டிசம்பரில் குளிர ஆரம்பித்துவிட்டால், ஒற்றை இலக்க டெம்பரேச்சரில் இங்கே வெந்நீரில் மட்டுமே குளிக்க முடியும். டிசம்பர் 15 அல்லது 16 -ல் பாத்ரூமின் ஹாண்ட் ஷவர் knob ஐ ’வெந்நீர்’ பக்கம் திருகி வைத்தேன். இனி கொஞ்ச நாள் எப்போதும் வெந்நீர் தான்.....
மறுநாள் குளிக்க வந்தபோது knob குளிர் நீர் பக்கம் திரும்பியிருந்தது. பழக்க தோஷத்தில் மாற்றிவிட்டேன் என்று மறுபடியும் வெந்நீர் பக்கம் திருப்பி வைத்தேன்.
மறுநாளும் அதே போல் குளிர் நீர் பக்கம் knob திரும்பியிருந்தது. பாத்ரூமின் தரை கூட கொஞ்சம் wet-ஆக இருந்த மாதிரித் தெரிந்தது.
லேசாக ஒரு 'பய அலை' எனக்குள் பரவியது. காரணம்....? சில மாதங்களுக்கு முன் தான் இந்த செய்தியை லோக்கல் நியூஸ்பேப்பரில் படித்திருந்தேன்:
----
JAPAN TIMES -Saturday, May 31, 2008
Homeless woman arrested for living in man's closet undetected for a year
A homeless woman who sneaked into a man's house in Fukuoka prefecture and lived undetected in his closet for a year was arrested after he became suspicious when food mysteriously began disappearing.
Police found the 58-year-old woman, Tatsuko Horikawa, hiding in the top compartment of the 57-year-old man's closet Thursday and arrested her for trespassing, police spokesman Hiroki Itakura from Kasuya Police Station said Friday.
The resident of the one-story house in Shime, Fukuoka Prefecture, installed security camera that transmitted images to his mobile phone after becoming puzzled by food disappearing over the past several months. One of the cameras captured someone inside his home Thursday after he had left, and he called police, fearing a burglary.
"We searched the house . . . checking everywhere someone could possibly hide," police spokesman Itakura said. "When we slid open the shelf closet, there she was, nervously curled up on her side."
The man lived alone in the one-story house and was not using the room with the shelf closet where the women was living. The height of the shelf closet is only 50 cm. She had moved a mattress into the small closet space and even took showers, Itakura said, calling the woman "neat and clean." (http://search.japantimes.co.jp/cgi-bin/nn20080531f4.html )
----
என் ஜப்பானிய நண்பரிடம் இதைப்பற்றிக் கூறியபோது, knob வெந்நீரில் செட் பண்ணி வைத்தாலும், சில மனி நேரங்களில் தானாகவே குளிர் நீர் நிலைக்கு வந்துவிடும் வகையாக இருக்கும் என்றார். ’அப்பாடா’ என்று கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. தீபிகா ஃபோனில் "எதற்கும் ஒருமுறை நம்ம closet எல்லாம் திறந்து பார்த்துவிடுங்கள்" என்றாள். "சரியான பயந்தாங்கொள்ளி" என்று சிரித்தேன். (நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன் என்பது அவளுக்குத் தெரியாது!)
இப்பவும் எனக்கு அவ்வப்போது சந்தேகம் வரும் -அதெப்படி knob தானாகவே திரும்பும் என்று. இருந்தும் டெக்னிக்கல் கேள்விகளைப் பிடிவாதமாகத் தவிர்த்து விடுவேன்! நான் ரொம்ப optimist-ஆக்கும்! :-)
Mar 22, 2009
Mar 17, 2009
இவள் விகடன்!
அவள் விகடன் (27-3-2009) இதழில் பெண்கள் வேலைக்குப் போவதை ஆதரித்து தீபிகாவின் கட்டுரை "ஜப்பானிலிருந்து தீபிகா சுபாகர்" என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. கட்டுரையில் வந்திருக்கும் ஃபோட்டோ Kyushu தீவின் Queen of Hot springs என்று சொல்லப்படும் Beppu வில் எடுத்தது. ஒரிஜினல் எழுத்தை ‘அவள் விகடன்’ குழு ரொம்பவே ‘மென்படுத்தி’யுள்ளது! விளைவு -தீபிகாவின் திருநெல்வேலி ஸ்டைல் ஆணித்தரமான கருத்துக்கள் Kansai-ben-ல் அடக்கத்துடன்
வந்திருக்கின்றன :-)
-------------------------------------------------------------------------------------------------
27-3-2009 "அவள் விகடன்"
வீட்டை கவனித்துக் கொள்வதற்காக பெண்கள் வேலையை விடுவதைப் பற்றி இந்த ஆண்டில் விவாதிப்பதே நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது என்பதே என் தாழ்மையான கருத்து!
இல்லத்தரசியாக இருந்து ஒரு இக்கட்டான சூழ்நிலையில், மேற்படிப்பு படித்து, இன்று வெளிநாட்டில் பணியாற்றும் பெண் நான். அன்று என் அம்மா, மாமியார் உதவியதால்தான், இன்று என் குழந்தைகள் இருவரும் வளர்ந்து பெரியவர்களாகி நன்றாக இருக்கிறார்கள்.
மனைவி, வீட்டோடு இருந்தால் குழந்தைகளை நன்றாக வளர்க்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், வேலைக்குப் போகும் பெண்ணுக்கு கணவரும் குடும்பமும் உதவியாக இருந்தால், அதை விட நன்றாகவே குழந்தைகளை வளர்க்க முடியும்.
