கிண்டி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டது....
பழைய சம்பவங்களை எழுதும்போது மக்கள் என் மெமரி பற்றி வியந்தால் நான் அவசரமாக மறுத்து விடுவேன். எல்லோருக்கும் சிலபல விஷயங்கள் ஏதோ காரணத்தால் எங்கேயோ, ’எதற்கோ’ ரெகார்ட் ஆகிவிடுகின்றன, அவ்வளவே.
ஆர்வமுள்ள விஷயங்கள் மனதில் எளிதில் நிலைத்துவிடுகின்றன. இங்கே நண்பன் ஒருவனின் farewell பார்ட்டியில் “இவன் ஐஷ்வர்யா பிரியன்...” என்று நான் சொல்லிவைக்க, அவன் “அடுத்த வாரம் இதே நாள் ஐஷின் பிறந்த நாள்...” என்றான். (மறு நிமிடம் அவன் மனைவி வெகுண்டு “ஹேய்... உனக்கு என் பிறந்த நாளே அப்பப்ப மறந்து போகும்; அவ மட்டும் நினைவிருக்கா?” என்றதும் மௌனமானான். (“இதிலே முழுப் பேரையும் சொல்லாமல் ஐஷாம், ஐஷ்..... ஏதோ அத்தை பெண் மாதிரி”).
ஒரே சம்பவத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் மனதில் தங்கிவிடுகிறது. கலர் டிவி விஷயத்திலேயே, மெஸ்ஸில் கூட்டமாக ஆவலுடன் உட்கார்ந்து ‘திடும்’என்று கலரில் பார்த்ததும் விசிலடித்ததும் எனக்கு நினைவில் இருக்கிறது. டிவி முதலில் ‘மக்கர்’ பண்ணியதும், (அது Solidaire டிவி என்பதும்), நம்மில் ஒருவன் ‘மாஜிக்’ கை பட்டவுடன் சரியானதும் நினைவில்லை. ’தயா’வுக்கு அந்த மாஜிக் ஆசாமி சஞ்சீவி என்றும், ஐசக்கிற்கு “இல்லை; அவன் நம் ஸீனியர்” என்பது மட்டுமில்லாமல் அவன் கண்ணாடி போட்டிருந்ததும் ஞாபகம்.
’முதல்’அனுபவம் கொஞ்சம் அதிகமாகவே நினைவில் நிற்கும். டிவி.ரவிக்கு மதுரையின் முதல் இரட்டை விசிறி விமானம் வாயில் நுழையாத பெயருடன் பதிந்துவிட்டது. TKPயின் மனதின் எங்கோ ஒரு மூலையில் டிவியின் முதல் படம் ரெகார்ட் ஆகியிருப்பது -பத்மினிப் ’பாட்டி’யின் மீதான பிரியத்தால்? (அப்புறம் TKP, இந்த *Mr.Subahar* என்று எழுதற வேலையெல்லாம் நம்ப கையிலே வேணாம், என்னா?!).
செந்திலுக்கு ஆரம்ப காலங்களின் ‘குரங்கு பெடல்’ சைக்கிள் மறக்கவில்லை. நானும் 8-ம் வகுப்பில் என் முதல் சைக்கிள் வாங்கும் வரை -வாங்கிய பின்னும் கொஞ்ச நாள் -குரங்கு பெடல் தான். “ரொம்ப நாளைக்கு வரணும்; பையன் வளரும் வயசு” என்று அப்போல்லாம் வீட்டில் எல்லாமே ’எக்ஸ்ட்ரா லார்ஜ்’ சைஸில் தான் வாங்குவார்கள். (இந்த long term approach-சினாலேயே பள்ளி காலங்களில் எனக்கு பெரும்பாலும் ‘தொள தொள’ ட்ரவுசர் தான்) அப்படி வந்த BSA சைக்கிளை நான் படு சிரத்தையாக க்ளீன் செய்வதை என் தங்கை கொஞ்சம் பொறாமையுடன் தான் பார்ப்பாள் (”வரட்டும், வரட்டும், எனக்கும் ஒரு சைக்கிள் வரட்டும்....”) சைக்கிள் கேரியரில் அவள் புத்தகைத்தையோ பையையோ வைத்துவிட்டால் அன்று யுத்தம் தான். பின்னாளில் நான் மிகவும் ரசித்து ஏகப்பட்ட ஆப்ஷன்களுடன் ட்வின் டோர் 3000cc Toyota Solara வாங்கியபோதும், அந்த BSA சைக்கிளின் போது இருந்த ‘கிக்’ வரவில்லை.
’தர்ம சங்கடங்களும்’ எளிதில் மறப்பதில்லை. (பகல், சூரி: அது ஏன் “தர்ம” சங்கடம்?). தயாவின் டிவி ரிப்பேர் அனுபவம் எனக்கும் உண்டு. சித்தப்பா வீட்டில் டிவி பார்த்த முன்னொரு நாளில் டிவி மக்கர் செய்ய, அங்கே கூடியிருந்த அக்கம்பக்கத்து இல்லத்தரசிகளின் ’திருப்பார்வை’ என்மேல் பட்டது. நான் இன்ஜினியரிங் படிப்பதால் எனக்கு ‘தலையெல்லாம் மூளை; உடம்பெல்லாம் அறிவு; எதையும் இவன் சரி செய்வான்’ என்று நினைப்பு அவர்களுக்கு. (நம் ‘திருமதி’கள் பலருக்கும் கூட அப்படித்தான் நினைப்பு -திருமணம் வரை!) “நான் படிப்பது mechanical engineering -ஆக்கும்” என்று ’டெக்னிகலா’கப் பதில் சொல்லி நழுவி விட்டேன்.
நம் எல்லோருக்கும் ஆசிரியர்/ஆசிரியை ஒருவராவது ஏதாவது காரணத்தால் மனதில் தங்கியிருப்பார் என்று நிச்சயமாகச் சொல்லலாம். சென்னப்பனுக்கு 10-ம் வகுப்பு வாத்தியார் பெயரும் உயரமும் (எத்தனை அங்குலம் என்பது வரை) நினைவிருப்பது அவர் மீனம்பாக்கத்தில் விமானம் பார்க்க அழைத்துச் சென்றதாலோ, வீட்டில் போண்டா கொடுத்ததாலோ மட்டும் அல்ல; சென்னைக்கு மாறிவந்தபோது சப்போர்ட்டிவ்வாக இருந்ததாலும் என்பதைத் தெரிகிறோம். அண்மையில் மறைந்துவிட்ட Fr. Arockiyasamy எனக்கு ஹைஸ்கூலில் அப்படி அமைந்தவர். எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியானபோது ’நல்லா படிக்கும் பசங்க’ கொஞ்சபேர் ‘கேக்’ ஒன்று வாங்கிக்கொண்டு அவரைப் பார்த்து, லயோலா, செயிண்ட் ஜோசப் என்று என் நண்பர்கள் அடுத்த ‘படி’ பற்றி அவரிடம் சொல்ல, அவரோ வகுப்பில் ஃபெயிலான ஒரேயொரு மாணவனைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசினார். கடைசி மாதங்களில் அவனுக்கும் ஒரு சிலருக்கும் தனி கோச்சிங் எடுத்தது பற்றிப் பேசியவர், “I don't know how he 'managed' to fail" என்றார். அந்த வார்த்தைப் பிரயோகத்தினல், அதில் தெரிந்த ஆதங்கத்தினால் 31 வருஷத்திற்கு அப்புறமும் என் பிள்ளைகளிடம் அவரைப் பற்றிப் பேசமுடிகிறது.
