Sep 15, 2009

கிண்டி-25: வெங்கட்ரமணி

கிண்டி-25 சந்திப்புக்கு நான் போகாவிட்டாலும் பல நண்பர்களுடன் திரும்பவும் ‘touch' கிடைத்தது. வெங்கட்ரமணியும் அதில் ஒருவன். 25 வருஷத்திற்கு அப்புறம் அவனுடன் contact...

ரமணியைப் பற்றி கிண்டி குரூப்பில் நான் எழுதியது:

Venkatramani. A very nice guy from Erode -who had never been to a cinema thaeter in Chennai in all those years when he was in the hostel. In 3rd block we used to pull our cots to the balcony at nights to sleep 'outdoor'. At morning 6, I would be awake on hearing a 'ding-ding-ding' noise; V.Ramani, in his clean white dhoti, would be chanting some mantras and doing "Santhia vanthanam" , (the noise was what he would make when 'ding-dinging' the spoon inside a tumbler half-filled with water). Unmindful of my weird look, he would patiently explain me about it. ’குண்டலினி சக்தி’ என்றெல்லாம் எங்களுக்கு ‘விவகாரமான’ விஷயங்களைப் பேசும் இரண்டு ஆள்களில் இவன் ஒருவன். (இன்னொருவன் ’கும்பகோணம்’ கணேசன்). ரொம்ப சாந்தமானவன். நான் குமுதத்தைத் தாண்டாத காலங்களில் எனக்கு கல்கி மற்றும் வந்தியத்தேவனை அறிமுகம் செய்தவன் இவனே.

He was one of the 2 guys that I've seen in Guindy who cried uncontrollably after having done poorly at the semester exam! 2nd year 2nd semester we all had a tough paper; when I returned to the hostel, I found V.Ramani sobbing and blaming himself for being such an irresponsible guy(!), and for being ungrateful to his uncle who financed his studies (his father was no more). When I told him that going by the efforts he took, he would probably not fail, V.Ramani wouldn't agree. He started crying more saying he had raised high such hopes about him in his friends! Sensing it was an 'opportunity', I invited him for a bet -if he would pass, he should go with me to watch a movie. Though he wwasn't in a mind for any kind of bet then, I made him agree for that bet finally.

The results came and alas! V.Ramani passed!! I got more excited than him! Being a soft-spoken guy, he was begging .... begging me to reconsider the bet. But little did he know then that Subahar could be ruthless at times! :-) I took him to Devi complex for "Nenjaththaik kiLLaathE" (Mahendran's; Suhashini's debut). That was the one & only movie VRamani watched in all those 5 years. I knew that soon after 1984 he moved to Bombay, where his elder brother was working (in Godrej?). It is only a surprise that VRamani had chosen 'business' as his profession....

சில நாட்கள் முன் வெங்கட்ரமணி அவன் பையன் விஷ்ணுவர்த்தனின் இசைக் கச்சேரி பற்றி You Tube-ல் ஏற்றியிருந்த பதிவை அனுப்பினான். ஹிந்துஸ்தானி இசையில் a,b,c,d கூடத் தெரியாவிட்டாலும் எனக்கு விஷ்ணுவர்த்தனின் பாடல் ரசிக்கும்படி இருப்பது அவன் VRamani Jr என்பதால் மட்டுமல்ல. கேளுங்கள்:
http://www.youtube.com/watch?v=V0jEahGrZco

.

Sep 6, 2009

Welcome (back) to Florida!

(Posting by Dee)
As we landed at Los Angeles after a long flight from Osaka, custom-cleared my check-in bags and I took them to United Airlines -which refused to take them though I'd routed my bags up to Orlando. "We won't accept bags if the transit time exceeds 12 hours; you go to Asiana airlines (Osaka-LA carrier)". Asiana's counter remained closed. Luckily Selva's mini-van had enough space to carry my 6 check-in bags (and 3 hand-carrys).

Reached home at 8 pm by taxi from Orlando airport. Wanted to get something to eat... my car wouldn't start. (Battery had 'slept' for 75 days; we talked about carrying a jump-start cable from Japan, but forgot it in the last minute). Called Lokesh, he was not in town. Namrata would not understand what I was talking about! Seshu suggested to call AAA -which accepted me as a member by phone (@US$ 62/yr) and sent a person.

Made udon noodles for children, and drove to Winn Dixie to buy some groceries. Came back home only to see that I left behind one bag in the shop. Drove again and brought it back.

The AAA staff called me to confirm my address; she said my membership card will be valid up to Oct-16, 2010. "Nope! I don't need it beyond 2010 June, by then I should have moved back to Japan!"