வேலைக்குப் போகும் பெண்களுக்கு என் அனுபவபூர்வமான டிப்ஸ் சிலவற்றை இங்கே தந்திருக்கிறேன்....
'குழந்தைகளை வளர்ப்பதற்காக' என்று உங்கள் அம்மாவையோ மாமியாரையோ கூப்பிடாதீர்கள். அது எத்தனை சுயநலமானது! திருமணமானது முதலே அவர்களில் யாருடனாவது இருக்க முடியும் எனில், அதைச் செய்யுங்கள். அவர்கள் மீது உண்மையான அன்பும் கரிசனையும் காட்டுங்கள். அப்படிப்பட்ட சூழல் உங்கள் குழந்தை வளர்வதற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
பெரியவர்கள் உடன் இருக்க வசதிப்படாவிட்டால், வீட்டில் ஆள் வைத்துப் பார்த்துக் கொள்வதைக் காட்டிலும் காப்பகத்தில் விடுவதே சிறந்தது.
காப்பகத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சின்னச் சின்ன அசௌகரியங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள். குழந்தை அழுதால் பயப்படாதீர்கள். பள்ளிக்கூடம் போவதற்குக்கூட எல்லாக் குழந்தைகளும் அழத்தான் செய்யும். அதற்காக பள்ளிக்கு அனுப்பாமலா இருக்கிறோம்?
''இப்படி பணத்துக்காக ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா?'' என்று நீங்கள் கேட்கலாம். சம்பாதிக்க முடியும் எனில், வேலைக்குச் செல்வதில் தவறொன்றுமில்லை. உங்களுடையது குறைந்த வருமானமாகவே இருந்தாலும் அது குடும்ப நிலையை நிச்சயம் மேம்படுத்தும். வேலையும் சம்பளமும் தன்னம்பிக்கையை ஊட்டும். வேலை தருகிற நிறைவும் தன்னம்பிக்கையும் வருமானத்தைக் காட்டிலும் உயர்ந்தது.
இல்லத்தரசியைக் காட்டிலும் அதிகமான அளவு கணவனுக்கு விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் வேலை பார்க்கிற பெண். தன்னையும் குழந்தையையும் மட்டுமே பார்த்துக் கொள்கிற பெண்ணின் கணவனை விட அதிகமான அளவில் மனைவிக்கு விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் ஆண். 'அலுவலகத்தில் கணவரோ / மனைவியோ டென்ஷன் மிகுந்த சூழலில் இருந்திருக்கலாம்' என்கிற எண்ணம் இருவருக்கும் எப்போதுமே இருக்க வேண்டும்.
கணவன் - மனைவி இருவரும் அடுத்தவர் முன்னிலையில்.. அது இரு தரப்புப் பெற்றோராகவே இருந்தாலும்.. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கவே கூடாது. வேலை தரும் நிதிச் சுதந்திரத்தில் திமிரும் கர்வமும் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம்.
வேலைக்குச் செல்லும் வீடுகளில் பிரச்னை வருவதற்குக் காரணமே, மனைவியின் வேலைகளை கணவர் பகிர்ந்து கொள்ளாததுதான். நீங்கள் சமையல் செய்தால், அவர் பாத்திரங்கள் கழுவட்டும். நீங்கள் குழந்தையுடன் இருக்கும் நேரத்தில் அவர் வீட்டை சுத்தப்படுத்தட்டும். இப்படி வேலைகளை சமமாகப் பிரித்துக் கொண்டாலே அலுப்புத் தெரியாது.
வேலைக்குப் போவதால் ஏற்படும் சிரமங்களை யோசிக்காமல், அது தரும் தன்னம்பிக்கை, பலன்களை அலசுங்கள். நாளைக்கு உங்கள் மகளும் படித்து பெரிய வேலைக்குப் போய், கை நிறைய சம்பாதித்தால்.. அது உங்களுக்கு எத்தனை சந்தோஷத்தைத் தரும்? அதில், நம் குழந்தைக்கு நாமே முன்னோடியாக இருப்போமே!
-- ஜப்பானிலிருந்து தீபிகா சுபாகர்.
.
வந்திருக்கின்றன :-)
-------------------------------------------------------------------------------------------------
27-3-2009 "அவள் விகடன்"
வீட்டை கவனித்துக் கொள்வதற்காக பெண்கள் வேலையை விடுவதைப் பற்றி இந்த ஆண்டில் விவாதிப்பதே நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது என்பதே என் தாழ்மையான கருத்து! இல்லத்தரசியாக இருந்து ஒரு இக்கட்டான சூழ்நிலையில், மேற்படிப்பு படித்து, இன்று வெளிநாட்டில் பணியாற்றும் பெண் நான். அன்று என் அம்மா, மாமியார் உதவியதால்தான், இன்று என் குழந்தைகள் இருவரும் வளர்ந்து பெரியவர்களாகி நன்றாக இருக்கிறார்கள்.
மனைவி, வீட்டோடு இருந்தால் குழந்தைகளை நன்றாக வளர்க்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், வேலைக்குப் போகும் பெண்ணுக்கு கணவரும் குடும்பமும் உதவியாக இருந்தால், அதை விட நன்றாகவே குழந்தைகளை வளர்க்க முடியும்.
வேலைக்குப் போகும் பெண்களுக்கு என் அனுபவபூர்வமான டிப்ஸ் சிலவற்றை இங்கே தந்திருக்கிறேன்....