அடிக்கடி இல்லாவிட்டலும் அவ்வப்போதாவது குடும்பத்தாருடன் பழைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது அவை காலம் கடக்கின்றன. ” நம்ம காலேஜ் பசங்களில் என்னைப்போலவே ‘நினைத்தாலே இனிக்கும்’ 17 முறை (விடியோ இல்லாத காலத்தில்) தியேட்டருக்கு சென்றே பார்த்தவர்கள் யார்?” என்று கேட்டால் தீபிகா உடனே “டிவி.ரவி மற்றும் அரவிந்த்” என்று சொல்லிவிடுவாள், back-up memory போல. சுபாராணியின் கணவர் கிண்டி-25 சந்திப்பில் தன் மனைவி அந்நாட்களில் ”கிண்டி Trio-க்களில் ஒருவர்” என்று நட்புடன் மேடையில் சொல்லும்போது (பார்க்க: கிண்டி-25 DVD) சுபாராணி வீட்டின் ’அரட்டை’ நமக்குப் புரிகிறது. அதை சுபாராணியின் பெண் அதே மேடையில் ஆமோதிக்கும்போது, விஷயம் அடுத்த தலைமுறைக்கும் சுலபமாகச் சென்று விடுவது தெரிகிறது.
மேல் சொன்ன எந்தவகையிலும் சேராத சில விஷயங்களும் ஏனோ மறப்பதில்லை. ”நம்ம ‘செட்’டில் மார்ச்-5 -ல் பிறந்த நாள் வரும் இருவர் யார்?” என்று கேட்டால் நம்மில் 90 சதவீதம் பேர் சரியான விடையை ‘சட்’ டென்று சொல்வார்கள்.....!
Nov 5, 2009
Nov 2, 2009
இனி “காஞ்சிவரம்”
(( எல்லாம் சரி, அது என்ன தலைப்பு (”சில்க்”)?
பகலவன் சொன்னபடி, ”காஞ்சிவரம்” பற்றி எழுதணும் என்ற உந்துதலே அந்த மெயிலுக்குக் முதல் காரணம். ”பட்டு” என்று தலைப்பிட நினைத்தது மருவி, ‘சில்க்’ ஆகிவிட்டது. மற்றபடி “சந்தை தொழில் நுட்பம்” (என்ன தமிழாக்கம், AJB!), "நேத்து ராத்திரி.... யம்...மா” சமாசாரங்கள் இல்லை.
”காஞ்சிவரம்” ஆரம்பித்ததும் கவனம் கலையாமல் நான் பார்க்க முடிந்த படம். தமிழில் கூட இப்படிப் படம் எடுக்க ஆள் இருப்பது ஆச்சர்யம். அதெப்படி கதையில் அத்தனை கதாபாத்திரங்களும் நிஜமாகத் தெரிகிறார்கள்! பிரகாஷ் ராஜ் பாத்திரம் மனதில் ஒட்டுவதற்குக் காரணம் அவன் மனைவி-மகள் மேல் உள்ள ஆசையில் செய்யும் ’பைசா’ பெறாத தவறுகள். ”யார் தான் செய்யவில்லை?” என்று நொந்து புலம்பி அவன் நம்மில் ஒருவனாகிறான். மனைவிக்குப் பட்டுச் சேலை வாங்க வழியில்லாமல், மகளுக்காவது வாங்க வேண்டும் என்று திருட ஆரம்பித்து, தொழிலாளர் போராட்டத்திலிருந்து ‘பல்டி’ அடித்து..... சுலபத்தில் ‘சந்தர்ப்பவாதி’யாகத் தெரிந்திருப்பான். டைரக்டரின் மிகச் சிரத்தையான கதை அமைப்பால் அவன் மீது இரக்கமே வருகிறது.
கிராமத்து இளம் மனைவியுடன் காதலை டைரக்டர் சன்னமாகக் காட்டியிருக்கிறார். “நான் துரோகியானதும், திருடனானதும் இதற்குத் தானே...” என்று ஒரு கட்டத்தில் புலம்புகிறவன், கடைசியில் மனநிலை தவறுவது சில வினாடிகளில் ஒரு சின்னக் காட்சியில் தெரிகிறது -பின்னணி வசனம், ஒரு வரிப் பாடல், ஆயிரம் வயலின்கள் இவை ஏதும் இல்லாமல்.
நெசவாளர்கள் மத்தியில் யூனியன் பிறந்தது கதையின் போக்கில் வருகிறது. இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவுடன் நாமும் ‘நமது’ பிரிட்டிஷ் அரசும் கைகோர்த்துக்கொள்ளும் வரை கம்யூனிஸ்ட்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தார்கள் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ’தோழர்’களை நக்ஸலைட் ரேஞ்சுக்கு நடத்தியிருக்கிறர்கள்!
தன் பையனை (வழக்கத்திற்கு மாறாக) பள்ளிக்கூடம் அனுப்பி வைக்கும் இன்னொரு நெசவாளி பேசும் ஒரு வசனம் வருகிறது: “வாழ்க்கை பூரா இந்தத் தறியோட போராடும் வாழ்க்கை நம்மோடு போகட்டும்.. நம்ம பிள்ளைகளுக்காவது வேண்டாம்னு தான்...”. குலையன்கரிசலில் என் தாத்தாவின் டயலாக் அது! வாழ்வின் பெரும்பகுதியில் மாட்டுவண்டி ஓட்டி மழைக்காக ஏங்கி விவசாயம் பார்த்து 5ம், 10மாகச் சேர்த்து.... ஒரு வைராக்கியத்தில் தன் இரண்டு பையன்களை (என் அப்பாவும் ஒருவர்) சென்னையில் பச்சையப்பா கல்லூரியில் படிக்க வைத்தார். அந்த நெசவாளி டயலாக்கின் ‘உணர்வு’களை என்னால் முழுதாகப் புரிய முடிந்தது....