Aug 14, 2009

Obara -the Japanese village









.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Visiting a Japanese friend's family in their village, having a BBQ lunch, taking a hot spring bath, spending the night in their village home ... and proceeding, the next day, to Yubara, one of the Best Hot springs in Japan kept us busy in this year's O-bon holidays when my mom was with us here in Japan.
The rest in Madhu's & Shibu's words...
Madhu: Long time, no see! Yesterday my whole family took our Grandma and went to see Chiho’s family at their grandparents’ farm in Okayama. It was really wonderful to see our friends after such a long time! All of us had grown up and it was really different, but in a way also the same. We did the same things that we did so many years ago, fish lobster, watch The Book House, go to onsens, and it still felt like a new experience! Mr. and Mrs. Sugiyama treated us like we were family, and they had even put up our picture from four years ago in a frame! The experience was like re-uniting with family, actually. We had barbeque, evening tea, and onigiris! All of us slept heavenly, in the tatami rooms they had provided so generously.

The next day we all had breakfast together, watched the koi , packed all our luggage, took pictures, dragging the farewell as long as we could. It was too sad to say goodbye, it felt like we had just arrived and already we needed to go. All the while, something, everything was familiar, and it wasn’t until we had come home that I realized what it was like. There isn’t a single word to describe it, but you know when you visit your relatives in a different country, and when you have to leave, it feels all too sudden and too soon? Meeting old friends and staying with them is like being with family. You all do everything together, you all clean up after one another, and you all grow up with each other. The sorrow of leaving was so great, even the skies felt our sadness and cried. It was a rainy morning, but the thought of meeting Kozue-san, Chiho, Shu, Takashi-san, and their grandparents again next year was enough to lighten our day up by the afternoon.

Shibu: Don’t we all have times where we feel like traveling to a different world that’s completely isolated from our everyday hassles and encumbrances? Little children fantasize about going to outer space, while many adults working in municipal parts of the world dream about relaxing in Hawaii. Fortunately, I was once again embraced with the opportunity of being captivated by another part of Japan that I believe all foreigners should put on their to-do list. I am referring to the mountain-side villages of Obara, and Yubara, which are both in the Okayama prefecture of Japan.
It is a known fact that Japan is a well-developed and technologically advanced nation that never ceases to amaze the world with its electronics. Many Westerners immediately perceive Japan as a city-dominated island, where endless bullet trains and subways are ubiquitous. What they might not realize is that 70 percent of Japan consists of mountains. I believe that is the “real” Japan.

We are very good friends with a Japanese engineer, Takeshi-san, and his family. Takeshi-san’s parents live in a mountain-side village called Obara. My family and I have been there twice before, and had the great opportunity to go there once more last Wednesday. It was just splendid to enjoy the air outside, which was a temporary cessation to the busy factory atmosphere that permeates the Takasago air. We had a nice barbeque outdoors, and ate till we could eat no more. I also had an interesting time attempting to catch lobsters at a nearby pond, with Takeshi-san’s children, Chi-ho and Shuu. At night we went to a local hot spring, which is a must in Japan as well. We stayed over their house for the night, and by the morning, the family and our family had already established many fond memories within the span of barely one day. As we left that morning, Takeshi-san’s wife, Kosue-san, had engaged in a tear-fest!

After we said our heartfelt (temporary) goodbyes to Takeshi-san’s family, we went on our way to Yubara, another town near along the mountains. This town is famous for its open-air Hot Springs, where one bathe immediately cleanses out your body and soul simultaneously. The Hot Springs are unique as they are completely outdoors, while it is also right besides the road! As my mom and dad bathed in Yubara for a long time, Madhu, my grandmother, and I took a stroll along the small roads of Yubara. After my parents returned, we went to Hiruzen, a town famous for breeding cows. We had a hearty lunch at a restaurant there, while we stopped by a nearby “Michi-no-eki” ( “street market”?) to take a rest before resuming our journey back home.

Well, if you think that was a captivating and mind-blowing trip, you better get over here pretty fast. It’s about time you lose yourself in the “real” Japan.
-------------------------------------------------------------------------------------------------------------------------------

Aug 9, 2009

25

'கல்லூரி முடிந்த 25-ஆம் ஆண்டு’ சந்திப்பில் கலந்துகொள்ள முடியாமல் சென்று வந்தவர்களின் ஈ-மெயிலையும் புகைப்படங்களையும் மட்டுமே பார்த்தேன். மிகச்சிலரைத் தவிர பலரை எனக்கு அடையாளம் காணமுடியவில்லை. அர்த்தராத்திரியில் ஜியாவைப் பிடித்து, அது யார், இது யார், என்று கேட்டு, இவனா அவன்? என்றெல்லாம் வியந்து.... (2 வாரம் அப்புறம் மீண்டும் ஃபோட்டோக்களைப் பார்த்தபோது பல முகங்கள் ‘தடுமாறின’.) ‘சட்’டென்று தெரிந்த முகங்கள் பற்றி மட்டும்...

