Apr 2, 2010

”அண்ணாச்சித் தெரு”

’அங்காடித் தெரு’ படத்தைத் திரைப்படம் என்று பார்க்க முடியாமல் போவதற்கு, ”காட்சிகள் கற்பனை அல்ல; அத்தனையும் அண்ணாச்சி கடைகளின் நிஜம்” என்பதை நாம் உணர்வதே காரணம். சில விமர்சனங்களில் சொல்லியிருப்பது போல காட்சிகளில் ஏதும் மிகை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லாம் நாம் ’தெரிந்துகொள்ள விரும்பாத’ நிஜங்கள்.

ண்ணாச்சி கடைகளில் காலை 8 மணி (அல்லது அதற்கும் முன்னால்) முதல் இரவு 11-12 வரை ஓய்வேதும் இல்லாமல் வாரம் 6 நாள் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். ஏழாம் நாள் ஏதாவது ‘படத்’துக்குப் போகிறார்கள். (”மதிய உணவுக்கு 20 நிமிஷம் தான் தருவார்கள்” என்று ரங்கநாதன் தெரு அண்ணாச்சி கடையில் வேலை செய்யும் பெண், முன்னொரு நாள் என் தங்கை போயிருந்தபோது சொல்லியிருந்தாள்). எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாத இதற்குக் காரணம் கிராமத்து அறியாமை, மற்றும் கொடுமையான வறுமை. ஒருவர் விடாமல் எல்லா அண்ணாச்சிகளும் சின்ன வயதில் இப்படி மாடாக உழைத்து மேலே வந்திருப்பதால், ‘மாடாகத் தேய்வதே உழைப்பு’ என்ற பொய்யான எண்ணத்தில் இருக்கிறார்கள்.

ண்ணாச்சிகள் ஸ்டைல் -சம்பளத்திற்கு மேல் தங்க இடமும் மூன்று வேளை சாப்பாடும் தருவது. இதெல்லாமே சொற்பமாக சல்லிக்காசாக இருந்தாலும் அதை விட்டுச் செல்ல யாரும் விரும்புவதில்லை -பிற வேலைகளில் உள்ள “நிச்சயமின்மை’ பயமுறுத்துவதால். நம்மைப் போல் “labor law regulations" "exploitation of illiteracy" "abuse of poverty" என்றெல்லாம் பேசத் தெரியாத அந்தத் தொழிலாளர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்தது: இந்த வேலையை விட்டால் நடு ரோடு தான் கதி என்பது. அதனாலேயே வேலை பறி போவதை சிறிதும் விரும்புவதில்லை. ’கொத்தடிமை’, ’ஜெயில் கைதி’ என்றெல்லாம் நினைப்பதும் கிடையாது. வறுமை மற்றும் அறியாமை.

Child labor ஜப்பான் மற்றும் மேல்நாடுகளில் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று. Sexual harassment, power harassment, limited working hours பற்றியெல்லாம் இப்போது பெரிய கம்பெனிகள் மிகக் கவனமாக இருக்கின்றன. நமக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. அதிகாரிகளும் ‘நம்ம பை கொஞ்சம் நிறைந்தால் சரி’ என்று இருக்கிறார்கள். அதுவரை Demand-Supply தியரியின் படி அண்ணாச்சிகள் காட்டில் அடைமழை தான்.

ண்ணாச்சிகளைக் ‘குறிவைத்து’ அடிக்கும் இந்தப்படத்திற்கு அண்ணாச்சிகள் தரப்பில் கூடிய சீக்கிரம் அரசியல் ரீதியாக எதிர்ப்பு வரலாம். (Aftar all, முதல்வரின் ‘துணைவி’ அண்ணாச்சி ஆளாச்சே!)

(டத்தின் எளிமையான மெயின் காரக்டர்களும் ‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ போன்ற வரிகளை ஜெயமோகன் நைஸாக நுழைத்திருப்பதும் என்னைக் கவர்ந்தன. ஸ்னேகா வருவது போன்ற கலகலப்பான காட்சிகளைக் கூட்டியிருக்கலாம்).

Apr 1, 2010

சேர்ந்து வாழ்ந்தார்?


திருமணத்திற்கு முன் ஒரு
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் (cohabiting) மேல்நாட்டு வழக்கம் நம்மால் ஜீரணிக்க முடியாதது. நம் கலாச்சாரத்தை ‘ஆ, ஊ’ என்று புல்லரித்து, மேல்நாட்டவரை ‘சீ’ என்று பார்ப்பவர்களுக்கு இது ஒரு ‘லட்டு’ மாதிரி பாயிண்ட். என்னதான் தனிமனித உரிமை அது, இது என்று மேல்நாட்டவர் சொன்னாலும், பின் திருமணம் என்ற ஒன்றை ஏனய்யா இன்னும் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கத் தோன்றும். ’திருமணத்திற்கு முன் உறவு’ (premarital sex) என்பதும் நம்மூரில் கிட்டத்தட்ட இதே நிலையில் சிலவருடம் முன் வரை இருந்தது; இப்போது அங்கங்கே ‘இலைமறை காயாக’ நடந்து வருகிறது -அதை ஓப்பனாக ஒத்துக்கொள்ளும் அளவுக்கு இன்னும் நாம் தேறவில்லை. திருமணமாகாமல் குழந்தை என்பது நம்மூரில் நினைத்தும் பார்க்க முடியாதது; அமெரிக்காவில் சகஜம். (சென்றமுறை என் மகளுடன் அவள் ஹைஸ்கூலுக்குப் போனபோது சில மாணவிகள் புகை பிடிப்பதைப் பார்த்து ‘திடுக்’கிட்டேன். "Oh dad, some have even babies" என்றாள் மகள்! )


நான் எழுத வந்தது அதைப் பற்றியல்ல. சமீபத்தில் இந்திய சுப்ரீம் கோர்ட் சேர்ந்து வாழ்தலும், திருமணத்திற்கு முன் உறவும் சட்டப்படி எந்த வகையிலும் குற்றமல்ல என்று சொல்லியிருக்கிறது. நமக்குத் தெரிந்தது தான்; அதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. அந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருபடி மேலே போய் சேர்ந்து வாழ்தலுக்கு ஆதரவாக இந்து மதத்திலிருந்து கிருஷ்ணன் - ராதாவை உதாரணம் காட்டி பேசியிருக்கிறாரே, அது தான் என்னைக் கவர்ந்தது!