படத்தின் வலை-இணைப்புக்கு நன்றி, பகல்ஸ். தீபிகா நெட்டில் படங்களைப் பிடிப்பதில் கில்லாடி என்று சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்தை உன் போலவே ‘எந்தக் காலத்திலேயோ’ நெட்டில் பார்த்துவிட்டதாகச் சொன்னாள். ‘என்னடா இது... படம் இவ்வளவு ஆமை வேகமாப் போவுது.... பகலவனும் சுபாகரும் உடனே இதைப் பற்றிப் புல்லரிச்சுடுவாங்களே.... ஏன் இன்னும் பேசக் காணோம்?”, என்று யோசித்து (:-), இன்னும் ஆராய்ந்து, படம் தியேட்டரில் வெளிவராமலே நெட்டில் வந்துவிட்டதைக் கண்டுபிடித்ததாகச் சொன்னாள்.
பகலவன் சொன்னபடி, ”காஞ்சிவரம்” பற்றி எழுதணும் என்ற உந்துதலே அந்த மெயிலுக்குக் முதல் காரணம். ”பட்டு” என்று தலைப்பிட நினைத்தது மருவி, ‘சில்க்’ ஆகிவிட்டது. மற்றபடி “சந்தை தொழில் நுட்பம்” (என்ன தமிழாக்கம், AJB!), "நேத்து ராத்திரி.... யம்...மா” சமாசாரங்கள் இல்லை.
”காஞ்சிவரம்” ஆரம்பித்ததும் கவனம் கலையாமல் நான் பார்க்க முடிந்த படம். தமிழில் கூட இப்படிப் படம் எடுக்க ஆள் இருப்பது ஆச்சர்யம். அதெப்படி கதையில் அத்தனை கதாபாத்திரங்களும் நிஜமாகத் தெரிகிறார்கள்! பிரகாஷ் ராஜ் பாத்திரம் மனதில் ஒட்டுவதற்குக் காரணம் அவன் மனைவி-மகள் மேல் உள்ள ஆசையில் செய்யும் ’பைசா’ பெறாத தவறுகள். ”யார் தான் செய்யவில்லை?” என்று நொந்து புலம்பி அவன் நம்மில் ஒருவனாகிறான். மனைவிக்குப் பட்டுச் சேலை வாங்க வழியில்லாமல், மகளுக்காவது வாங்க வேண்டும் என்று திருட ஆரம்பித்து, தொழிலாளர் போராட்டத்திலிருந்து ‘பல்டி’ அடித்து..... சுலபத்தில் ‘சந்தர்ப்பவாதி’யாகத் தெரிந்திருப்பான். டைரக்டரின் மிகச் சிரத்தையான கதை அமைப்பால் அவன் மீது இரக்கமே வருகிறது.
கிராமத்து இளம் மனைவியுடன் காதலை டைரக்டர் சன்னமாகக் காட்டியிருக்கிறார். “நான் துரோகியானதும், திருடனானதும் இதற்குத் தானே...” என்று ஒரு கட்டத்தில் புலம்புகிறவன், கடைசியில் மனநிலை தவறுவது சில வினாடிகளில் ஒரு சின்னக் காட்சியில் தெரிகிறது -பின்னணி வசனம், ஒரு வரிப் பாடல், ஆயிரம் வயலின்கள் இவை ஏதும் இல்லாமல்.
நெசவாளர்கள் மத்தியில் யூனியன் பிறந்தது கதையின் போக்கில் வருகிறது. இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவுடன் நாமும் ‘நமது’ பிரிட்டிஷ் அரசும் கைகோர்த்துக்கொள்ளும் வரை கம்யூனிஸ்ட்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தார்கள் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ’தோழர்’களை நக்ஸலைட் ரேஞ்சுக்கு நடத்தியிருக்கிறர்கள்!
தன் பையனை (வழக்கத்திற்கு மாறாக) பள்ளிக்கூடம் அனுப்பி வைக்கும் இன்னொரு நெசவாளி பேசும் ஒரு வசனம் வருகிறது: “வாழ்க்கை பூரா இந்தத் தறியோட போராடும் வாழ்க்கை நம்மோடு போகட்டும்.. நம்ம பிள்ளைகளுக்காவது வேண்டாம்னு தான்...”. குலையன்கரிசலில் என் தாத்தாவின் டயலாக் அது! வாழ்வின் பெரும்பகுதியில் மாட்டுவண்டி ஓட்டி மழைக்காக ஏங்கி விவசாயம் பார்த்து 5ம், 10மாகச் சேர்த்து.... ஒரு வைராக்கியத்தில் தன் இரண்டு பையன்களை (என் அப்பாவும் ஒருவர்) சென்னையில் பச்சையப்பா கல்லூரியில் படிக்க வைத்தார். அந்த நெசவாளி டயலாக்கின் ‘உணர்வு’களை என்னால் முழுதாகப் புரிய முடிந்தது....
படத்தின் வலை-இணைப்புக்கு நன்றி, பகல்ஸ். தீபிகா நெட்டில் படங்களைப் பிடிப்பதில் கில்லாடி என்று சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்தை உன் போலவே ‘எந்தக் காலத்திலேயோ’ நெட்டில் பார்த்துவிட்டதாகச் சொன்னாள். ‘என்னடா இது... படம் இவ்வளவு ஆமை வேகமாப் போவுது.... பகலவனும் சுபாகரும் உடனே இதைப் பற்றிப் புல்லரிச்சுடுவாங்களே.... ஏன் இன்னும் பேசக் காணோம்?”, என்று யோசித்து (:-), இன்னும் ஆராய்ந்து, படம் தியேட்டரில் வெளிவராமலே நெட்டில் வந்துவிட்டதைக் கண்டுபிடித்ததாகச் சொன்னாள்.
’சில்க்’கின் பின்னோட்டங்கள்
’சில்க்’ நண்பர்கள் பலரின் மலரும் நினவுகளைத் தட்டிவிட்டது.....
-------------------------------------------------------------------------------------------------------
Sozhavarman: I really enjoy the way you felt about all elecronic gadgets. I want to write in Tamil man.
AJB: அந்த கடைசிநேரத்தில் Solidaire டிவி ரெம்ப நேரம் கலர் காட்ட மறுத்தது. நம்ம பசங்க யாரோதான் எதையோ திருப்பிவிட்டதும் தான் டார்க்கா வண்ண தொலை காட்சியை முதலில் நம்மில் பலர் பார்த்தோம். மறக்க முடியுமா? என்ன விசில்! என்ன சத்தம்!!