'குழந்தைகளை வளர்ப்பதற்காக' என்று உங்கள் அம்மாவையோ மாமியாரையோ கூப்பிடாதீர்கள். அது எத்தனை சுயநலமானது! திருமணமானது முதலே அவர்களில் யாருடனாவது இருக்க முடியும் எனில், அதைச் செய்யுங்கள். அவர்கள் மீது உண்மையான அன்பும் கரிசனையும் காட்டுங்கள். அப்படிப்பட்ட சூழல் உங்கள் குழந்தை வளர்வதற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
பெரியவர்கள் உடன் இருக்க வசதிப்படாவிட்டால், வீட்டில் ஆள் வைத்துப் பார்த்துக் கொள்வதைக் காட்டிலும் காப்பகத்தில் விடுவதே சிறந்தது.
காப்பகத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சின்னச் சின்ன அசௌகரியங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள். குழந்தை அழுதால் பயப்படாதீர்கள். பள்ளிக்கூடம் போவதற்குக்கூட எல்லாக் குழந்தைகளும் அழத்தான் செய்யும். அதற்காக பள்ளிக்கு அனுப்பாமலா இருக்கிறோம்?
''இப்படி பணத்துக்காக ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா?'' என்று நீங்கள் கேட்கலாம். சம்பாதிக்க முடியும் எனில், வேலைக்குச் செல்வதில் தவறொன்றுமில்லை. உங்களுடையது குறைந்த வருமானமாகவே இருந்தாலும் அது குடும்ப நிலையை நிச்சயம் மேம்படுத்தும். வேலையும் சம்பளமும் தன்னம்பிக்கையை ஊட்டும். வேலை தருகிற நிறைவும் தன்னம்பிக்கையும் வருமானத்தைக் காட்டிலும் உயர்ந்தது.
இல்லத்தரசியைக் காட்டிலும் அதிகமான அளவு கணவனுக்கு விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் வேலை பார்க்கிற பெண். தன்னையும் குழந்தையையும் மட்டுமே பார்த்துக் கொள்கிற பெண்ணின் கணவனை விட அதிகமான அளவில் மனைவிக்கு விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் ஆண். 'அலுவலகத்தில் கணவரோ / மனைவியோ டென்ஷன் மிகுந்த சூழலில் இருந்திருக்கலாம்' என்கிற எண்ணம் இருவருக்கும் எப்போதுமே இருக்க வேண்டும்.
கணவன் - மனைவி இருவரும் அடுத்தவர் முன்னிலையில்.. அது இரு தரப்புப் பெற்றோராகவே இருந்தாலும்.. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கவே கூடாது. வேலை தரும் நிதிச் சுதந்திரத்தில் திமிரும் கர்வமும் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம்.
வேலைக்குச் செல்லும் வீடுகளில் பிரச்னை வருவதற்குக் காரணமே, மனைவியின் வேலைகளை கணவர் பகிர்ந்து கொள்ளாததுதான். நீங்கள் சமையல் செய்தால், அவர் பாத்திரங்கள் கழுவட்டும். நீங்கள் குழந்தையுடன் இருக்கும் நேரத்தில் அவர் வீட்டை சுத்தப்படுத்தட்டும். இப்படி வேலைகளை சமமாகப் பிரித்துக் கொண்டாலே அலுப்புத் தெரியாது.
வேலைக்குப் போவதால் ஏற்படும் சிரமங்களை யோசிக்காமல், அது தரும் தன்னம்பிக்கை, பலன்களை அலசுங்கள். நாளைக்கு உங்கள் மகளும் படித்து பெரிய வேலைக்குப் போய், கை நிறைய சம்பாதித்தால்.. அது உங்களுக்கு எத்தனை சந்தோஷத்தைத் தரும்? அதில், நம் குழந்தைக்கு நாமே முன்னோடியாக இருப்போமே!
-- ஜப்பானிலிருந்து தீபிகா சுபாகர்.
.
Mar 12, 2009
(இ)ராபர்ட் கிளைவ் 'சொக்'காரர்கள்!

தமிழ்நாட்டைத் தவிர எல்லா இடங்களிலும் அனேகமாக எல்லாரும் கூடுதலாக ஹிந்தியும் பேசுகிறார்கள். நாம் தான் ராபர்ட் கிளைவ் சொந்தக்காரர்கள் மாதிரி ஆங்கிலத்தை நாடுகிறோம். கழகக் கண்மணிகளால் நமக்கு விளைந்த கேடுகளில் முதலாவது, இது. (தலைப்பு விளக்கம் -"சொக்காரர்கள்" தூத்துக்குடிப் பக்கம் வழக்கில்
உள்ள, சில உறவுமுறைக்காரர்களை மட்டும் குறிக்கும் வார்த்தை. "சொந்தக்காரருக்கும்" "சொக்காரருக்கும்" வித்தியாசத்தை அடுத்தமுறை என் கஸின் தினகரைக் கேட்க வேண்டும்!)
ஆந்திராவில் பல வருஷங்களுக்கு முன் விஜயவாடா அருகில் கெமிக்கல் ரிஃபைனரீஸ் என்ற பெயரில் அரசாங்கம் யாரையோ, எதற்கோ ஏமாற்றிக் கட்டிக்கொண்டிருந்த ஹெவி வாட்டர் ப்ராஜெக்டில் ஒரு வருடம் இருந்தேன். ராஜு என்ற டிரைவரின் அன்பில், எள் என்றால் எண்ணெயாக வரும் அவன் ஆர்வத்தின் புண்ணியத்தில் எனக்கு தெலுங்கு கற்க அவசியமே ஏற்படவில்லை.