25-ல் கொஞசமும் மாறாமல் இருப்பது சரவணன் மட்டுமே. தலைவா! என்றவுடன் கண்ணில் தெரியும் ஒரு மகிழ்வு, ஒரு நிதானம், ஒரு பெருந்தன்மையான ஆமோதிப்பு, கொஞ்சம் குறும்பு எல்லாமே இன்னமும் அப்படியே. கொஞ்சம் சீரியஸான ஃபோட்டோக்களில் மட்டும் தெரியும் நெர்வஸான முகம்.. (தலைவர் ஹாஸ்டல் தினங்களில் ஒருமுறை ஒரு சரியான டீமுடன் ஸாக்கர் விளையாடியபோது ஸேம் ஸைடு கோல் போட்டதற்காக அவரை எல்லோரும் ‘ஓட்டிய’போது பார்த்த அதே நெர்வஸ் முகம்!). பக்கத்தில் மணிவண்ணன் அதே புன்னகையுடன். இரண்டு வருஷம் எனக்கு ரூம்மேட்டாக இருந்து ‘வராமல் வந்த தேவதை’ போல் நண்பனாக வந்தவன். (பின்னாளில் பேச்சலராக 5 பேர் அஷோக் நகர் அபார்ட்மெண்ட்டில் தங்கியிருந்த காலத்தில் கூட இருந்தவனின் தங்கையையே திருமணம் செய்த இரண்டு பேர்களில் ஒருவன்; இன்னொருவன் அடியேன்). ஜியா -ஜெண்டில்மேனாக (தோற்றத்தில்) மாறிவிட்டான். மனைவி மும்தாஜையும் ட்வின் மகள்களையும் புகைப்படத்தில் பார்த்து, ஜியாவை தாடியுடன் பின் லாடன் தோற்றத்தில் தேடினேன் (ஏமாந்தேன்)! ஜி.மோகனை நிச்சயம் தெரியவில்லை. உதயகுமார் அதே சின்ன முகத்துடன்..! (கொஞ்சம் ‘நாயகன்’ வேலுநாயக்கர் ஜாடை தெரியுது, நண்பா.அப்புறம் உன் பையன் பெயர்தான் என் பையன் பெயரும்). சாம்ஸன் ரவீந்திரன் -அன்றக்குப் பார்ட்டியில் பட்டையைக் கிளப்பிய டிரெஸ் உங்களுடையதுதான், முதல்வரே! அதிலும் அந்த மஞ்சள் ரோஜா... எனக்கு ’பூவே பூச்சூடவா’ நதியா நினவுக்கு வந்தாள்

AJBயை சமீபத்திலதான் பார்த்திருந்ததால் மாற்றம் தெரியவில்லை. சொல்லப்போனால் கிண்டி காலத்திற்குப் பின் மாறாத முக லிஸ்டில் AJBயும் உண்டு. பக்கத்தில் யார்?.... அட, நம்ம அருள்காந்தி! கடைசி வருஷம் எனக்கு ரெண்டு ரூம் தள்ளி இருந்தவன்...லியா, வெங்கடேசப் பிரசாத் இருவருக்கும் கம்ப்யூட்டரில் ’25 வருஷத்திற்கு அப்புறம்’ என்று எக்ஸ்ட்ராப்பொலேட் செய்த முகம். சுபாராணி..? First Block அருகே அவ்வப்போது துள்ளலுடன் கண்ணில் படும் சுபாராணி இது இல்லையே என்று நினைத்தேன் -தினமலரில் ஃபோட்டோ பார்க்கும் வரை :-)! கோகிலாவை யூகிக்க முடிந்தது, சிலவருஷம் முன்புதான் ஸான் ஹோஸேயில் பகல் வீட்டில் சந்தித்ததால். ’சட்’டென்று தெரிந்த ஒரே பெண் பாலா தான். பாலாவுக்குப் பின்னால்.... Mech ல் ’ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணா’க இருந்த சுகந்தகுமாரி. கடைசியாக மாணிக்ஸின் கல்யாணத்தில் (1990?) பார்த்ததாக ஞாபகம். 5 வருஷமும் படு சீரியஸ்.... என் project-mate. சிரிக்கும் சுகந்தகுமாரியை இப்போதுதான் புகைப்படத்தில் பார்க்கிறேன்... சாம்ஸன் நல்லதம்பியும் மாறவில்லை. (ஒருமுறை துபாயில் வேல்முருகனுடன் உன்னைப்பார்த்தேனா?). ஸ்ரீதர் விழுந்தவுடன் மூன்றாம் மாடியிலிருந்து இவன் குதித்த -அந்த impulsive & instinctive moment -கிண்டி வாழ்க்கையின் ஒரு மறக்க முடியாத நிமிஷம்.