Senthil: ஹாய் சுபாகர், அப்போது ஈரோடில் சினிமா வண்டிநோட்டீஸ் போட்டுச் செல்லும்.நாங்கள் அதை துரத்திச் சென்று நோட்டீஸ் வாங்குவோம்.மற்றபடி லீவு விட்டால் எங்கள் கிராமம் சென்று அங்குள்ள என் செட் பசங்களுடன் வெயில் காலத்தில் நுங்கு வண்டியும் பொதுவாக டயர் வண்டியும் ஓடி ஓடி விடுவோம். மூன்றாம் வகுப்பில் சைக்கிள் பழகிவிட்டபடியால்(குரங்கு பெடல்) ஓட்டம் நின்று விட்டது.
Santhanam: சுபா, உன்னுடைய எழுத்தை மிகவும் ரசித்தேன்! சமீபத்தில் தான் சென்னை சென்று வந்தவன் என்ற முறையில் அந்த சிவப்பு நிற பல்லவனெல்லாம் இன்று "வால்வோ"' ஊர்திகளாய் வலம் வருவதை காலத்தின் கட்டாயம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல. நம்ம ஊரில் இன்னொன்றையும் கவனித்தேன். கலர் கலராக வர்ணம் அடிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள். விசாரித்ததில் அவையெல்லாம் வாஸ்து கலர்கள் என்றும் ஒவ்வொரு திசைக்கும் ஒரு வாஸ்து வர்ணம் உள்ளது என்றும் தெரிந்து கொண்டேன். நம்ம ஆளுங்க விவேக் காமெடியையும் ரசிக்கிறாங்க, வாஸ்துவையும் நம்பறாங்க! நம்ம ஊரு நம்ம ஊருதான்!!!
(To borrow Manick's words..."What a country !" ... and what a diversity!!) எல்லாம் சரி, அது என்ன தலைப்பு? புதிராக உள்ளதே!?!
Daya: Even I was wondering why there is no mention of / discussion about 'Smitha' while the subject line says "Silk" . Atleast I have company in Santhanam ( or for that matter most of the members wondering silently). Then a Flash ....Oh Subahar is discussing about original Silk & saree & Kancheevaram, and that is the connection ...Was it not Sanjeevi who did that golden, nay colorful touch and became instant hero. It just reminds me of an incident during May 83. It was the day of World cup Finals. I was in Hyderabad in my brother's house. On that day morning our TV failed. Few families (mind you there were couple of beautiful young girls) in the neighbourhood, were dependent on this TV set for watching the grand Finale. Focus shifted on me. After all I have completed 4 years in Electronics & Communication and supposed to know 80% of everything electronics ( TV radio...) So I am supposed to service and make TV set good. (I could not say TV is not my elective subject ) So I did what best I could think of under the given circumstance. I demanded for a screw driver opened the cover of TV set and cleared all the dust inside. I put the cover back and switched the set 'ON' Bravo! It started working normally. None of them believed that I have not done anything. They thought that I had actually serviced (& trying to be modest). Any way we enjoyed the Indian victory thoroughly. (Raghu : See I have serviced a TV in Hyderabad long before you established your "Service" empire!)
Pagalavan: சந்தானம், சுபாகரோட மடலே, பட்டு நெசவுத் தொழிலாளியைப் பற்றி எடுக்கப்பட்ட படம் "காஞ்சீபுரம்" தந்த உந்துதலால் என்பதால் அந்த "சில்க்". மற்றபடி, நீ பாட்டுக்கு அவன் எதோ சிலுக்கு-வைப்பத்தி சொல்ல வர்றான்னு நெனச்சிட்டியாக்கும்? :-))
AJB: பகல் , உண்மையை சொல்லு, அந்த டைட்டில் ஒரு உந்துதலை கொடுத்த இல்லையா ? பாவம் - சிலுக்கு - இறந்து போன இள நடிகைகளில் ஒன்றானாள். சுபாகரின் சந்தை தொழில் நுட்பம் வேலை செய்ததுக்கு சான்று இத்துணை மின்னஞ்சல்களே .. தூங்கிய அனைவரும் எழுந்து கொண்டனர் போலும்.
Isaac: ((Was it not Sanjeevi who did that golden, nay colorful touch and became instant hero))
It was a guy wearing glasses. Was it that "white" guy who was our senior by 1 or 2 years?
The Tamil posts are interesting and take me back to a time when my only Tamil-speaking friends were SriLankans. It was a bit of a struggle to understand what they were saying, but I think I got it after a while :-)
TV Ravi: அன்பு நண்பா, தொடரவும். வடிவேல் சொல்வது போல "கிளப்புங்கள்". உனது வரிகளால் ஆட்டோ கிராப், என்றும் "நினைத்தாலே இனிக்கும்". அன்று மதுரைக்கு வரும் ஒரே போக்கர் பிரிஎண்ட்ஷிப் என்ற இரட்டை விசிறி விமானத்தை பார்க்க வீட்டில் இருந்து அதன் சத்தம் கேட்டதும் ஓடி வந்தது தான் நினைவிருக்கின்றது. பி கு: உனக்கு ஒரு வேண்டுதல், தயவு செய்து உனது நினைவுகளை இப்போதே எழுதி வைக்கவும். உன் அளவிற்கு எனக்கு நினைவில் இல்லை. எத்தனை நண்பர்களுக்கு நினைவிருக்கும் என்பதும் தெரியவில்லை. நான் உனது எழுத்துகளை சேமிக்கிறேன்.
TKP: Dear Mr Subahar, I have also recollected the first Tamil Movie I have seen in Madras Doordharshan. It was Gemini's Motor Sundaram Pillai .( The name taken from TVS "s Sundaram Motors). I think the first Tamil movie telecasted by Madras Doordharshan was Shivaji's Thillana Mohanambal (in 1975)
-------------------------------------------------------------------------------------------------------
Sozhavarman: I really enjoy the way you felt about all elecronic gadgets. I want to write in Tamil man.
AJB: அந்த கடைசிநேரத்தில் Solidaire டிவி ரெம்ப நேரம் கலர் காட்ட மறுத்தது. நம்ம பசங்க யாரோதான் எதையோ திருப்பிவிட்டதும் தான் டார்க்கா வண்ண தொலை காட்சியை முதலில் நம்மில் பலர் பார்த்தோம். மறக்க முடியுமா? என்ன விசில்! என்ன சத்தம்!!
Senthil: ஹாய் சுபாகர், அப்போது ஈரோடில் சினிமா வண்டிநோட்டீஸ் போட்டுச் செல்லும்.நாங்கள் அதை துரத்திச் சென்று நோட்டீஸ் வாங்குவோம்.மற்றபடி லீவு விட்டால் எங்கள் கிராமம் சென்று அங்குள்ள என் செட் பசங்களுடன் வெயில் காலத்தில் நுங்கு வண்டியும் பொதுவாக டயர் வண்டியும் ஓடி ஓடி விடுவோம். மூன்றாம் வகுப்பில் சைக்கிள் பழகிவிட்டபடியால்(குரங்கு பெடல்) ஓட்டம் நின்று விட்டது.