ஒரு நாள் விஜயவாடா ரயில்வே ஸ்டேஷனில் நள்ளிரவில் பாதித் தூக்கத்தில் நான் காத்திருக்கையில், என்னைப் போலவே பா.தூக்கத்தில் வந்த ஒருவர் என்னை எழுப்பி ‘நம, நம’ என்று ஏதோ கேட்டார். தூக்கக் கலக்கத்திலும், இது மாதிரி ஆட்களுக்கென்று தெலுங்கில் நான் தெரிந்து வைத்திருந்த ஒரே ஒரு வாக்கியத்தை எடுத்து விட்டேன்: "ஸாரி, தெலுகு ராதண்டி.... "(தெலுங்கு வராது). அவர் சட்டென்று தீயை மிதித்தவர் போல உணர்ந்து, கண்ணில் வியப்பு, அதிர்ச்சி எல்லாம் தெரிந்து "தெலுகு? அரே, ஹம் ஹிந்தி மே பாத் கர் ரஹா ஹை...." என்று அமைதியான அந்த நள்ளிரவிலும் கதறி, having had the shock of his life, பதிலுக்குக் காத்திராமல் ஏதோ முணங்கி விட்டுத் தலை தெறிக்க ஓடிப்போனார். அவர் முணகலுக்குப் பொருள் இப்படித்தான் இருக்க வேண்டும்: “படிச்சவன் மாதிரி இருக்கான்...தெலுங்கு தெரியாது என்கிறான்... ஹிந்தியும் தெரியலை. என்ன தான் தெரியுமோ!!”
சென்னை செண்ட்ரலில் வந்து இறங்கும் போதெல்லாம் ஆட்டோக்காரர்கள் என்னை 'ப்யாரு'டன் வரவேற்பார்கள் ”ஸாப், கஹாங் ஜாயேகே ஸாப்?” கட்டணமாக சொத்தில் பாதியைக் கேட்பார்கள் என்பதால் ஆட்டோவில் ஏறத் துணிவதில்லை. இருந்தும் பின் தொடரும் அந்த ”கஹாங் ஜாயேகே ஸாப்”-ஐ ரசிப்பேன். ஏன் குறிப்பாக என்னைப் பார்த்து அந்த ஹிந்திப் பிரயோகம், பின்னால் கூடவே வரும் தீபிகாவிடம் ஹிந்தியில் கேட்பதில்லை என்று விளக்கினால் தீபிகா கோபித்துக் கொள்வாள்.
சென்னையைத் தாண்டினால் -செண்ட்ரலைத் தாண்டினாலே- சர்வம் தமிழ் மயம் தான். ஆனால் சென்ற வருடம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கூட்டத்தில் நின்றபோது "அர்ச்சனை, அர்ச்சனை பண்றவாள்லாம் முன்னாடி வாங்கோ...."என்று சொல்லிக்கொண்டிருந்த பூசாரி (அல்லது பூசாரி மாதிரி இருந்த) ஒருவர் என்னைப் பார்த்ததும் குரலை மாற்றி, "ஸாப், அந்தர் ஜாயேகே ஸாப்? அந்தர் ஜானா சஹேங்கே?’ அன்று ஆசையாகக் கேட்டார். ”நான் இந்த ஊரு தான்ங்க, எங்கிட்ட தமிழிலேயே பேசலாம்” என்றதும் என்னைத் துறந்து, மற்ற கஸ்டமர்களை நாடிப்போனார்.
மதுரை ஏர்போர்ட்டில் வாசலில் 'கரு, கரு'வென்று -திருநெல்வேலிக்காரர் போல- செக்யூரிட்டி ஆபீஸர் என் டிக்கட்டைப் பார்த்ததும் "சென்னை ஜாயேகே ஸாப்?" என்றார். “ஸார், நான் தூத்துக்குடிக்காரன்; எனக்கு தமிழ் நல்லாவே தெரியும்" என்று நட்பாக சிரித்தேன். அவர் சிரிக்கவில்லை.
நம்பாதவர் மாதிரி நட்பில்லாமல் என்னைப் பார்த்தார். "திருநெல்வேலிக்காரர்கள்! ம்...!" என்று நினைத்துக்கொண்டே உள்ளே சென்றேன். திடீரென்று உள்ளே வந்தவர், என் கைப் பையைக் காட்டி மறுபடியும் ஹிந்தியில் ஏதோ சொல்ல, நான் உஷாராகி "இங்கே பாருங்க, முதல்லே, எனக்குத் தமிழ் தெரியும். இரண்டாவது, எனக்கு ஹிந்தி கொஞ்சம் கூடத் தெரியாது” என்றேன். அந்தத் 'திருநெல்வேலிக்காரர்' என்னிடம் நிதானமாக, பாவப்பட்ட குரலில் கெஞ்சுவது போல் சொன்னார்: "ஸாப், ஹம் மஹாராஷ்டிரா ஸே...ஸாப். முஜே தமில் பில்குல் பதா நஹி..."
ஆந்திராவில் பல வருஷங்களுக்கு முன் விஜயவாடா அருகில் கெமிக்கல் ரிஃபைனரீஸ் என்ற பெயரில் அரசாங்கம் யாரையோ, எதற்கோ ஏமாற்றிக் கட்டிக்கொண்டிருந்த ஹெவி வாட்டர் ப்ராஜெக்டில் ஒரு வருடம் இருந்தேன். ராஜு என்ற டிரைவரின் அன்பில், எள் என்றால் எண்ணெயாக வரும் அவன் ஆர்வத்தின் புண்ணியத்தில் எனக்கு தெலுங்கு கற்க அவசியமே ஏற்படவில்லை.