பகலவன் -சில வருஷம் முன்புதான் பார்த்திருந்தேன்! கொஞ்ச நாள் முன் இவன் திரிஷாவுடன் எடுத்த ஃபோட்டோவைக் கேட்டபோது, சூர்யாவுடன் இருக்கும் படத்தை அனுப்பினான். ”நிழல்கள் நட்சத்திரங்களோடு இருந்தாலும், நிஜங்கள் என்னவோ ஸான் ஹோஸேயில் தான்” என்று புதுக்கவிதை இல்லாமல்! அது என்னடா, அந்த காலத்திலே நீ ஓவியராகவும் இருந்திருக்கே...? பூர்ணிமாவை நீ வரைஞ்சிருக்கிற சிரத்தையைப் பார்த்தால்... பாக்யராஜ் தான் உன் முதல் எதிரி போல! :-)ராஜேஸ்வர் -ஆனாலும் நீ கிண்டி மீட்-டிற்கு ரெண்டு நாள் முன் தான் (என் மனைவி) தீபிகாவை ரத்னகுமார் வீட்டு விழாவில் பார்த்து, ‘நீங்க யார்? தெரியலையே..” என்று சொல்லியிருக்க வேண்டாம்! ”உங்க பசங்களுக்கு கொஞ்சம் ஞாபக மறதி ஜாஸ்திதான்...பாருங்களேன், 3 வருஷம் முன் தான் அவர் வீட்டிற்குப் போயிருக்கோம்; நான் 2004 ’கிண்டி மீட்’டிற்கு வேற போயிருக்கேன்.. இருந்தும் முழிக்கிறாரு! வயசானாலே மறதி வந்திடும்கிறது நிஜம் தான் போலும்” என்கிறாள், என்னிடம்! (’வயசு’ பற்றி கமெண்ட் வந்தால் நான் ரொம்ப alert ஆகிடுவேன், மச்சி!)

அறவாளி -பாதி முகத்திலும் அடையாளம் தெரியுது, வாத்யாரே! பப்பி கொஞ்சம் மெலிந்திருக்கிறான். பப்பி பின்னால் ’ஆத்து’ என்று ‘ஆசையாக’ அழைக்கப்பட்ட ஆத்மலிங்கம். அடுத்து படிப்பாளி ரவீந்திரன். (ஹாஸ்டலில் சினிமா, டி.வி, அடையாறு என்று சுற்றித்திரியும் போது இவ’ரை’ப் பார்த்தால் ’பயமா’க இருக்கும்! “என்னடா, எப்பவும் படிச்சிக்கிட்டிருக்கா’ர்’...”). சம்பத்குமார் -அநேகமா நம்ம செட்ல ‘காதல் வைரஸ்’ தாக்கிய முதல் ஆள் இவனாகத்தான் இருக்கும். ஏனோ அப்பவே இவனுக்கு ஜெண்டில்மேன் பெர்ஸனாலிட்டி இருந்தது. (2000ல் சந்தித்தபோது, இவனும் இவன் மனைவியும் DGM). அடுத்து பாலகுமார். ’ஆளவந்தான்’ “நந்தகுமாரா.... நந்தகுமாரா... ” பாடல் ஸ்டைலில்: “பாலகுமாரா.... பாலகுமரா.... 25 வருஷம் அப்புறமும் எங்களை ‘ஆ’ன்னு பார்க்க வச்சியேடா...” 50-ம் வருஷ meet வெச்சாலும், சென்னப்பன் எழுதிய மாதிரி, ’கடலை’ விஷயத்தில் நாங்க உன்னைப்பார்த்து கமெண்ட் அடிக்கிறதோட சரி!