Santhanam: சுபா, உன்னுடைய எழுத்தை மிகவும் ரசித்தேன்! சமீபத்தில் தான் சென்னை சென்று வந்தவன் என்ற முறையில் அந்த சிவப்பு நிற பல்லவனெல்லாம் இன்று "வால்வோ"' ஊர்திகளாய் வலம் வருவதை காலத்தின் கட்டாயம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல. நம்ம ஊரில் இன்னொன்றையும் கவனித்தேன். கலர் கலராக வர்ணம் அடிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள். விசாரித்ததில் அவையெல்லாம் வாஸ்து கலர்கள் என்றும் ஒவ்வொரு திசைக்கும் ஒரு வாஸ்து வர்ணம் உள்ளது என்றும் தெரிந்து கொண்டேன். நம்ம ஆளுங்க விவேக் காமெடியையும் ரசிக்கிறாங்க, வாஸ்துவையும் நம்பறாங்க! நம்ம ஊரு நம்ம ஊருதான்!!!
(To borrow Manick's words..."What a country !" ... and what a diversity!!) எல்லாம் சரி, அது என்ன தலைப்பு? புதிராக உள்ளதே!?!
Daya: Even I was wondering why there is no mention of / discussion about 'Smitha' while the subject line says "Silk" . Atleast I have company in Santhanam ( or for that matter most of the members wondering silently). Then a Flash ....Oh Subahar is discussing about original Silk & saree & Kancheevaram, and that is the connection ...Was it not Sanjeevi who did that golden, nay colorful touch and became instant hero. It just reminds me of an incident during May 83. It was the day of World cup Finals. I was in Hyderabad in my brother's house. On that day morning our TV failed. Few families (mind you there were couple of beautiful young girls) in the neighbourhood, were dependent on this TV set for watching the grand Finale. Focus shifted on me. After all I have completed 4 years in Electronics & Communication and supposed to know 80% of everything electronics ( TV radio...) So I am supposed to service and make TV set good. (I could not say TV is not my elective subject ) So I did what best I could think of under the given circumstance. I demanded for a screw driver opened the cover of TV set and cleared all the dust inside. I put the cover back and switched the set 'ON' Bravo! It started working normally. None of them believed that I have not done anything. They thought that I had actually serviced (& trying to be modest). Any way we enjoyed the Indian victory thoroughly. (Raghu : See I have serviced a TV in Hyderabad long before you established your "Service" empire!)
Pagalavan: சந்தானம், சுபாகரோட மடலே, பட்டு நெசவுத் தொழிலாளியைப் பற்றி எடுக்கப்பட்ட படம் "காஞ்சீபுரம்" தந்த உந்துதலால் என்பதால் அந்த "சில்க்". மற்றபடி, நீ பாட்டுக்கு அவன் எதோ சிலுக்கு-வைப்பத்தி சொல்ல வர்றான்னு நெனச்சிட்டியாக்கும்? :-))
AJB: பகல் , உண்மையை சொல்லு, அந்த டைட்டில் ஒரு உந்துதலை கொடுத்த இல்லையா ? பாவம் - சிலுக்கு - இறந்து போன இள நடிகைகளில் ஒன்றானாள். சுபாகரின் சந்தை தொழில் நுட்பம் வேலை செய்ததுக்கு சான்று இத்துணை மின்னஞ்சல்களே .. தூங்கிய அனைவரும் எழுந்து கொண்டனர் போலும்.
Isaac: ((Was it not Sanjeevi who did that golden, nay colorful touch and became instant hero))
It was a guy wearing glasses. Was it that "white" guy who was our senior by 1 or 2 years?
The Tamil posts are interesting and take me back to a time when my only Tamil-speaking friends were SriLankans. It was a bit of a struggle to understand what they were saying, but I think I got it after a while :-)
TV Ravi: அன்பு நண்பா, தொடரவும். வடிவேல் சொல்வது போல "கிளப்புங்கள்". உனது வரிகளால் ஆட்டோ கிராப், என்றும் "நினைத்தாலே இனிக்கும்". அன்று மதுரைக்கு வரும் ஒரே போக்கர் பிரிஎண்ட்ஷிப் என்ற இரட்டை விசிறி விமானத்தை பார்க்க வீட்டில் இருந்து அதன் சத்தம் கேட்டதும் ஓடி வந்தது தான் நினைவிருக்கின்றது. பி கு: உனக்கு ஒரு வேண்டுதல், தயவு செய்து உனது நினைவுகளை இப்போதே எழுதி வைக்கவும். உன் அளவிற்கு எனக்கு நினைவில் இல்லை. எத்தனை நண்பர்களுக்கு நினைவிருக்கும் என்பதும் தெரியவில்லை. நான் உனது எழுத்துகளை சேமிக்கிறேன்.
TKP: Dear Mr Subahar, I have also recollected the first Tamil Movie I have seen in Madras Doordharshan. It was Gemini's Motor Sundaram Pillai .( The name taken from TVS "s Sundaram Motors). I think the first Tamil movie telecasted by Madras Doordharshan was Shivaji's Thillana Mohanambal (in 1975)
Oct 30, 2009
AK
Few years ago in the Tamil magazine Vikatan, a college student had written about her tour to Rameshwaram. She had written about the temples and beach, and when it was the time to return to her bus to leave for Chennai, as she wrote, " I took a pinch of soil and applied it on my forehead as if it was the vipoothi, praying that I get at least a minute percentage of knowledge, sincereity and simplicity of Dr.Abdul Kalam, who was born in this holy town of Rameshwaram...".
That college girl might have acted somewhat hyper-sentimentally, nevertheless she reflected the mindsets of millions of Indians for whom Dr.Kalam was undoubtedly a Hero.
It is a gifted opportunity to be in a small group listening to his speech -Deepika, Shibu & Madhu were in the audience when Dr.Kalam visited Orlando Hindu Temple last week (Oct-25, Sunday). (See attached pics). Both Shibu & Madhu were very impressed with his brief speech (and perhaps, the significance he attached to students).
That college girl might have acted somewhat hyper-sentimentally, nevertheless she reflected the mindsets of millions of Indians for whom Dr.Kalam was undoubtedly a Hero.
It is a gifted opportunity to be in a small group listening to his speech -Deepika, Shibu & Madhu were in the audience when Dr.Kalam visited Orlando Hindu Temple last week (Oct-25, Sunday). (See attached pics). Both Shibu & Madhu were very impressed with his brief speech (and perhaps, the significance he attached to students).