ஒரு நாள் விஜயவாடா ரயில்வே ஸ்டேஷனில் நள்ளிரவில் பாதித் தூக்கத்தில் நான் காத்திருக்கையில், என்னைப் போலவே பா.தூக்கத்தில் வந்த ஒருவர் என்னை எழுப்பி ‘நம, நம’ என்று ஏதோ கேட்டார். தூக்கக் கலக்கத்திலும், இது மாதிரி ஆட்களுக்கென்று தெலுங்கில் நான் தெரிந்து வைத்திருந்த ஒரே ஒரு வாக்கியத்தை எடுத்து விட்டேன்: "ஸாரி, தெலுகு ராதண்டி.... "(தெலுங்கு வராது). அவர் சட்டென்று தீயை மிதித்தவர் போல உணர்ந்து, கண்ணில் வியப்பு, அதிர்ச்சி எல்லாம் தெரிந்து "தெலுகு? அரே, ஹம் ஹிந்தி மே பாத் கர் ரஹா ஹை...." என்று அமைதியான அந்த நள்ளிரவிலும் கதறி, having had the shock of his life, பதிலுக்குக் காத்திராமல் ஏதோ முணங்கி விட்டுத் தலை தெறிக்க ஓடிப்போனார். அவர் முணகலுக்குப் பொருள் இப்படித்தான் இருக்க வேண்டும்: “படிச்சவன் மாதிரி இருக்கான்...தெலுங்கு தெரியாது என்கிறான்... ஹிந்தியும் தெரியலை. என்ன தான் தெரியுமோ!!”
சென்னை செண்ட்ரலில் வந்து இறங்கும் போதெல்லாம் ஆட்டோக்காரர்கள் என்னை 'ப்யாரு'டன் வரவேற்பார்கள் ”ஸாப், கஹாங் ஜாயேகே ஸாப்?” கட்டணமாக சொத்தில் பாதியைக் கேட்பார்கள் என்பதால் ஆட்டோவில் ஏறத் துணிவதில்லை. இருந்தும் பின் தொடரும் அந்த ”கஹாங் ஜாயேகே ஸாப்”-ஐ ரசிப்பேன். ஏன் குறிப்பாக என்னைப் பார்த்து அந்த ஹிந்திப் பிரயோகம், பின்னால் கூடவே வரும் தீபிகாவிடம் ஹிந்தியில் கேட்பதில்லை என்று விளக்கினால் தீபிகா கோபித்துக் கொள்வாள்.
சென்னையைத் தாண்டினால் -செண்ட்ரலைத் தாண்டினாலே- சர்வம் தமிழ் மயம் தான். ஆனால் சென்ற வருடம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கூட்டத்தில் நின்றபோது "அர்ச்சனை, அர்ச்சனை பண்றவாள்லாம் முன்னாடி வாங்கோ...."என்று சொல்லிக்கொண்டிருந்த பூசாரி (அல்லது பூசாரி மாதிரி இருந்த) ஒருவர் என்னைப் பார்த்ததும் குரலை மாற்றி, "ஸாப், அந்தர் ஜாயேகே ஸாப்? அந்தர் ஜானா சஹேங்கே?’ அன்று ஆசையாகக் கேட்டார். ”நான் இந்த ஊரு தான்ங்க, எங்கிட்ட தமிழிலேயே பேசலாம்” என்றதும் என்னைத் துறந்து, மற்ற கஸ்டமர்களை நாடிப்போனார்.
மதுரை ஏர்போர்ட்டில் வாசலில் 'கரு, கரு'வென்று -திருநெல்வேலிக்காரர் போல- செக்யூரிட்டி ஆபீஸர் என் டிக்கட்டைப் பார்த்ததும் "சென்னை ஜாயேகே ஸாப்?" என்றார். “ஸார், நான் தூத்துக்குடிக்காரன்; எனக்கு தமிழ் நல்லாவே தெரியும்" என்று நட்பாக சிரித்தேன். அவர் சிரிக்கவில்லை.
நம்பாதவர் மாதிரி நட்பில்லாமல் என்னைப் பார்த்தார். "திருநெல்வேலிக்காரர்கள்! ம்...!" என்று நினைத்துக்கொண்டே உள்ளே சென்றேன். திடீரென்று உள்ளே வந்தவர், என் கைப் பையைக் காட்டி மறுபடியும் ஹிந்தியில் ஏதோ சொல்ல, நான் உஷாராகி "இங்கே பாருங்க, முதல்லே, எனக்குத் தமிழ் தெரியும். இரண்டாவது, எனக்கு ஹிந்தி கொஞ்சம் கூடத் தெரியாது” என்றேன். அந்தத் 'திருநெல்வேலிக்காரர்' என்னிடம் நிதானமாக, பாவப்பட்ட குரலில் கெஞ்சுவது போல் சொன்னார்: "ஸாப், ஹம் மஹாராஷ்டிரா ஸே...ஸாப். முஜே தமில் பில்குல் பதா நஹி..."
