடனும் "குழந்தைக்கு ஒண்ணும் ஆகலையே?" என்று கேட்கிறார். "இல்லை, புதரில் விழுந்ததால் லேசான அடிதான்.. அதிர்ஷ்டம்" என்கிறான் இவன். ‘அப்பா!’ என்று மொத்தக் கமிட்டியும் உணர்ச்சிவசப் படுகிறது.

அடுத்த வாரம் அந்த வேலைக்கான ஆர்டர் வருகிறது. கவரைப் பிரித்துப் பார்த்து சந்தோஷத்தில் இருக்கும் அவன், "ஒருவேளை இந்த வேலை கிடைத்தது அந்தக் குழந்தை "பிழைத்துக் கொண்டதால்" தானோ என்னவோ" என்று நினைக்கிறான். ("பிழைத்துக் கொண்டதால்" என்பது கொடேஷன் மார்க்குகளுக்கு நடுவில் கொடுத்து, குழந்தை பிழைத்தது நிஜமல்ல என்று நமக்குத் தெரிகிறது)

அவரின் தொடர்கதைகளிலும் நாவல்களிலும் நாம் அந்தக் கதைமாந்தர்களுடன் சிலகாலம் வாழ்ந்தோம். 'பிரிவோம் சந்திப்போமி'ல் மதுமிதாவுடன் சேர்ந்து நாமும் பாபநாசத்தில் கொஞ்ச நாள் முதல்காதல் செய்து, பின் இன்னொருத்தனைக் கல்யாணம் செய்து அமேரிக்கா போய் புல்லரித்து, கனவுகண்டு, ஆச்சரியப்பட்டு, துரோகம் பார்த்து விபத்தில் பலியானபோது வருந்தினோம். 'கரையெல்லாம் செண்பகப்பூ'வில் கிராமம் போய், இன்று அந்தக் கதையை மறந்து, நாட்டுப்புறப் பாடல்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றோம். 'காகிதச்சங்கிலிகள்' படித்து 'சொந்தம் எல்லாம் இவ்வளவுதானா?' என்று அந்தப் புதுமனைவியுடன் சேர்ந்து நாமும் 'திக்'காகி நின்றோம். கிண்டி ஹாஸ்டலில் சனிக்கிழமைகளில் வரும் குமுதத்தின் ஒரே இதழுக்காக நான், நீ என்று முந்திக்கொண்டு, பிடுங்கிக்கொண்டு (பெரும்பாலும் பொன்ராஜ் தான் ஜெயிப்பான்) நாங்கள் படித்த தொடர்கதை -'கொலையுதிர் காலம்' ஹோலோகிராபியால் 'நிஜம்மாகவே' பேய் நடமாடியது. 'நில்லுங்கள் ராஜாவே'யின் முதல் அத்தியாயத்தில் வீட்டிற்கு வரும் கணவனைப்பார்த்து மனைவி "யார் நீங்க? யார் வேணும் உங்களுக்கு..?" என்கிறாள். "ஏய்..என்ன ஆச்சு உனக்கு?" என்றவன் தன் குழந்தையை அழைக்க, அதுவும் "நீங்க யார்". செல்ல நாயும் குரைக்கிறது. பிரச்சனை கேட்டு அக்கம்பக்கத்தினர் "என்ன சார், என்ன பிரச்சனை" என்கிறபோது அவன் நொந்து, "பெட்ரூமில் பீரோவுக்குப் பக்கத்தில் இருக்கிற என் கல்யாண போட்டோவைப் பாருங்கள்; நான் யாரென்று தெரியும்" என்கிறான். பெட்ரூமில் பீரோ இருக்கிறது, பக்கத்தில் போட்டோ இருக்கிறது. அதில் மனைவி சிரித்தவண்ணம் இருக்கிறாள். பக்கத்தில் மனைவியின் தோளில் கை வைத்துக்கொண்டு ....இதென்ன, இன்னொருவன்?

'தீண்டும் இன்பம்' மாணவன், காதலிக்கு hiv infection என்று தெரிந்ததும் பாஸ்போர்ட், விசா எல்லாம் கிழித்தெறிந்து, அமெரிக்காவில் MS படிக்கும் வாய்ப்பை உதறித்தள்ளி அவளுடன் சென்னையிலேயே இருந்துவிடுகிறான். "என்றாவது ஒருநாள்" நாவல் இப்படி ஆரம்பிக்கிறது: "என் பெயர் ராமகிருஷ்ணன். நிஜப்பெயர் அதுவல்ல; அதைப்பற்றி அப்புறம். இப்போது நான் ராமகிருஷ்ணன்". தலைமறைவாகத் திரியும் திருடன், தன்னை அவதூறு பேசியவனக் கொலை செய்துவிட்டு ஜெயிலில் இருக்கும் காதலனுக்காகக் காத்திருக்கும் பெண் -என்ற அடிமட்ட வாழ்க்கையின் எளிமையான இரண்டு கதாபாத்திரங்களை வைத்து விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் இந்தக்கதை இன்னும் தமிழ் டைரக்டர்கள் கண்ணில் படாதது, நாம் செய்த பாக்கியம்.