Oct 23, 2009
சில்க்
சமீபத்தில் பார்த்த தமிழ்த் திரைப்படத்தில் ஒரு காட்சி: 1947க்கு முந்தைய காலத்தைக் காட்டும்போது ஒரு கிராமத்தில் முதல்முறையாகக் கார் வருவதைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாய் ஓடுகிறார்கள். அதிக பட்சம் மாட்டு வண்டி மட்டுமே பயணத்திற்கென்று இருந்த அந்தக் காலங்களில் ‘மோட்டார் கார்’ பார்க்க மக்கள் ஓடியது வியப்பில்லைதான்.
நாம் எதையாவது பார்க்க ஓடியிருக்கிறோமா...? யோசித்தேன்.
கால்குலேட்டர், டிவி, விடியோ காமெரா, கம்ப்யூட்டர், செல்ஃபோன் எல்லாமே கொஞ்சம், கொஞ்சமா நம் வாழ்க்கையில் ’சைலண்ட்டாக’ நுழைந்தன. கால்குலேட்டர்கள் நாம் கிண்டியில் நுழைவதற்கு 7-8 வருஷத்திற்கு முன் இல்லை -என் மாமா ஸ்லைட் ரூல் ஒன்றை உபயோகித்ததைப் பார்த்திருக்கிறேன்.
”டிவி பார்ப்பது” என்பது நான் முதன் முதல் சென்னைக்கு (பட்டணம் பார்க்க?) வந்தபோது என் ’பிளான்’களில் ஒன்று. (மற்றொன்று LIC கட்டடத்தைப் பார்த்துவிடுவது). 1978-ல் (கிண்டிக்கு ஒரு வருஷம் முன்) சென்னையில் இறங்கியபோது 'சர், சர்’ரென்று அங்குமிங்கும் பறக்கும் கார்களும், சிவப்புநிற பல்லவன்களும் என்னைக் கதிகலங்க வைத்தன. (இப்போ யோசித்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது -அது மாருதி கூட வராத காலம். 100cc பைக்குகளும் ஒன்றுகூட வந்திருக்கவில்லை; Yesdi என்றொரு பைக் தான் ரொம்ப ஸ்டைலிஷ் அப்போ. புல்லட் பெரும்பாலும் போலீஸ் அதிகாரிகளுக்கும், அப்புறம் தூத்துக்குடிப் பக்கம் காலில் செருப்பு இல்லாமல் வேஷ்டியை உயர்த்திக் கட்டிய நா(ட்)டார்களுக்கும் மட்டுமே. மூன்றாவதாக இருந்த ராஜ்தூத் unimpressive).
டிவி பார்க்க அமிஞ்சிக்கரையிலிருந்து தி.நகரில் இன்னொரு சித்தப்பா வீட்டிற்குப் போனது நினைவில் இருக்கிறது. கறுப்பு வெள்ளை டிவி. ஒரேஒரு சானலில் வாரம் ஒரேஒரு தடவை மட்டும் வருவது பெரும்பாலும் ‘டப்பா’ படம். நான் முதலில் பார்த்தது ‘தாய் சொல்லைத் தட்டாதே’ (அல்லது ‘தாய்க்குப் பின்தாரம்’ அல்லது ‘தாயைக் காத்த தனயன்’ இப்படி ஏதோ ஒன்று; ‘தாய்’ நிச்சயம் இருந்தார்).
அப்புறம் கிண்டி ஹாஸ்டலில் வெள்ளிக்கிழமைகளில் ஷோபனா ரவியின் புன்னகையைத் தொடர்ந்து வரும் ‘ஒலியும் ஒளியும்’ பார்த்து விசிலடிக்காத நாட்களே இல்லை. (”டிவியில் எல்லா நிகழ்ச்சியிலும் தான் ஒலி-ஒளி ரெண்டும் இருக்கிறது. இதற்கு மட்டும் ஏன் இந்தப் பெயர்?” என்று யாரோ -பகலவன்?- கேட்டதும் நினைவிருக்கிறது). வாரம் அரைமணி நேரம் மட்டும் டிவியில் பாடல்கள்!
டிவி முதல் முதல் பார்க்க தி.நகர் போனதுபோல், கலர் டிவி பார்க்க எல்லோரும் கூடியிருந்தது ஹாஸ்டலில். 1982-ல் இந்திரா காந்தி புண்ணியத்தில் Asiad டில்லியில் நடந்தபோது, முதல் முதல் கலர் டெலிகாஸ்ட் வந்து, மக்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
(என் பசங்களிடம் இதையெல்லாம் சொன்னால் என்னை ஏதோ கற்கால மனிதன் போல ‘லுக்கு’ விடுதுங்க! கம்ப்யூட்டரும் PS-II (or was it III?) இல்லாத காலத்தை அவர்களால் கற்பனை கூடப் பண்ணமுடியவில்லை).
பின்குறிப்பு: நான் முதலில் சொன்ன காட்சி இடம்பெற்ற படம் “காஞ்சிவரம்” -சென்ற வருஷம் ‘நேஷனல் அவார்ட்” வாங்கி, ஹீரோ பிரகாஷ் ராஜுக்கும் சிறந்த நடிகர் கிடைத்த படம். “எல்லோரும் தான் சின்னச் சின்ன தப்பு செய்யுறாங்க; எனக்கு மட்டும் ஏன் இந்தத் தண்டனை?” என்று ஒரு கட்டத்தில் புலம்பும் ஒரு சராசரி மனிதனின் பாசாங்கில்லாத, கொஞ்சமும் மிகைப்படுத்தாத, சினிமாத்தனம் இல்லாத கதை. தமிழ் கூறும் நல்லுலகத்தின் ரசனையை மீறிய படம். பிரியதர்ஷனின் டைரக்ஷனில் ஏதோ பெங்காலி படம் பார்ப்பதுபோல் உணர்வு.
படத்தைப் பார்ப்பதற்கும் பெங்காலில் இருந்துதான் யாராவது வரவேண்டும் போல -நிஜத்திற்கு மிக அருகில் வருவதால் தமிழகத்தில் இந்தப் படத்தைப் பார்த்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். (தீபிகா அப்பாவிற்கு என் ரசனை பற்றி எப்பவும் ஒரு கலக்கம், ஒரு பயம் உண்டு! “மாப்பிள்ளை விரும்பிக் கேட்கும் படங்களின் டிவிடியைக் கேட்டால், கடைக்காரனே நக்கலாச் சிரிக்கிறான் ’இதையும் வாங்குறதுக்கு ஆள் இருக்குதே’ என்று” . அப்படிப்பட்ட படங்களில் ஒன்று இது).