Mar 8, 2009
Kamaraj -தலைவன் இரு(ந்திரு)க்கிறான்
விருதுநகர் தெப்பக்குளம்; குளத்தைச் சுற்றிலும் கடைவீதிகள். மிகச் சாதாரணமான எளிய இல்லம். அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம்மையார் (காமராஜரின் தாயார்) படுத்திருந்தார். சின்ன இடம். நாலு பக்கத்துச் சுவர்களிலும் தேசபக்தர்களின் படங்கள். அவற்றுக்கிடையே முருகன் படம்.கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட் கார்ந்தார். மூச்சுத் திணறியது. ''வாங்கய்யா'' என்று அன்புடன் அழைத்தபடியே எழுந்து போய் மின்சார விளக்கின் 'ஸ்விச்'சைப் போட்டார்.
''தங்கள் திருமகனைப் பற்றித் தாங்கள் ஏதாவது சொல்லவேண்டும்...''
''நான் என்ன சொல்லப் போகிறேன் ஐயா! எனக்கு வயதாகிவிட்டது. அத்துடன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருசம் உப்பைத் தள்ளிப் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்ந்துக்கொள்கிறேன்.''
''சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா?'' என்று கேட்டபோது அம்மூதாட்டியார் முறுவலித்தார். ''நல்லாச் சொன்னீங்கய்யா... அவன் மந்திரியாகி ஏழெட்டு வருசம் ஆகுது. இதுவரைக்கும் நான் அங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன். போன உடனே என்னை ஊருக்குத் திருப்பிப் பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாயிருப்பான்! 'பட்டணம் பாக்கணும்னா சுத்திப் பாரு. திருப்பதிக்குப் போகணும்னா போயிட்டு வா. எல்லாத் தையும் பார்த்துட்டு உடனே விருதுநகர் போய்ச் சேரு'ம்பான்..!''
''மாசச் செலவுக்கு உங்களுக்குப் பணம் அனுப்புகிறாரா?''
''அனுப்பறான். பொடிக்கடை தனக் கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்...''
''எவ்வளவு பணம் அனுப்பறாரு?''
''120 ரூபாய். பத்துமாய்யா? தண்ணி வரியே பதிமூணு ரூவா கட்டறேன். மாசம் அந்த 120 ரூபாதான், அதுக்கு மேலே செலவு செய்யக்கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும்பான். நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா? ரேசன் வந்துது பாருங்க... அப்ப இங்கே வந்திருந்தான். 'என்னப்பா, இப்படிக் கேப்பையும் கம்பும் போடறாங்களே, இதை எப்படிச் சாப்பிடறது? நெல்லு வாங்கித் தரப்படாதா'ன்னு கேட்டேன். 'நெல்லு பேச்சுப் பேசாதே. ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணானு கேட்டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா..?''
''இப்படியரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான்'' என்றதும், அன்னையின் கண்கள் கலங்கிவிட்டன. ''ஏன் கண் கலங்குகிறீர்கள் அம்மா?''
''கலங்காம என்ன செய்ய? துறவியாகி விட்ட பட்டினத்தாரை அவன் தாய் துறந்துவிட்டதைப்போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காகத் துறந்து விட்டு நிற்கிறேனே!''
---------------------------------------------------------------------------
1961-ல் வெளியான இந்த பேட்டியை விகடன் சமீபத்தில் மறு-வெளியீட்டிருந்தது.
1961-ல் வெளியான இந்த பேட்டியை விகடன் சமீபத்தில் மறு-வெளியீட்டிருந்தது.
இப்படி ஒரு தலைவன் நம்மிடையே, நம் காலத்தில் வாழ்ந்திருக்கிறான்...
Mar 7, 2009
கண்ணைப்பார்; சிரி!
நல்ல கவிதைகளை ‘சட்’டென்று அடையாளம் தெரிந்து விடுகிறது.
(மோசமான கவிதைகளையும் தான்).
"வெள்ளை நரிகள் ஓடி அலையும்
அடர்ந்த காட்டில் தன்னந்தனியே நான்.
இலைகளில் வழியும் சூரிய ஒளியில்
மேகத்தைத் துரத்தும் என் முயற்சிகள்
வீண் போயிருக்கலாம்.
மரங்கொத்திக்குத் தெரியவா போகிறது,
தனக்கு உணவாவது இயற்கை அழிப்பு என்பது?
ஓடையில் மிளிரும் கதிர்கள் என் காதோரம்.
ஆயினும்-தீராது என் துரத்தல்கள்.
மேகங்கள் ஓடுவதை நிறுத்தும் வரை.
எனக்கும் தெரியும்-
விழுந்தால் மாங்காய்; போனால் கல்.
சூரியன் ஒடுங்கும் அந்திக்குள்
என்னை இன்னொருமுறை நிரூபிக்க வேண்டும்".
--சுதீஷிமா--
"கண்ணைப் பார்; சிரி" என்று ஏனோ எங்க ஊரில் திருஷ்டி கழிவதற்காக எழுதியிருப்பதின் ரசனை கூட இல்லாமல் புதுக்கவிதை என்ற பெயரில் வார்த்தைகளை ‘அப்படி, இப்படி’ போட்டு எதையோ எழுதுபவர்களுக்கும், எழுதியபின் "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" என்கிற மாதிரி ‘ஆ, ஊ’ என்று புல்லரிக்கும் ஜால்ராக்களுக்கும் மேற்கண்ட என் 'சொந்த' வரிகள் நக்கல் கலந்த சமர்ப்பணம். என் வார்த்தைக் குவியலைப் படித்ததும் உங்கள் காதில் ‘குறு, குறு’ வென்று நமச்சல் ஏற்பட்டால், உங்களை என் வாரிசாக அறிவிக்கிறேன் :-)
(மோசமான கவிதைகளையும் தான்).