1979-ல் வீடியோ, வி.சி.டி., டி.வி.டி ஏதும் இல்லாத காலத்தில் தியேட்டருக்குப் போய் 17 தடவை பார்த்த "நினைத்தாலே இனிக்கும்" சுஜாதாவின் படைப்பு என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை.

"கற்றதும் பெற்றதும்" -அவர் கதைகளின் பெயர்களைப் போலவே இந்தத் தலைப்பும் 'பளிச்'சென்று இருந்து, சுயசரிதமாகவும் இல்லாமல் விமர்சனமாகவும் இல்லாமல் ஒரு அனுபவப் பகிர்தலாக வந்தது."கற்றதும் பெற்றதுமி"ல் அவர் எழுதியதற்கு அப்புறமே நமக்கு புறநானூற்றின் வீச்சு புரிந்தது. நல்ல, மோசமான புதுக்கவிதைகளை அடையாளம் காணமுடிந்தது.

கடைசி வரை எழுதிக்கொண்டிருந்தவர், 'மேலே' எப்படி சும்மா இருப்பார் என்று தெரியவில்ல. விகடனில் ஒரு ரசிகர் கேட்டது போல் "சுஜாதா ஸார், "செத்ததும் பெற்றதும்" எப்போ எழுதப் போறீங்க?"

Feb 24, 2009

வானமும் சிறகுகளும்

சில பாடல்கள், வரிகள் எத்தனை முறை கேட்டாலும் அதன் impact குறைவதில்லை.

”கன்னத்தில் முத்தமிட்டாலி”ல் வரும் “ஒரு தெய்வம் தந்த பூவே... கண்ணில் தேடல் என்ன தாயே” பாடல் அந்த வகை. கேட்கும் போதெல்லாம் கவனம் கலையாமல் ஒரு வரி விடாமல் என்னை கவனிக்க வைக்கும் மென்மையான, ஆழமான பாடல். வைரமுத்து, எழுதி, A.R. ரஹ்மானின் ரம்மியமான இசையில், ஜெயச்சந்திரன் வரிகளின் வலியை உணர்ந்து பாடுவது. கண்ணதாசனுக்கு "தெய்வம் தந்த வீடு...வீதியிருக்கு" போல, வைரமுத்துவுக்கு "ஒரு.... தெய்வம் தந்த பூவே....கண்ணில் தேடலென்ன தாயே”. (திரையில் பாதி மட்டும் வரும் அந்தப் பாடலை இதில் கேட்கலாம்/ பார்க்கலாம்: http://www.youtube.com/watch?v=SR-JtoUBuWA )

பாடலின் கவித்துவம் மிக்க அத்தனை வரிகளிலும், கீழே வரும் வரிகள் என்னை சிறப்பாகக் கவர்கின்றன; கிறங்க வைக்கின்றன.

"எனது வானம் நீ...... இழந்த சிறகும் நீ"
"எனது வானம் நீ...... இழந்த சிறகும் நீ"

ஒருவரே எப்படி வானமும், சிறகுமாக இருக்க முடியும்?
முடியும்; சிறகுகளை இழக்கும்போது அது தெரிகிறது.
சிறகினை இழக்கும்போது, இழப்பு சிறகு மட்டுமல்ல. வானமும் தான்.

இன்று (Feb-24) வாணிஸ்ரீ பிறந்த நாள்.
தோற்றம்: 24-Feb-1970 மறைவு: 3-May-1998.

.

Feb 22, 2009

the Pursuit of Happiness

The most famous phrase in the US Declaration of Independence crafted by Thomas Jefferson refers to the three "unalienable" rights -Life, Liberty and Pursuit of Happiness.

I came across this phrase for the first time in one of Osho Rajnish's articles -this guy was making fun of it, wondering how a constitution and a Government could 'offer' Happiness to its citizens as a right. His argument was that Happiness was something that had to come from within an individual; Government, politics & economy had nothing to do with it. Though I wasn't a fan of Rajnish, his statement highlighted a vast difference between the East and the West in their perception of 'happiness'. While the Eastern mindset, supposedly inclined more towards philosophical stuff, sees spiritual happiness as real 'happiness', the Western one, on the other hand, seems to refer to worldly pleasures.

Happened to watch this 2006 movie "the Pursuit of Happyness" (sic) recently, which Shibu had recommended. The DVD cover impressively showed a black man carrying a small boy and walking to/from his work. The black man in the story faces several set backs in his life -with his poor /no earnings in his salesman job, he is thrown out of his rental apartment, his wife leaves him, he sleeps in public bathrooms and shelter homes for the poor. All these troubles he survives single-handedly holding on to his 6 year old son. A simple and decent movie which did not get into any violence or racial discriminatory remarks etc. (I don't think a movie of this type would be appreciated in India -evidenced by the flop of Cheran's "thavamaayth thavamirunthu").