நாம் எதையாவது பார்க்க ஓடியிருக்கிறோமா...? யோசித்தேன்.
கால்குலேட்டர், டிவி, விடியோ காமெரா, கம்ப்யூட்டர், செல்ஃபோன் எல்லாமே கொஞ்சம், கொஞ்சமா நம் வாழ்க்கையில் ’சைலண்ட்டாக’ நுழைந்தன. கால்குலேட்டர்கள் நாம் கிண்டியில் நுழைவதற்கு 7-8 வருஷத்திற்கு முன் இல்லை -என் மாமா ஸ்லைட் ரூல் ஒன்றை உபயோகித்ததைப் பார்த்திருக்கிறேன்.
”டிவி பார்ப்பது” என்பது நான் முதன் முதல் சென்னைக்கு (பட்டணம் பார்க்க?) வந்தபோது என் ’பிளான்’களில் ஒன்று. (மற்றொன்று LIC கட்டடத்தைப் பார்த்துவிடுவது). 1978-ல் (கிண்டிக்கு ஒரு வருஷம் முன்) சென்னையில் இறங்கியபோது 'சர், சர்’ரென்று அங்குமிங்கும் பறக்கும் கார்களும், சிவப்புநிற பல்லவன்களும் என்னைக் கதிகலங்க வைத்தன. (இப்போ யோசித்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது -அது மாருதி கூட வராத காலம். 100cc பைக்குகளும் ஒன்றுகூட வந்திருக்கவில்லை; Yesdi என்றொரு பைக் தான் ரொம்ப ஸ்டைலிஷ் அப்போ. புல்லட் பெரும்பாலும் போலீஸ் அதிகாரிகளுக்கும், அப்புறம் தூத்துக்குடிப் பக்கம் காலில் செருப்பு இல்லாமல் வேஷ்டியை உயர்த்திக் கட்டிய நா(ட்)டார்களுக்கும் மட்டுமே. மூன்றாவதாக இருந்த ராஜ்தூத் unimpressive).
டிவி பார்க்க அமிஞ்சிக்கரையிலிருந்து தி.நகரில் இன்னொரு சித்தப்பா வீட்டிற்குப் போனது நினைவில் இருக்கிறது. கறுப்பு வெள்ளை டிவி. ஒரேஒரு சானலில் வாரம் ஒரேஒரு தடவை மட்டும் வருவது பெரும்பாலும் ‘டப்பா’ படம். நான் முதலில் பார்த்தது ‘தாய் சொல்லைத் தட்டாதே’ (அல்லது ‘தாய்க்குப் பின்தாரம்’ அல்லது ‘தாயைக் காத்த தனயன்’ இப்படி ஏதோ ஒன்று; ‘தாய்’ நிச்சயம் இருந்தார்).
அப்புறம் கிண்டி ஹாஸ்டலில் வெள்ளிக்கிழமைகளில் ஷோபனா ரவியின் புன்னகையைத் தொடர்ந்து வரும் ‘ஒலியும் ஒளியும்’ பார்த்து விசிலடிக்காத நாட்களே இல்லை. (”டிவியில் எல்லா நிகழ்ச்சியிலும் தான் ஒலி-ஒளி ரெண்டும் இருக்கிறது. இதற்கு மட்டும் ஏன் இந்தப் பெயர்?” என்று யாரோ -பகலவன்?- கேட்டதும் நினைவிருக்கிறது). வாரம் அரைமணி நேரம் மட்டும் டிவியில் பாடல்கள்!
டிவி முதல் முதல் பார்க்க தி.நகர் போனதுபோல், கலர் டிவி பார்க்க எல்லோரும் கூடியிருந்தது ஹாஸ்டலில். 1982-ல் இந்திரா காந்தி புண்ணியத்தில் Asiad டில்லியில் நடந்தபோது, முதல் முதல் கலர் டெலிகாஸ்ட் வந்து, மக்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
(என் பசங்களிடம் இதையெல்லாம் சொன்னால் என்னை ஏதோ கற்கால மனிதன் போல ‘லுக்கு’ விடுதுங்க! கம்ப்யூட்டரும் PS-II (or was it III?) இல்லாத காலத்தை அவர்களால் கற்பனை கூடப் பண்ணமுடியவில்லை).
பின்குறிப்பு: நான் முதலில் சொன்ன காட்சி இடம்பெற்ற படம் “காஞ்சிவரம்” -சென்ற வருஷம் ‘நேஷனல் அவார்ட்” வாங்கி, ஹீரோ பிரகாஷ் ராஜுக்கும் சிறந்த நடிகர் கிடைத்த படம். “எல்லோரும் தான் சின்னச் சின்ன தப்பு செய்யுறாங்க; எனக்கு மட்டும் ஏன் இந்தத் தண்டனை?” என்று ஒரு கட்டத்தில் புலம்பும் ஒரு சராசரி மனிதனின் பாசாங்கில்லாத, கொஞ்சமும் மிகைப்படுத்தாத, சினிமாத்தனம் இல்லாத கதை. தமிழ் கூறும் நல்லுலகத்தின் ரசனையை மீறிய படம். பிரியதர்ஷனின் டைரக்ஷனில் ஏதோ பெங்காலி படம் பார்ப்பதுபோல் உணர்வு.
படத்தைப் பார்ப்பதற்கும் பெங்காலில் இருந்துதான் யாராவது வரவேண்டும் போல -நிஜத்திற்கு மிக அருகில் வருவதால் தமிழகத்தில் இந்தப் படத்தைப் பார்த்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். (தீபிகா அப்பாவிற்கு என் ரசனை பற்றி எப்பவும் ஒரு கலக்கம், ஒரு பயம் உண்டு! “மாப்பிள்ளை விரும்பிக் கேட்கும் படங்களின் டிவிடியைக் கேட்டால், கடைக்காரனே நக்கலாச் சிரிக்கிறான் ’இதையும் வாங்குறதுக்கு ஆள் இருக்குதே’ என்று” . அப்படிப்பட்ட படங்களில் ஒன்று இது).
Oct 21, 2009
Language Barrier
While talking about language barrier, a young Spanish lady narrated this to Dee: "As I was driving with my 7-yr old daughter, the police car coming behind showed blinking lights, which meant they wanted me to pull over. Actually I didn't notice and was driving ahead. The police then honked their horn, which I ignored thinking that it was for something else. I heard their voice in the loud-speaker, which I did not understand anyway, and continued to drive. Minutes later I heard their their loud-speaker blaring again; it was then my 7-yr old daughter got alerted and told me in Spanish: "Mom, they say they are going to shoot at our car tyre if we don't stop..."