"வெள்ளை நரிகள் ஓடி அலையும்
அடர்ந்த காட்டில் தன்னந்தனியே நான்.
இலைகளில் வழியும் சூரிய ஒளியில்
மேகத்தைத் துரத்தும் என் முயற்சிகள்
வீண் போயிருக்கலாம்.
மரங்கொத்திக்குத் தெரியவா போகிறது,
தனக்கு உணவாவது இயற்கை அழிப்பு என்பது?
ஓடையில் மிளிரும் கதிர்கள் என் காதோரம்.
ஆயினும்-தீராது என் துரத்தல்கள்.
மேகங்கள் ஓடுவதை நிறுத்தும் வரை.
எனக்கும் தெரியும்-
விழுந்தால் மாங்காய்; போனால் கல்.
சூரியன் ஒடுங்கும் அந்திக்குள்
என்னை இன்னொருமுறை நிரூபிக்க வேண்டும்".
--சுதீஷிமா--
"கண்ணைப் பார்; சிரி" என்று ஏனோ எங்க ஊரில் திருஷ்டி கழிவதற்காக எழுதியிருப்பதின் ரசனை கூட இல்லாமல் புதுக்கவிதை என்ற பெயரில் வார்த்தைகளை ‘அப்படி, இப்படி’ போட்டு எதையோ எழுதுபவர்களுக்கும், எழுதியபின் "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" என்கிற மாதிரி ‘ஆ, ஊ’ என்று புல்லரிக்கும் ஜால்ராக்களுக்கும் மேற்கண்ட என் 'சொந்த' வரிகள் நக்கல் கலந்த சமர்ப்பணம். என் வார்த்தைக் குவியலைப் படித்ததும் உங்கள் காதில் ‘குறு, குறு’ வென்று நமச்சல் ஏற்பட்டால், உங்களை என் வாரிசாக அறிவிக்கிறேன் :-)
Mar 3, 2009
Management Guru -'செல்ல' இட்லி!
There was this guy in SPIC Tuticorin, popularly known as "Professor", who once saw me replying "I'm sorry, I don't know" to a question (about a pump's capacity) posed by our Manager at the jobsite; he gave a guesstimated figure which turned out to be wrong. Later during coffee time he said: "Subahar, learn this mantra while at work: One should never say these 3 words: "தெரியாது"(I don't know) "இல்லை" (No, it is not) "முடியாது" (Impossible). Just ask yourself..... Have they employed us to come up with this kind of answers? No! Nobody likes negative responses, even though they know well that the response is only negative. Always make your best attempt, and stay positive..... Never feel sorry for not knowing an answer; the Manager has been in this plant for more than 8 years; he himself doesn't know the answer, got it?”.
Lately I came across another Management Guru who specializes in handling complaints. When a mistake of this person is pointed out, this person employs a 4-pronged strategy:
(1) First, DENY that it is a mistake. The more aggressive your denial is, the easier the opponent goes away convinced, cursing his own ignorance!
(2) (If denial won't work, probably because it is such an obvious mistake), be quick to RECALL A SIMILAR MISTAKE THE OPPONENT DID long ago, and highlight that what you did was nothing serious compared with his!! You've 'enlightened' the opponent, who would go away realizing that it its normal for every human being to make mistakes!
(3) (If you don't recall any of your opponent's past mistakes), be smart to explain that YOU DID THE MISTAKE BECAUSE OF SOMETHING DONE/SAID BY THE OPPONENT! This will make the opponent 'recognize' his role(!) in your mistake, which he has not thought of even in his wild dreams!
(4) (If you can't 'connect' your opponent with your mistake by any means), ADMIT YOUR MISTAKES, and simultaneously JUMP ON THE OPPONENT THAT HE NEVER HAD THE OPEN-MINDEDNESS TO ADMIT his own mistakes, as you do gracefully now! Not only you've made him realize your sudden finding of his being so disgraceful in all these years; he would even be worried of the other 'ghosts in your shelf', that are ready to be unleashed at the drop of a hat!
At the end of a day, either you've made him feel ignorant, enlightened him with life's simple philosophies, showed him there is always the 'other' side to any problem, or made him aware of 'ghosts in your shelf'! Obviously, he would have forgotten about your mistake, in the first place!! Needless to say, I learned the above management strategies from my Management Guru, right inside our home! :-)
மேலே சொன்ன Management strategies பற்றிய ஞானோதயம் ஒரு சனிக்கிழமை காலை தீபிகா இட்லி பரிமாறியபோது வந்தது. ஆசையாக அவள் வைத்த தட்டில் இருந்த இரண்டு இட்லிகளும் கொஞ்சம் கருப்பாக இருந்தன. 'நான் இப்படியொரு இட்லியை இதுவரை பார்த்ததில்லையே' என்று அதிர்ந்து, பிளேட்டில் வைத்த கண்ணை எடுக்க முடியாமல் அதையே உற்றுப் பார்த்து, என் பக்கத்தில் ஒன்றுமே நிகழாதது போல் சாப்பிட்டுக்கொண்டிருந்தவளிடம் கேட்டேன்: ”என்ன, என்ன இது, இட்லி இந்தக் கலரில்...என்ன பண்ணினே?”