Apart from rekindling memories of the days I spent alone here with my son a decade ago, a reference to the phrase "pursuit of happiness" in this movie took my attention. The hero wonders why Thomas Jefferson added the words 'pursuit of' in front of 'Happiness' only (and not for 'Life' and 'Liberty'). He talks to himself: "Happiness perhaps is something one can only pursue, and can never actually have". A wonderful insight!

Feb 19, 2009

டோக்கியோ

நேற்று (Feb-18) டோக்கியோ வரை business trip போகவேண்டி காலை 8 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி, இரவு 10 மணிக்குத் திரும்பினேன். புல்லட் டிரெய்ன் 601 கி.மீ. (ஒன்வே) தூரத்தை சரியாக 2 மணி 50 நிமிடத்தில் அடைகிறது.

ரயிலில் காபி விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் "Mt. Fuji எத்தனை மணிவாக்கில் பார்க்கலாம்?" என்றேன் (ரயிலில் இருந்து நல்ல வியூ கிடைக்கும் என்று கேள்விப்பட்டிருந்தேன்). அந்தப் பெண் ‘சட்’டென்று ஒரு டயரியை எடுத்து, பக்கங்களைப் புரட்டி, "11 மனி 12 நிமிடத்தில் 'வெதர்' க்ளீயராக இருந்தால், இடது பக்க ஜன்னலோரம் பார்க்கலாம்" என்று சொல்லி, எனக்குப் பதில் சொன்னதாலேயே ஜென்ம சாபல்யம் அடைந்து, முகம் மலர்ந்து சிரித்துச் சென்றாள்.

டோக்கியோவின் யோகோஹாமா ஸ்டேஷன் அருகில் சுமார் ஆயிரம் ரெஸ்டராண்ட்களில் இந்திய உணவகத்தைத் தேடி.... 980 yenனுக்கு பரோட்டாவும் சிக்கன் கறியும் காரமாக இருந்தது. யாருக்கும் புரியாது என்பதாலோ என்னவோ, ரெஸ்டராண்ட்டின் பெயர் ‘நிர்வாணா’ என்றிருந்தது. உள்ளே ஜப்பானியப் பெண் சர்வர்கள், சூரிதாரில். எனக்குள் 'ஹைக்கூ' தோன்றியது:

இந்திய ரெஸ்டராண்ட்
சூரிதாரில் ஜப்பனியப் பெண் சர்வர்கள்.
காரமில்லாத சிக்கன் கறி.
என்னருகே கிமோனோவில் தீபிகா.

டோக்கியோவின் ’அவசரகதி’யையும் மீறி, சில விஷயங்கள் கண்ணில் படும். சென்ற முறை போயிருந்தபோது, ஒரு தெரு முழுவதுமே "No-smoking" என்று பண்ணியிருந்தார்கள். மக்களும் பொறுப்பாக, தெருவில் புகை பிடிப்பத்ற்கென்று ஒதுக்கியிருந்த இடத்தில் (மட்டும்) நின்று மிகச் சிரத்தையாக சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார்கள். Disciplined society!

ஸ்டேஷனிலிருந்து 3 நிமிடம் நடந்து 'மேப்'பின் உதவியுடன் நான் போகவேண்டிய ஆபீஸ் இருந்த பில்டிங் வந்துவிட்டேன். ஆனால், பில்டிங்கின் பெயர் (Kamiya Building) கண்ணிலேயே படவில்லை. 20-22 மாடிக் கட்டடமாகையால் ஏராளமான கம்பெனிகள். முதல் மாடியில் இருந்த இன்னொரு கம்பெனிக்குள் நுழைந்து "காமியா பில்டிங் இது தானே?" என்று கேட்டதும் அந்தப் பெண் தலையை அங்கேயும் இங்கேயும் சாய்த்து யோசித்து, அடுத்தவரைக் கேட்க, அவர் உள்ளே ஓடி, ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து, "யெஸ். இது தான் ..." என்றார். ஜப்பானியர்களுக்கு பொதுவாக, கடிவாளம் மாட்டிய குதிரை போல் வேலையைத் தவிர வேற எதுவும் தெரியாது என்று அறிவேன். இவ்வளவு தூரம் என்று நினக்கவில்லை..!

டூர் போய் திரும்பும்போது எப்பவும் அந்த ஊர் ஸ்பெஷல் - ஸ்நாக்ஸ்- பிள்ளைகளுக்கு வாங்கி வருவதில் எனக்கு ஒரு ‘கிக்’. இந்த முறை இல்லை.....

Feb 17, 2009

"நான் கடவுள்" - தொடரும் அலசல்......(Naan kadavuL)

பகலவன் எழுதியது-
<< சென்ற வாரம் "நான் கடவுள்" பார்த்து விட்டு வந்து இரண்டு மூன்று நாட்கள் அந்த பாதிப்பு, << அதிர்வு, நினைப்பு அடங்காமல் இருந்ததால்.....