தாமஸ் -லியோ கிளப்பில் தீவிரமாகி, “ஹாய்” என்றாலே “கொஞ்சம் GH வரை வர முடியுமா..? Blood donation..." என்பான். அதனாலேயே ‘பாசமாக’ டிராகுலா என்று பெயர் வாங்கினான்.அண்ணாமலை... அதே ‘நாட்டாமை’ பார்வை! பக்கத்தில் கும்பகோணம் கணேசன்.... இரண்டு (அல்லது மூன்று) கணேசன்கள் இருந்ததால் குழப்பம் தவிர்க்க இவன் மட்டும் ஊர் பெயருடன் சேர்த்து அழைக்கப்பட்டான். ’குண்டலினி சக்தி’ என்றெல்லாம் எங்களுக்கு ‘விவகாரமான’ விஷயங்களைப் பேசும் இரண்டு ஆள்களில் இவன் ஒருவன். (இன்னொருவன் வெங்கடரமணி). ரொம்ப சாந்தமானவன். நானும் பொன்ராஜும் சனிக்கிழமை காலைகளில் சுஜாதாவின் கொலையுதிர் காலத்திற்காக குமுதத்திற்கு ஆலாய்ப் பறக்கையில், இவன் “கல்கி, வந்தியத்தேவன்’ என்றெல்லாம் பேசியிருக்கிறான். பக்கத்தில் பத்மநாபன்... 2nd block கில் ரூம் 26ல் பார்த்ததிற்கு அப்புறம் இப்பத்தான் பார்ப்பதாக ஞாபகம்...ஸ்ரீதர் -’சுனாமி’ ஸ்ரீதர் -1169, மாறவேயில்லை. ஜப்பானுக்கு ஒருமுறை வந்து எனக்கு ஃபோன் கூடப் பேசவில்லை; நேரில் பார்க்கும்போது ’பிடி,பிடி’ன்னு பிடிக்கணும்!

செந்தில் அரசு முகமும் அச்சுமாதிரி அப்படியே. பின்வரிசையில் குஜிலி (நாகராஜன்) முகம் கொஞ்சம் ’தடுமாறி’, GS என்று நினைத்திருந்தேன்! அடுத்து நிற்கும் காத்தவராயனைத் தெரியவில்லையென்றால் உதைப்பான் -’எங்க ஊர் மக்கா’வாச்சே! பொக்கல் முருகானந்தமும் மாறவில்லை. அடுத்து GS...1170. என்னைக் கேட்டால் IIT professor ஆகும் -Operations Research ல் text book எழுதும்- அத்தனை விஷயங்களும் GSஸிடம் 1984லேயே இருந்தன. எனக்கும் ’சௌபா’வுக்கும் project-mate; அதனாலேயே இயல்பாகவே இவனுக்கு இருந்த பொறுமை இன்னும் ஒருபடி அதிகமாயிருக்க வேண்டும்! திருமாறன் -உன் எழுத்தின் ஸ்டைல் மட்டுமல்ல, உன் முகமும் மாறவில்லை, மச்சி! அடுத்தமுறை சென்னை வரும்போது உன்னை அமிஞ்சிக்கரையில் பிடிக்கவேண்டும். அடுத்து அத்லெட் ரவியும் அப்படியே. முன்னொரு காலத்தில் திருவொற்றியூரில் KCP என்ற கம்பெனிக்கருகே சந்தித்ததாக ஞாபகம். எலெச்ட்ரிகல் ‘விச்சு’- என்ன மாறுவேஷத்தில் வந்தாலும் உன் முகம் காட்டிக்கொடுத்துவிடுகிறது, நண்பா! பக்கத்தில் Production ரவி என்று ஞாபகம். நானும் இவனும் ஒரு 6 மாதகாலம் ‘கராத்தே மணி’யிடம் budokai class க்குப் போயிருக்கிறோம். ரகுவை சில வருஷம் முந்தான் ஹைதராபாதில் பார்த்திருந்தேன். (ஐஸ்வர்யா என்று girl babyக்குப் பேர் வைப்பார்கள்; தெரியும்; சூஷ்மிதா? ரகுவின் பெண் பெயர் அதுவே). அதென்னவோ தெரியவில்லை.... வாழ்க்கையின் இக்கட்டான சமயங்களில் ரகு உதவியிருக்கிறான். சூரி -சில வருஷம் முன்தான் ஆர்லண்டோவில் பார்த்திருந்தேன். இவன் எனக்குத் தந்த ’திருக்குறள் -எளிய உரை” அவ்வப்போது நுனிப்புல் மேய்வேன். 25 வருஷத்தில் ’சுத்தமாக’ மாறிவிட்ட முகங்களில் இவனதும் ஒன்று. சிவக்கொழுந்து -அன்றும் இன்றும் அதே அர்ஜுன் முகம்!