Years ago, when we landed in Japan for the first time, Vanishree had to do our 'childhood gesture' (mostly in elementary schools; see picture) to request a waitress in a restaurant for some water! (Today -Oct-21, is the day we landed in Japan several years ago). Imagine what the waitress would have thought about us! She imitated us trying to do the same sign; looking at her twisted fingers, she talked to herself something and asked "nani? nani??" (what? what?)
I had my incident in Madrid where I'd gone on a business trip. I'd gone to a nearby shopping mall on a Sunday evening; it was December and was dead cold over there. The mall was crowded with people who were doing shopping as if tomorrow was the End of the world, and there was no signboard for toilet (This is the case in many countries except Japan). I searched here & there but in vain. Asked a couple of men who I thought could understand basic English but they gave me a look as if I came from a different planet and walked away. I kept walking in 'all directions'....... and found an old lady carrying a basket, a mob & a brush, and was in a dirty uniform. "She is it!" I told myself and silently followed her. She walked through some narrow lanes and finally reached a store-room where she kept her basket and mop, and was about to return. There was no toilet though.
Perhaps she was done for the day, and was about to return home. Knowing that she was the last chance for me to get some idea of where the toilet was, I intervened and asked her "Toilet? Toi-let-oo? Resta Rooma?" in several accents & 'dialects'. She blinked her eyes and was moving away, as others did. I was in a hurry, and I didn't want to let her go. I momentarily realized that nothing other than gesture would work! I intervened her again, and instead of 'talking' did an appropriate gesture, which she instantly understood. She then led me to the toilet which was some 200m away from the store-room.
On narrating this to a friend, he asked, laughing out loudly: "What was the gesture you did, by the way?"
"I leave it to your imagination.." said I.
Years ago, when we landed in Japan for the first time, Vanishree had to do our 'childhood gesture' (mostly in elementary schools; see picture) to request a waitress in a restaurant for some water! (Today -Oct-21, is the day we landed in Japan several years ago). Imagine what the waitress would have thought about us! She imitated us trying to do the same sign; looking at her twisted fingers, she talked to herself something and asked "nani? nani??" (what? what?)
I had my incident in Madrid where I'd gone on a business trip. I'd gone to a nearby shopping mall on a Sunday evening; it was December and was dead cold over there. The mall was crowded with people who were doing shopping as if tomorrow was the End of the world, and there was no signboard for toilet (This is the case in many countries except Japan). I searched here & there but in vain. Asked a couple of men who I thought could understand basic English but they gave me a look as if I came from a different planet and walked away. I kept walking in 'all directions'....... and found an old lady carrying a basket, a mob & a brush, and was in a dirty uniform. "She is it!" I told myself and silently followed her. She walked through some narrow lanes and finally reached a store-room where she kept her basket and mop, and was about to return. There was no toilet though.
Perhaps she was done for the day, and was about to return home. Knowing that she was the last chance for me to get some idea of where the toilet was, I intervened and asked her "Toilet? Toi-let-oo? Resta Rooma?" in several accents & 'dialects'. She blinked her eyes and was moving away, as others did. I was in a hurry, and I didn't want to let her go. I momentarily realized that nothing other than gesture would work! I intervened her again, and instead of 'talking' did an appropriate gesture, which she instantly understood. She then led me to the toilet which was some 200m away from the store-room.
On narrating this to a friend, he asked, laughing out loudly: "What was the gesture you did, by the way?"
"I leave it to your imagination.." said I.
Oct 20, 2009
Deepawali
Even as the whole world was debating Obama receiving the Nobel for Peace, I saw news of Obama celebrating Deepawali by lighting 'diya' in Whitehouse. Not just the word 'diya' was new to me, but also some other information I found in Obama's speech. I was under the impression like many that Deepawali is a Hindu festival, celebrated to mark the occasion of killing of Narakasura by Krishna. Obama says it is celebrated by Hindus, Sikhs, Jains and Buddhists, 'people of some of the great faiths of the world'. Per media reports, Obama becomes the first sitting US President to 'grace the occasion' with a group of Indians in White House.
Doing some search, I found further that North & South India have different reasons for celebrating D. While the southern version refers to Krishna and Narakasura, the Northern version has different hero & villain: Rama and Ravana. Didn't know that D is celebrated as the occasion that marked Rama's return from Sri Lanka to Ayodhya after defeating Ravana. Jains celebrate it as the occasion of their master Mahavira attaining moksha or nirvana. Sikhs have the latest history to mark this occasion -they celebrtae this as the return of their Guru Har Gobindji to Amritsar Golden Temple from imprisonment -he was kept in prison by King Jehangir. Some Buddhists in Nepal also celebrate D, I read.
When I showed Obama speech on a screen among a group of 30 Indian families in here, they weren't impressed. Some of them got instantly patriotic, and asked me why I did not bring Pratibha Patil's speech. (I was worried someone would then ask me "What happened to speech by mu.ka Alagiri..?..m?"). Someone said it was all 'marketing (!) gimmicks' which the US politicians are good at. The other one found the 2-min speech 'unnecessarily' cutting into the next event - which was 'lunch'.
You only see what you believe you see! http://www.youtube.com/watch?v=SuiAW_6XKVM
Doing some search, I found further that North & South India have different reasons for celebrating D. While the southern version refers to Krishna and Narakasura, the Northern version has different hero & villain: Rama and Ravana. Didn't know that D is celebrated as the occasion that marked Rama's return from Sri Lanka to Ayodhya after defeating Ravana. Jains celebrate it as the occasion of their master Mahavira attaining moksha or nirvana. Sikhs have the latest history to mark this occasion -they celebrtae this as the return of their Guru Har Gobindji to Amritsar Golden Temple from imprisonment -he was kept in prison by King Jehangir. Some Buddhists in Nepal also celebrate D, I read.
When I showed Obama speech on a screen among a group of 30 Indian families in here, they weren't impressed. Some of them got instantly patriotic, and asked me why I did not bring Pratibha Patil's speech. (I was worried someone would then ask me "What happened to speech by mu.ka Alagiri..?..m?"). Someone said it was all 'marketing (!) gimmicks' which the US politicians are good at. The other one found the 2-min speech 'unnecessarily' cutting into the next event - which was 'lunch'.
You only see what you believe you see! http://www.youtube.com/watch?v=SuiAW_6XKVM
I could not stop recalling the joy we saw in our good friend Manick's face when he shared with us his experience of visiting President Obama's inauguration ceremony early this year. (My family & I stayed with him in his palatial house in NY for 4-5 days in Jan 2004 i.e., prior to my transfer to Japan-what a house it is!). Manick wrote a nice article about his personal experience of being at the historic inaugural ceremony in "The Hindu" 29-Jan-2009 edition http://www.hindu.com/2009/01/29/stories/2009012952630900.htm
Subscribe to:
Posts (Atom)