இங்கும் அப்படியே, பகல்ஸ்.....

"நான் கடவுளி"ன் தனித்தன்மை அதன் முடிவில் இருக்கிறது. பிச்சைக்காரர்களின் அவலம் நாம் பார்க்காதது அல்ல. ஒரு குருட்டுப் பிச்சைக்காரியும் காசியிலிருந்து ஊர் திரும்பிய - அவ்வளவாக சிலாகித்துக் கொள்ள முடியாத- ஒரு இளைஞனும் சந்திக்கும்போது வழக்கமாக நாம் எதிர்பார்க்கும் அனுதாபம், காதல், சண்டை, சுபம் அல்லது தற்கொலை ஏதும் இல்லாமல், கதை பிச்சைக்காரியின் அவலங்களத் தொடர்கிறது. சமுதாயம் அவளை மீட்கவில்லை. மதங்களும் வெறும் போதனையுடன் நின்று விடுகின்றன.

இங்கே தன்னைக் கடவுளாக உணரும் இளைஞன் (இந்து மதத்தின் உச்சக்கட்டமே ஒவ்வொருவனும் தன்க்குள் இருக்கும் கடவுளை அறிந்து கொள்வது தானே) அவளை மீட்பது அவள் மரணம் மட்டும் தான் என்று தெரிந்து, "ஆக்கலும் நானே, அழித்தலும் நானே" என்பதில் கடவுளின் ரோலாகிய அழித்தலைச் செய்கிறான். (அந்த இளைஞன் கொடியவனாகக் காட்டப்படவில்லை என்பதைக் கவனிக்கவும்).

சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் சிறப்பாகப் படைத்து நிஜத்துக்கு மிக அருகில் நம்மை இழுத்துச் சென்று பாலா தரும் அந்தக் கொடூரமான முடிவில் ஆன்மீகத்தைக் கலந்திருப்பது அதிர்ச்சி மற்றும் அபாரம். அவள் கிறிஸ்துவ போதனைகளால் கவரப்பட்டு தேவனிடம் ஒதுங்குவது அவள் desparation-ஐக் காட்டுகிறது.

மனித அவலங்களுக்கு ஆன்மீகத்திலும் தீர்வு இல்லை; ஆன்மீகம் சொல்லும் வழி "செத்து மடி என்பதே" என்ற அபாரமான சிந்தனையும், அதைச் சொல்லும் துணிவும் இதுவரை எந்த இயக்குனருக்கும் இருந்ததில்லை. காந்தியும் ஆதரித்த கருணைக் கொலை வரிசையில் வருகிற இந்த "ஆன்மீக வதை", நாம் பார்த்திராதது. அதனாலேயே படம் பார்த்து சில நாட்கள் ஆன பின்னும் நெருடுகிறது..

Feb 14, 2009

நான் கடவுள் (Non-கடவுள்?)

படத்தில் இரண்டு கிழட்டுப் பிச்சைக்காரர்களின் உரையாடல்’ :
"சரி, விடுய்யா.... எல்லாத்தையும் மேல இருந்து ஒருத்தன் (கடவுள்) பார்த்துக்கிட்டுத் தானே இருக்கான்....."

"தே***ப் பய.... .நம்மள மாதிரி ஈனப் பிறவிங்களுக்கு ஏதுடா சாமி..."

(மேலே தொடரும் முன்....). நீங்கள் தெய்வ நம்பிக்கை மிக்கவராக இருக்கலாம். சுனாமி, பூகம்பம், எய்ட்ஸ், பிறப்பிலேயே ஊனம், பட்டினிச் சாவு இவற்றை வசதியாக அலட்சியப்படுத்தி விட்டு, "இறைவா, என்னே உன் அன்பு!" என்று புல்லரிப்பவராக இருக்கலாம். அல்லது "நமக்கேன் வம்பு?" என்று ஊரோடு ஒட்ட ஒழுகி, குடும்பத்தோடு "Friday கோயிலுக்குக் கூட்டிட்டுப் போ"கிறவராக இருக்கலாம்.

யாராக இருந்தாலும், மேற்சொன்ன உரையாடல் அதன் பச்சையான வார்த்தைப் பிரயோகங்களை மீறி அதில் உள்ள *நியாயத்தை* ஒரு கணமாவது உங்களை யோசிக்க வைக்கிறதா? ("இல்லை" என்றால், 'நான் கடவுள்' உங்களுக்கான படம் இல்லை.).
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
90-ல் உ.பி.யில் வாரனாசிக்கு அருகில் வேலையில் இருந்தபோது, அங்கே வந்திருந்த வசீகரனுக்கும் எனக்கும் அந்த எண்ணம் வந்தது -இறந்து விட்ட எங்கள் அப்பாவிற்கு வாரனாசியில் ’திவசம்’ அல்லது அந்த மாதிரி ’ஏதோ ஒன்று’ செய்ய வேண்டி. அங்கே இங்கே விசாரித்து அதற்கான ஆட்களைப் பிடித்து, "பைசா, பைசா’ மட்டுமே குறியாய் இருந்த அந்த வடநாட்டு ’சாமி’கள்க் கண்டு திகைத்து, ஹிந்தி போதாமல் விலகினோம்.