L.Sundar அந்தக் காலத்திலேயே photograhpyயில் தீவிரமாக இருந்தான். AK-47 மாதிரி காமிராவை ஒருமுறை எடுத்து வந்த போது நான் ஆர்வக்கோளாறினால் ‘விலை என்ன?’ என்று கேட்க, “சுமார் 20,000 ரூபாய்’ என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்தான்! ’தாமரைக் கண்ணன்-செந்தாமரைக்கண்ணன்’ எப்பவும் எனக்குக் குழப்பம் -25 வருஷம் ஆகியும் இன்னும் தீரவில்லை! ரத்னகுமார் -சிங்கப்பூரில் இருப்பதால் இவன் வீடு எங்களுக்கு transit stopover மாதிரி ஆகிவிட்டது. போனவருஷம் போல் இன்னொருமுறை ஜப்பானுக்கு குடும்பத்துடன் வந்து எங்களுடன் ஒரு 2-வாரம் ’டேரா’ போடு, மச்சி! காமராஜ் -’பட்டி வீரன் பட்டி’ நாயகனின் அதே சிரிப்பு! 1992-ல் நெய்வேலியில் சந்தித்தது. 1983-ல் ஹாஸ்டலில் எடுத்த ஃபோட்டோ ஒன்றில் மக்களுடன் சேர்ந்து ஒரு ஜோடிக் ’கால்கள்’ மட்டும் தெரிய, 25-வருஷம் அப்புறம் அந்த ஃபோட்டோவைப் பார்த்த பலரும் அந்தக் கால்கள் காமராஜின் கால்கள் என்று சந்தேகத்துக்கிடமின்றிச் சொன்னார்கள்! 1175 சுரேஷ்குமாரை அடையாளம் தெரிவதில் கஷ்டமில்லை. வெங்கியை இன்னொரு ஃபோட்டோவில் பார்த்தபோதும் தெரியவில்லை -5 வருஷம் முன் நியூஜெர்ஸியில் பார்த்திருந்தபோதும். தீபிகாதான் வெங்கியின் பெண்ணைப் பார்த்து தெரிந்து ‘அட, ரோகினி” என்றாள். நியூயார்க்கில் எங்கள் மற்றும் பொன்ராஜ் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு நாள் sightseeing வந்த சின்னஞ்சிறுமியா இது?

சத்தியமாக அடையாளம் தெரியாத முகம் சுப்பையாவுடையது. 1172. கல்லூரி காலங்களில் நெருக்கமாக இருந்து அதற்கப்புறம் தொடர்பில்லாத நண்பர்களில் ஒருவன். “ஏன் வரவில்லை?” என்று பெங்களூரில் இருந்து மெயில் போட்டிருந்தான். வெற்றி மற்றும் செந்திலை 1-2 வருஷத்திற்கு முன்தான் சந்தித்திருந்தேன். வெற்றியின் trade-mark வெடிச்சிரிப்பு ஃபோட்டோவிலும் தெரிகிறது. செந்திலை சேலத்தில் சந்தித்தபின் தீபிகா மறக்கவேயில்லை - கிண்டி நண்பர்கள் பற்றி அவன் கமெண்ட்டிற்காக: (”நம்ம பசங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பெண்களுக்கெல்லாம் நல்ல luck மச்சி... சரியான புளியங்கொம்பா பிடிச்சிட்டாங்க...”)

கென்யா ராஜேந்திரன் தெரிகிறான். சஞ்சீவி தெரிகிறான். சென்னப்பன், கலை, சிவஷங்கர், விஜய்பாபு, சௌபா, பொன்னுசாமி, சாய்சுந்தர்... மற்றும் Domkundwar என்றே பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த முரளீதர்...

நான் மிஸ் பண்ணியது துரதிருஷ்டமே.

சுபாராணி “let's have this kind of get togethers often" என்று எழுதியது ஒரு initial euphoria மட்டுமில்லாமல் அடுத்த get-together விரைவிலேயே நடக்க வேண்டும்; அதில் கலந்துகொள்ள வேண்டும்.

Jun 12, 2009

டோக்யோவில் ‘சிவகாசி’


சென்ற வாரம் ’ஆபீஸ் விஷயமாக’ டோக்கியோ போய் வந்ததில்:

  • Shinkansen-ல் (bullet train) ஜன்னலை மூடி விட்டு தூங்கிக்கொண்டிருந்தபோது “ய்ய்ய்யா....” என்ற ஜப்பானியக் குரல் கேட்டு விழித்து, ஏதோ தோன்ற ஜன்னலைத் திறந்து வெளியில் பார்த்தேன் -Mt.Fuji யின் அபாரமான காட்சி! (இத்தனை வருஷங்கள் புல்லட் டிரெய்னில் போகும்போதும் mt.Fuji தோன்றும் நேரம் கேட்டுத் தெரிந்து, ஜன்னல் அருகே கழுத்து வலிக்க கையில் காமெராவுடன் எட்டிப்பார்த்தும் எப்போதும் கரு மேகமும் மழையும் தான் தெரிந்ததே தவிர, Mt.Fuji கண்ணில் பட்டதே இல்லை). இந்தமுறை சட்டென்று கண்முன் விரிந்த Mt.Fuji அதட்டலான தோற்றத்துடன், அதற்கே உரிய தனி அழகுடன் இருந்தது. மலை உச்சியில் மட்டும் பனி மூடி, கார்டுகளிலும் ஃபோட்டோக்களிலும் தெரிவது போல் அச்சாக அதே கம்பீரத்துடன் நின்று, மிக அருகில் தெரிகிறது. (Murphy Law வின் படி, இந்தமுறை நான் காமெரா எடுத்து வரவில்லை; மேலே புகைப்படம் ’நெட்’டில் சுட்டது). இந்த ஆகஸ்டில் எப்படியும் Mt.Fuji யில் hike போய்விட வேண்டும்.

  • அலுவலக வேலை முடிந்து, பிரபாக்கா அத்தானை ஷின் யோகோஹாமா ஸ்டேஷனில் சுமார் 18 வருஷங்களுக்கு அப்புறம் சந்தித்தேன். கையசைத்தவாறே அவரைப் பார்க்கையில் “இப்பத்தான் சிவகாசி ஆளப் பார்த்த மாதிரி இருக்குது...” என்றார். (இவ்வளவுக்கும் நான் ஃபுல் சூட்டில் இருந்தேன் -ஆபீஸ் டூர் என்பதால்!). என்னடா இது, தமிழ் நாட்டிலேயே ஏர்போர்ட்டிலேயும் ரயில்வே ஸ்டேஷனிலும் நம்மிடம் தமிழில் பேசாமல் ஹிந்தியில் பேசறாங்க; இதென்ன “டோக்யோவில் சிவகாசி?” என்று நினைத்து “என்ன அத்தான், நான் மீசையைக் கூட எடுத்து இருக்கேன்.... ” என்றேன். “அதில்லை; உன் கையில் இருந்த தங்க மோதிரம் பளிச் சென்று கண்ணில் பட்டது” என்றார்! (நல்லவேளை, கழுத்தில் இருந்த தங்க செயின் படவில்லை!).


  • Swine Flu சீசனாகையால் என்கூட வந்த என் பாஸும் இன்னொரு கலீகும் (அவரும் ஜப்பானியரே) mask அணிந்து வந்திருந்தனர். நாங்கள் இருக்கும் ஓஸகா பக்கம் பல Flu கேஸ்கள் தெரிந்து, பள்ளிகள் மூடி, எங்கள் ஆபீஸில் அங்கங்கே hand-sanitizer வைத்து, மெயின் கேட் பக்கம் காரில் வருவோருக்கெல்லாம் வாய்க்குள் தெர்மாமீட்டர் சொருகி காய்ச்சல் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். டோக்கியோ பக்கம் Flu கேஸ் ஒன்றும் இல்லை என்பதால் அவ்வளவு கெடுபிடி இல்லை என்று நியூஸ் பேப்பரில் படித்திருந்தேன். இவர்களுகுத் தெரிந்திருக்கவில்லை போலும். டோக்கியோ வீதிகளிலும் ’முகமூடி’கள நான் பார்க்கவில்லை. “நியூஸ் பேப்பரில் அப்படிப் போட்டிருந்ததே... பின்னே ஏன் maask?” என்று எனக்குத் தெரிந்த வெளி உலக அறிவை அவர்களுக்கு எடுத்துக்காட்டினேன். என் பாஸின் பதில் அசர வைத்தது: “டோக்கியோ நமக்கு safe தான். ஆனால் நாம் ஓஸாகாவிலிருந்து வருகிறதால் நம்மிடமிருந்து flu அவர்களுக்குப் பரவிவிடுமோ என்ற anxiety இங்கே டோக்கியோவில் நாம் வந்திருக்கும் ஆபீஸில் இருக்கும் பலருக்கும் இருக்கும். அவர்கள் anxiety ஐக் குறைக்கவே இந்த mask".

    ஜப்பானியர்கள் பனைமரத்தடியில் நின்று பால் குடிக்க நேர்ந்தால் என்ன செய்வார்கள் என்று நினைத்தேன்....

Jun 11, 2009

Kenosis

KENOSIS in Greek means "self-emptying" -said the pamphlet. Like "Art of Living", the title KENOSIS thus attracted me, when I came to know of a lecture by Acharya Brahamrishi Kirit Bhaiji ((I'm trying to figure out what his real -'first'- name is, among these 4 words) in Kobe, arranged by a group of Indians in Kobe. The Guru is widely known for his KENOSIS programs-aimed at "emptying the Mind"- which regularly come in Zee TV, as I was told.