என் குரலின் அதிர்ச்சியை மதிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே ரொம்பக் காஷுவலாக "ஓ, அதுவா? அது வந்து, இந்த உளுந்து முழுசாக வந்ததினால, கலர் கொஞ்சம் மாறிப் போச்சு. இதான் ஹெல்த்தி இட்லிங்கிறாங்க. எதையும் கூட்டிக் குறைச்சுப் போடலை நான்...” என்றாள் (strategy 1). எனக்கு இட்லிக்கு உளுந்து தேவைங்கிறது தெரிந்ததே பெரிய விஷயம்; அதில் முழுசா போடனுமா, பாதியா போடணுமா யாருக்குத் தெரியும்? தவிர, ஹெல்த் சமாச்சாரம் என்றாலே அது பார்க்கிறதுக்கு சகிக்கிற மாதிரி இருக்காது.
.
"ஆனாலும் என் சர்வீஸில இப்படிப் பார்த்ததில்லையே...” என்று இழுத்தேன். "ஏன் பார்த்ததில்ல? அன்னைக்கு பிள்ளைகளுக்கு பிரெட் ரோஸ்ட் பண்றேன்னு ரெண்டு ஸ்லைசை முழுசாக் கருப்பா ஆக்கலை, நீங்க?" (strategy 2) என்றாள். "இல்ல செல்லம்; பிரெட் கருப்பானது டைமர் அதிகமா செட் பண்ணிட்டதால. நீயும் அந்த மாதிரி ஏதாவது ஓவர் குக்கிங் பண்ணிட்டியா ராஜாத்தி?" என்றேன். "இந்தா பாருங்க, இந்த நைஸாப் பேசி 'பாயிண்ட்' பிடிக்கிற வேலை தானே வேண்டாங்கிறது? பிரமரா வீட்டில இந்தியா போனபோது நீங்க தானே அவங்களை உளுந்து வாங்கிட்டு வரச் சொன்னீங்க? (strategy 3) அந்த உளுந்தில செய்தது தான் இது...வேணுமின்னா அவங்க கிட்டேயே கேளுங்க.....என்றாள். "மனுஷனுக்கு நம்பிக்கைன்னு ஒண்ணு வேணும்".
என்னடா இது, 'டாபிக்' தடம் மாறுதே, பந்து என் 'ஸைடு'க்கே திரும்பி வந்துவிட்டதே என்று உணர்ந்து, "அன்னைக்கு பிரமரா வீட்டில் சாப்பிட்ட இட்லி மெல்லிசா, மிருதுவா..... அதெல்லாம் விடு; வெள்ளையா இருந்ததே...” என்று சொல்லிக்கொண்டிருந்த போதே தற்செயலாக பிரமராவிடமிருந்தே அவளுக்கு போன் வந்தது. “உளுந்தை அப்படியே போடக்கூடாது...” என்று ஏதோ செய்முறையில் மாற்றம் சொல்ல, இவள் என்னிடம் "ஆமாம்பா... இப்பத்தான் அவங்க சொல்றது புரியுது; நாளைக்கு உங்களுக்கு பூப்போல இட்லி செய்து தர்றேன்...” என்றவள், "இப்ப பாருங்க, நான்கிறதாலே தப்பை ''தப்பு'ன்னு உடனே (!) ஒத்துக்கறேன். நீங்க எப்பவாவது என்கிட்ட ஒத்துக்கிட்டிருக்கீங்களா?" என்று முடித்தாள் (strategy 4), ஒரு வெற்றிக் களிப்புடன்.
"நான் தப்பு செய்தால் தானே, செல்லம், ஒத்துக்கொள்வதற்கு?" என்று சொல்ல நினைத்து, சொல்லாமல் விட்டேன்!
Mar 2, 2009
Puzzle time -the prisoner's 'theory'
Here is a puzzle...a judge awarded a prisoner death sentence, and the prisoner was to be hanged within a week. The judge gave him a concession that he (the prisoner) will not get to know the exact date on which he will be hanged, to keep his stress level under check.
Back in his room, this prisoner was trying to figure out when he could be hanged. First he looked at Saturday, the last day of the week. If he is to be hanged on Saturday, he will be alive on Friday. In other words, if he is alive on Friday, he will be definitely hanged on Saturday, which means he'll come to know his day of hanging. So Saturday cannot be his 'day'.
He looked at Friday next. If he is to be hanged on Friday, he will be alive on Thursday. If he is alive on Thursday, he will definitely be hanged on Friday, as Saturday is already ruled out. In other words, if he is alive on Thursday, he will come to know his day of hanging (will be Friday)! So, Friday can't be the 'day' either.
He applied this strategy to Thursday... and came up with the same answer -that he can't be hanged on Thursday either. The same approach was applicable to all days of the week - and our man 'figured out' that he could not be hanged on any day of the week!
What is wrong here? Or, is there anything wrong in the prisoner's 'theory'??
Back in his room, this prisoner was trying to figure out when he could be hanged. First he looked at Saturday, the last day of the week. If he is to be hanged on Saturday, he will be alive on Friday. In other words, if he is alive on Friday, he will be definitely hanged on Saturday, which means he'll come to know his day of hanging. So Saturday cannot be his 'day'.
He looked at Friday next. If he is to be hanged on Friday, he will be alive on Thursday. If he is alive on Thursday, he will definitely be hanged on Friday, as Saturday is already ruled out. In other words, if he is alive on Thursday, he will come to know his day of hanging (will be Friday)! So, Friday can't be the 'day' either.
He applied this strategy to Thursday... and came up with the same answer -that he can't be hanged on Thursday either. The same approach was applicable to all days of the week - and our man 'figured out' that he could not be hanged on any day of the week!
What is wrong here? Or, is there anything wrong in the prisoner's 'theory'??
Subscribe to:
Posts (Atom)