இன்னொரு நாள் வாரனாசியின் ஜன நெருக்கடியான -மார்க்கெட் போலிருந்த அந்த சின்ன தெருவில் ஏதோ ஒரு "பிராமணாள் காபி, டிபன் ஓட்டலை"த் தேடி கூட்டத்தில் இடிபட்டு நடக்கையில், கூட்டத்தோடு கூட்டமாக நான்கு சைக்கிள் டையர் பொருத்திய ஒரு காய்கறித் தள்ளுவண்டியை ஒருவன் தள்ளிக்கொண்டு போக, அதில் முழுக்க வெள்ளைத் துணியால் மூடி இறுக்கமாகக் கட்டி ......ஒரு பிணம். பார்த்ததும் "திக்"கென்று" மனசுக்குள் ஏதோ பயம் தெறித்து, கூட வந்த வாணிஸ்ரீயை வேறு பக்கம் திருப்பி, பேச்சை மாற்றி, சில வினாடிகளில் "அதை"க் கடந்து கூட்டத்தில் கலந்தேன்.

அதற்கப்புறம் உ.பி. பக்கம் போகவில்லை. இருந்தும், காசியில் மரணத்துக்கு இருந்த ‘மரியாதை’ -அந்தக் காய்கறித் தள்ளுவண்டி -மனதில் தங்கிவிட்டது.

(ஃப்ளாஷ் பாக்கிலிருந்து மீண்டு...). காசியில் கேட்பார் யாருமில்லாத பிணங்களை எரிக்கும் கும்பலில் வேலை செய்பவன் ஒருவனைக் கொஞ்ச நேரம் பின் தொடரலாம், படத்தில். தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொண்டு ’கஞ்சா’வில் இருப்பவன் போலிச்சாமியாகவோ, cult ஆகவோ இல்லாமல்.... சாமிக்குக் காட்டும் தீபத்தில் கஞ்சா பற்ற வைக்கிறான். "என்னண்ணே, தீபத்தை அசுத்தப்படுத்தறீங்க?" "நெருப்புக்கு ஏதுடா சுத்தம், அசுத்தம்?". இந்தக் காட்சி, நெருப்பை வணங்கும் இந்து மதத்தைப் பெருமையாகச் சொல்கிறதா, அல்லது தீபத்தில் கஞ்சா பற்ற வைப்பதை நியாயப்படுத்துகிறதா? (அல்லது இரண்டுமா, நான் நினைத்தபடி)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் பஸ்ஸில், ரயிலில் பயணிக்கும் போது தவறாமல் கண்ணில் படுபவர்கள் பிச்சைக்காரர்கள். அதில் உரத்த குரலில் பாடிப் பிச்சை கேட்பவர்கள், பெரும்பாலும் குருடர்கள். இன்னும் கொஞ்சம் யோசித்தால், அந்தக் குருட்டுப் பிச்சைக்காரர்கள் பாடும் பாட்டுக்கள் கீழே வரும் 4-5க்குள் அடங்கிவிடும்:

"அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே..."
"சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை..."
"இதோ எந்தன் தெய்வம் முன்னாலே..."
"தாயில் சிறந்த கோயிலும் இல்லை..."


அப்படியொரு குருட்டுப் பிச்சைகாரியைத் தொடர்ந்து, அவள் வாழ்க்கையை இன்னும் சில மணி நேரம் கவனிக்க உங்களுக்குப் பொறுமை இருக்கிறதா? இந்த டைரக்டர் ஒரு நிஜ பிச்சைக்காரர் கூட்டத்துடன் உங்களை சில மணி நேரம் கவனம் கலையாமல் இருக்க வைக்கிறார். பஸ்ஸிலும் ரயிலிலும் நாம் பார்த்திருந்த அதே பிச்சைக்காரர்கள். கேட்டிருந்த அதே பாட்டுக்கள். அதே அவலங்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிச்சைக்காரர்களின் sense of humor-ஐ நம்ம ஊரில் பார்த்திருக்கலாம். ஒருமுறை சென்னை மின்சார ரயிலில்"ஐயா, ஒரு 5 பைசா, 10 பைசாவாச்சும் போடுங்கையா..." என்று இரண்டு ரவுண்ட் வந்த பிச்சைக்காரர் கலெக்‌ஷனில் பைசா பெறாததால் இறங்கும்போது கொஞ்சம் சத்தமாக "ஒரு 5 பைசா, 10 பைசா இருந்தா போடுங்கையா..." என்று கூவிவிட்டு சரேலென்று இறங்கிப் போனார். (கவனிக்க "ர்" - 'நான் கடவுள்' effect?)