When I arrived at the ISS hall at Kobe at 1:50 pm for the 2:00pm program, the hall was 'empty' (symbolically?) with just one Non-SouthIndian lady munching her lunch. In the small hall to accommodate 80-100 people, I saw mats laid on the floor, reminding me that there might be practical meditation sessions as well. The program started at 2:40 when one by one gradually assembled. I chose an aisle seat in the last row, to be able to whisk myself away in case the lecture is in Hindi (or any Indian language other than Tamil).

The guru spoke in excellent English (I learned later that he was a CA by profession, educated in UK). The first part of the program was a speech by him on the topic *Key to Success", which was interesting and appealing as he was emphasizing on -among others- 'burning desire' 'winning edge' and 'perseverence' etc. Sounded more like an inspiring Management Guru or an experienced & successful business personality. Finished his speech with a punch-line statement "Don't count the days, make your days count". I liked his speech, though at times I was worried if I will get my mind filled with more worries rather than getting it emptied. Part of the reason could be that other then being a sole non-Hindi speaking guy, I was also the sole non-Businessman, a salaried-man in the crowd !

The second part had meditation practices involving breathing techniques. With all my questions regarding the health benefits of breathing techniques remaining unanswered, I did follow what was said, and did meditate for more than an hour. At the end of the meditation session, many expressed 'feeling great' with one person saying that she could see blueish things when she was practising. The guru said it was just a beginning, that she was on the right track, and that she would see 'everything white' as she progresses. I didn't see or feel anything except that when I closed my eyes, I had a tough time trying to keep myself awake! I'm not sure if the health benefits of meditation have been verified and certified by authentic sources, though meditation might have a profound psychological impact (placebo effect?) on the individuals who religiously practice it.

[A little 'googling' tells me that Kenosis is a Greek term associated with theology, widely quoted in Christianity, and there is also an institute based at Arizona, USA focussing on meditation -I believe this Bhaiji has no links with any of them].

Jun 9, 2009

Welcome back, வேதாளம்!



தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் தோளில் சுமந்த வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிச் சொன்ன கதைகளில் (35-வருடத்திற்கு முன் ‘அம்புலிமாமா’வில் படித்தது) என் மனதில் தங்கி விட்ட கதை:


கடும் தவமிருந்து விஷேச வரம் பெற்ற மூன்று இளைஞர்கள் காட்டுவழி நடக்கையில் ஒரு அழகான பெண் சிலையைப் பார்க்கிறார்கள். “இந்த சிலை நிஜ பெண்ணாக இருந்தால் எவ்வளவு அழகாக இருப்பாள்!” என்று வியக்கிறார்கள். முதலாமவன் தன் தவ வலிமையினால் அந்த சிலைக்கு உயிரூட்டி நிஜ பெண்ணாக மாற்றுகிறான். இரண்டாமவன் தன் தவத்தால் சற்றும் யோசியாமல் ஆடைகள் வரவழைத்து அந்தப் பெண்ணிற்கு அணிவிக்கிறான். மூன்றாமவன் தவம் செய்து, அழகிய நகைகளும் அணிகலன்களும் வரவழைத்து அவளுக்கு அழகூட்டுகிறான். வேதாளம் விக்ரமாதித்தனிடம் கேட்ட கேள்வி: ”மூன்று இளைஞர்களுமே அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். அவளை மணமுடிக்கும் தகுதி அந்த மூவரில் யாருக்கு அதிகம் இருக்கிறது?”


விக்ரமாதித்தன் பதில் வேதாளத்தைத் திருப்திப்படுத்தியதும், அதனால் அவன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறாமல் தப்பியதும் புராண கதை. ஆனால் வேதாளத்தின் கேள்வியை நான் பல பேரிடம் பல சந்தர்ப்பங்களில் கேட்ட போது யாருமே விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்திற்கும் தெரிந்திருந்த சரியான விடை சொல்லவில்லை. ஆச்சரியம்!


(விடை இந்தப் பக்கத்திலேயே இருக்கிறது, வேதாளத்தின் கண்ணிற்கு மட்டும் தெரியும்படி. கண்டு பிடியுங்கள். கண்டுபிடித்தவர்கள் எதற்கும் முதுகுக்குப் பின்னால் ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொள்ளுங்கள்).
விடை: உயிர் கொடுத்தவன் தந்தையாகிறான். ஆடையால் மானம் காத்தவன் சகோதரன். நகைகளால் அவள் அழகை மெருகூட்டி ரசிப்பவனே கணவனாகும் தகுதி பெறுகிறான்.