இந்தப் படத்தில் "பிச்சைக்காரப் பயலுக்கு என்ன பேச்சு பாரு?" என்ற கமெண்ட்டிற்கு ஒரு நொண்டிப் பிச்சைக்காரப் பொடியனின் பதில்: "ஆமா, இவரு பெரிய அம்பானி" ("அது சரி, அம்பானி யாரு?" "செல் போன் விக்கிறவர்... உனக்கு அதெல்லாம் தெரியாது")

Toy Story அனிமேஷன் படத்தில் பொம்மைகள் ஒன்றோடொன்று வம்பளந்து கொண்டிருந்ததை நினைவு படுத்துகிறது, பிச்சைக்காரர்கள் தங்களுக்குள் ஜோக் அடித்துக்கொள்ளும் காட்சி. Toy Story ஏன் நினைவுக்கு வரவேண்டும் என்று யோசியுங்கள்..... நாம் மனிதர்கள் லிஸ்டில் பிச்சைக்காரர்களை சேர்ப்பதில்லை என்பது தெரியவரும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கதைக்கு வேறெந்த முடிவு வைத்தாலும் அது ‘பத்தோடு பதினொன்றா’கி இருக்கும். டைரக்டருக்கு அந்த விபரீத முடிவின் மேல் அபார நம்பிக்கை, வலுவான சம்பவங்களிலும் கதாபாத்திரங்களிலும் மிகத் திறமையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. அந்த கொடூரமான முடிவில் ஆன்மீகத்தைக் கலந்திருப்பது...... ஒரு கணம் "இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு இதுதானோ" என்று தோன்றி ’திக்’கென்கிறது. வேறு வழி எந்த மதத்திலும் இல்லையென்பதை படத்தின் சம்பவங்கள் மிகத் துல்லியமாகக் காட்டுகின்றன. ஆழமாக யோசிக்க வைக்கும் தீர்க்கமான முடிவு, திரைக்கதையை வேறு லெவலுக்குக் கொண்டு செல்கிறது. ...... .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் கடவுள் சொல்வது -இந்தியப் பிச்சைக்காரர்களின் கதையை. அவர்கள் அடி படுவதை. கை,கால் ஒடிக்கப்படுவதை. பொட்டலம் போல் விற்கப்படுவதை. சாவதை. "சாவது தான் சரி" என்று நாம் உணர்வதை.

("India shines" optimist-களும், "அன்பே சிவம்" ‘தேவனின் கருணை" என்று புளகாங்கிதத்தில் இருப்பவர்களும் படத்தைத் தவிர்க்கவும்.)

Feb 11, 2009

"அம்மா அழாதே"

இலங்கைப் பிரச்சனை ‘நிறைவுரை’யை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சுஜாதா ‘நல்ல கவிதை’ என்று அடையாளம் காட்டியிருந்த "அம்மா அழாதே" என்ற ஈழத்துக் கவிதையின் சில வரிகள்:


"துயிலா இரவுகளில் அப்பா என்று
அலறித் துடிக்கிற சின்ன மழலைக்கு
என்னதான் சொல்வாய் ?
உலவித்திரிந்த நிலவைக் காட்டி
மார்பில் தாங்கி
அப்பா கடவுளிடம் போனார் என்று சொல்லாதே.
துயரம் தொடர்ந்த வகையைச் சொல்.
குருதி படிந்த கதையைச் சொல்.
கொடுமைகள் அழியப் போரிடச் சொல்...."


படித்தவுடன் ‘எடு, கையில் துப்பாக்கியை’ என்று ’புலி’த்தனமான கோபம் வரும் இந்தவகையிலான கவிதை ஈழத்திலிருந்து தான் வரமுடியும். இதை எழுதுவதற்கு தமிழ்நாட்டில் சூழ்நிலை இல்லை என்கிறார், சுஜாதா.

Feb 9, 2009

இரண்டு செய்திகள்



இந்த வாரம் என்னை ஈர்த்த இரண்டு செய்திகளும் தனி மனித உரிமை பற்றியன:

முதலில் ஜப்பானில். ஸாக்கர், பேஸ்பால் என்று எத்தனை விளையாட்டுக்கள் வந்தாலும் இன்னும் சுமோ கொஞ்சம் கூட பாப்புலாரிட்டி குறையாமல் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஜனவரியில் நடந்த Emperor Cup போட்டியில் வெற்றி பெற்ற Asashoryu என்ற வீரரை சுமோ விளையாடு கமிட்டி விளாசித் தள்ளிவிட்டது -ஏன்? கடைசிப் போட்டியில் வெற்றி பெற்ற Asashoryu ஆனந்தக் களிப்பில் இரண்டு கையையும் உயர்த்தி ஆனந்தத்தைக் கொஞ்சம் வெளிக்காட்டி விட்டார். அவ்வளவே. கமிட்டி அவரைக் 'கட்டம்' கட்டித் திட்டி"(He should learn that winning is not everything in Sumo"), பெரிய மனதுடன் "இன்னொரு முறை இப்படி நடந்தால்..." என்று எச்சரித்து விட்டுவிடடது. (சுமோவில் ஜெயித்த பின்னும் எதையோ தொலைத்த மாதிரி முக பாவத்துடன் வீரர்கள் பேசுவதும், போஸ் கொடுப்பதும் தான் இங்கே "மரபு"!) Asashoryu மங்கோலிய நாட்டுக்காரர் ஆகையால் மரபுகளை சில கணங்கள் மறந்துவிட்டார் போலும்! (பின்னர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்).


இரண்டாவது, இந்தியாவில் கர்நாடகாவில் ஒரு இந்துத்வா குரூப், Feb-14ல் Valentine Day கொண்டாடுவதைப் பிரச்சனை ஆக்குகிறது. இளம் பெண்ணையும் ஆணையும் சேர்ந்து அன்று பார்த்தால், அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கோயிலுக்குச் சென்று தாலி கட்ட்ச் செய்வார்களாம்; மறுத்தால் ‘ராக்கி’ கட்டச் சொல்வார்களாம். (அதையும் மறுத்தால் என்ன செய்வார்கள் என்று சொல்லவில்லை). The Hindu நியூஸ்பேப்பரில் இவர்களை Hindu Taliban என்று எழுதியது நூற்றுக்கு நூறு சரியே.

Feb 3, 2009

Arima Hot Spring

If you haven't experienced Japanese hot springs ("onsen"), you haven't been to Japan!

What IS a hot spring? Being a volcanic nation, Japan's deep-underwater resources are hot, which spring out to the surface at several locations -almost in all the cities & towns. Water from the hot springs contain natural minerals which are said to cure several illness. I do not know if there is scientific evidence to substantiate the health benefits of taking bath in hot springs; but physicians in Japan do recommend hot spring baths for skin & muscle related diseases.
Every hot spring lists the minerals its water contains, and gives the names of diseases it could cure. (I read that the famous US President FDR used to frequent a hot spring in Georgia for its therapeutic effects).

What I can say for sure is, that hot springs provide a soothing effect on your Body & Mind; soaking in a hot spring pampers your body and relaxes your mind. The Japanese have been addictive to hot springs!

A typical 'onsen' has a cloth room where one undresses completely, and enters the shower area. There are separate areas for men & women. One must clean one's head & body with the shampoo & body soap provided, before entering into the hot spring area -where you'll see 4m x 4m or larger sized tubs (indoor) or ponds (outdoor) of 'flowing' hot spring water. Outdoors ponds are built of rocks to give a serene atmosphere. People carry a small white towel which is the only thing allowed when inside the hot spring area -but which they keep on the head or outside the pond when they soak their bodies. Nothing other than your bare body is allowed inside the hot water.

The hot water is at a temp of about 42C, and it keeps flowing (it is not stagnant). The water is kept immaculately clean. Most of them close their eyes and one would think if they meditate. With the temp 42C, you can't sit inside the pond for more than 3-4 minutes. People come out and get in -thus giving the body a kind of 'thermal massage'. (Recall that in India people soak a towel in hot water and apply it on where the muscle aches). Most hot spring places come with sauna, jacuzzi or steam room. They charge typically 400-600 Yen, for unlimited usage.

ARIMA is one of the oldest hot springs in Japan, which is located in a mountain top (Mt.Rokko) about 30 km from our place. Great that we live near Arima, which attracts tourists from all over the country. The water is rich in iron, and is uniquely in 'muddy orange' color. All the Arima hotels have their own hot springs available only to the guests. There are 4-5 public baths that are open to all.

A drive to Arima's 'Kin-no-yu' hot spring, and a walk on Arima streets would make a wonderful holiday, especially in winter! (Pics taken in an Arima).

In the streets of Arima...
Tasting Arima hot spring water....



If







Feb 1, 2009

மாணிக் : சென்னை-25

முதன்முதல் நான் ஹாஸ்டலில் என் அறைக்குள் (3-வது பிளாக், ரூம் -20, கிண்டி, 1979) நுழைந்தபோது என் ரூம்மேட் மாணிக்கராஜ். டான் பாஸ்கோ இங்கிலிஷ். (நான் தூத்துக்குடி தமிழ்). கொஞ்சம் மிரண்டேன். அப்புறம் கிரவுண்ட் ஃப்ளோரில் கொசு கடிக்கும் என்று பலரைப்போல ’சமயோசித’மாக சிந்தித்து மேல்மாடி ரூம் 24-க்கு மாறினேன். மாணிக் BE முடித்து IIM-B போய் entrepreneur லைனில் நுழைந்து NIIT franchise ஆரம்பித்து, விழுந்து, எழுந்து வேகமாக அமெரிக்கா பறந்து இப்போ அங்கே ‘தனி ராஜ்யம்’ நடத்திக்கொண்டிருக்கும் வரை அவ்வளவாகத் தொடர்பில்லாமல் தான் இருந்தேன். (இடையில் 90-ல் சென்னையில் அவன் கல்யாணத்திற்குப் போனது தவிர).

2004-ல் பொன்ராஜும் நானும் குடும்பசகிதம் மாணிக்கின் நியூயார்க் நகர வீட்டில் 2 நாள் தங்கியது ஒரு வசந்த அனுபவம். மாணிக் கடினமான விஷயங்களை எளிதாகவும் கோர்வையாகவும் பேசுவதில் expert. ரெஸ்ட்ராண்டில் strawberry-யும் chocolate fondue யும் (மாணிக் ரெகமென்டேஷன்) எடுத்துக்கொண்டு கொஞ்ச நேரம் ’பழசை’ அலசிய பின் பேச்சு பிள்ளை வளர்ப்பு பற்றித் திரும்பியது. "We can only do very little to our children" என்று அவன் சொன்னது விவாதத்திற்குரியதாக இருந்தாலும், அந்த "little" என்ன என்றபோது வியப்பாக இருந்தது. "பசங்க கிட்ட கொஞ்சம் வெளியே நின்னு guide மட்டும் பண்ணு; ’அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க’ ன்னு முதல்ல நீ நம்பு. அப்புறம் அந்த நம்பிக்கையை அவங்க கிட்ட கொண்டு வா. பசங்க கிட்ட இந்த self-confidence-ஐ கொண்டு வர்றதுதான் உன்னோட பெரிய முயற்சியா இருக்கனும். அப்புறம் பசங்க கிட்ட communication channel எப்பவும் திறந்தே இருக்கணும். அதுக்கு, அவங்க லெவெல்ல communicate பண்ண நாம் கத்துக்கணும்..."

பசங்க லெவல் என்றால் என்ன? உதாரணமாக, அவங்க கேட்கிற அமெரிக்க பாப் பாடல்களக் கேட்டு ("எனக்கும் அமெரிக்க உச்சரிப்பில் பாடல் வரிகள் புரியாது; நெட்டில் தேடிப் பிடித்து லிரிக்ஸை தெரிந்து கொள்வேன்"), அதில் நல்ல, பொல்லாத வரிகளை கண்டுகொண்டு பேச்சுவாக்கில் பசங்களுடன் பேசுவது. மாணிககால் முடிந்தது. நான் அம்பேல்!

மாணிக்கின் இரண்டு பையன்களின் பெயர்களும் அவன் தனித்துவத்தைக் காட்டும்: கவின், மிகல். தூய தமிழிலான இந்தப் பெயர்கள் ஆங்கிலத்தில் எழுதும்போது Kavin, Michael என்றாகி அமெரிக்கப் பெயர்களாகின்றன. வைரமுத்து "கன்னத்தில் முத்தமிட்டாலு’க்காக எழுதிய "ஒரு தெய்வம் தந்த பூவே... கண்ணில் தேடல் என்ன தாயே" பாடலை வரிக்கு வரி ஆங்கிலப்படுத்தி தன் அமெரிக்க நண்பர்களுக்கு விளக்கியிருக்கிறான்.

Hiking -ல் மாணிக்கிற்கு ஒரு ‘காதல்’ -என் போலவே. பார்க்கலாம், நாங்கள் கனவு காண்பது போல் Mt.Fuji hiking போகிறோமா என்று.

மாணிக் எங்க college batch-mate -ன் group e-mail-ல் அவ்வப்போது எழுதும் விரிவான கட்டுரைகளை நான் பிள்ளைகளுக்கு படிக்கக் காட்டுவேன். (எங்க group-ல் பலரும் அதுபோல் செய்வது அப்புறம் தான் தெரிந்தது). இன்றைய பொருளாதாரப் பிரச்சனையில் அமெரிக்காவின் பங்கு பெரிதாக இருந்தாலும், அதற்கு தீர்வும் அமெரிக்காவிலிருந்துதான் வரும் என்பதில் நான் மாணிக்குடன் உடன்படுகிறேன்.

சமீபத்தில் Obama inaguration பற்றி மாணிக் எழுதிய கட்டுரை The Hindu -வில் வெளியானது. "An occasion I won't miss for the world" என்ற தலைப்பில் எழுதி "What a country!" என்று முடியும் அந்தக் கட்டுரை அமெரிக்காவைக் குற்றம் சொல்வதே ஒரு ‘மேதாவித்தனம்’ என்று நினைக்கும் பெரும்பாலான இந்தியர்களுக்கு ரசிக்குமா என்பது சந்தேகமே. அமெரிக்கா பற்றிய pre-conceived opinion இல்லாதிருந்தால் 29-Jan-2009 The Hindu online edition-ல் அந்தக் கட்டுரையைப் படிக்கலாம்: http://www.hindu.com/2009/01/29/stories/2009012952630900.htm