னக்குத் தெரிந்தது கிருஷ்ணன் நம்ம மு.க. போல் மனைவி, துணைவி என்று பாமா-ருக்மணியுடன் வாழ்ந்தது மட்டும்தான். ராதாவுடன் சின்ன வயதில் ‘அப்படி, இப்படி’ சில்மிஷம் பண்ணியதாகவும், ராதா அந்த ‘கிக்’கிலேயே ஏங்கியதாகவும் தான் படித்திருக்கிற்னே தவிர, அவர்கள் சேர்ந்து வாழ்ந்தது பற்றித் தெரிந்திருக்கவில்லை. சு.கோ.நீ. சொல்லியிருப்பதாலும், பி.ஜே.பி. கண்டனம் கூடத் தெரிவிக்காததாலும் நிஜம் என்றே நம்ப இடமிருக்கிறது. சேர்ந்து வாழ்ந்த கடவுளை வணங்கும் நாட்டில் அந்த வழக்கம் சுத்தமாக இல்லாமல் போய் எல்லாம் ‘முறைப்படி’ என்று ஆயிற்று. முற்றும் துறந்த முனிவராக ஒரு முறையோடு வாழ்ந்த ஜீசஸை வணங்கும் நாடுகளில் முறையில்லாமல் வாழ்வதே முறையாகிவிட்டது. முரண்!

டுத்தமுறை தீபிகாவுடன் கிறுஷ்ணன் கோவிலுக்குப் போகையில் சந்நதிக்கருகில் நின்று “இன்னா நைனா, சின்ன வயசில குளிக்க வர்ற பெண்கள் கிட்ட சேலை திருடறது, சேர்ந்து வாழ்தல்ன்னு படா கில்லாடியா இந்துகீறே..! கலக்கிட்ட மாமூ..” என்று சொல்லவேண்டும். (முன்பொருமுறை எம்பெருமான் திருமுருகக்கடவுள் வள்ளி-தெய்வானையுடன் திருக்காட்சி அருளும் திருச்செந்தூர் கோயிலில் "எனக்குப் பிடித்த கடவுள் முருகன் தான்" என்றேன். அவள் ஏன் என்று கேட்கவில்லை).

Mar 25, 2010

புரியவில்லை


I don't understand this: Why is so much hue & cry about Obama's healthcare bill passing in the House?


What kind of politics is this?
As Obama has enough numbers in the House, what is the big deal in getting a bill passed, which was, after all, his prime election agenda? I read that some Democrats voted against it. Does the Democratic Party's inner-party procedures or guidelines not require the members to vote in support of their President's bill?

Why not in the past?
The bill offers medical coverage to some 32 million Americans (more than 10% of the total population) that are hitherto with no insurance or access to healthcare. If a bill could bring in such a mega benefit to such a vast number of the poor, why was it not possible for any President (both Democrats & Republicans) to get it cleared for the past 70 years?

Why did Republicans behave the way they did, now?
Now that the benefits of this bill is widely publicized, how come the Republicans afford to oppose it? Aren't they afraid of losing the votes of at least the 32 million that benefit out of this bill? They can't be so ignorant of the vote bank, can they?

Was the US healthcare so harsh, till then?
Pre-existing condition is not a reason for denying one insurance in Japan. If an applicant cannot buy an insurance because of a diagnosed illness, as apparently was the practice in the US till now, where will a 'common stupid man' go ? Had the US healthcare been so harsh to the poor, so far?

The new bill also imposes on the employer (having 50 or more employees) to offer insurance to employees. In Japan, for the unemployed, the Govt offers an insurance which is linked to one's income. Did US not have one so far?

The media hails this bill as 'historic' and identifies its passing as a major success for Obama. I'm trying to understand why both the parties left this untapped in all these years!

Mar 20, 2010

What it takes to be a Tiger

சிகாகோ ஏர்போர்ட்டில் (டிசம்பர்-09) இருந்த advertisement என்னைக் கவர்ந்தது. கோல்ஃப் விளையாட்டில் பந்து (பந்து தானே அது? கோல்ஃப் மாதிரி Rich-men's game -ல் அதற்கு வேற ஏதாவது பேர் இருக்கப்போகிறது...!) குறி தவறி தண்ணீருக்கு மிக அருகில் பாறைகளுக்குப் பக்கத்தில் போய் விட, ’அடுத்து என்ன செய்யலாம்?’ என்று Tiger Woods யோசிப்பது போல் காட்சி. மேலே ‘பளிச்’சென்று ஒரு வரி: “It's what you do next that counts". கலக்கல்!

கீழே சின்னதாக “We know what it takes to be a Tiger. Talk to us to know how we can help you". வரிகள். Accenture என்ற, Tiger Woodsஐத் தலையில் வைத்துக் கூத்தாடிய கன்ஸல்டிங் கம்பெனியின் விளம்பரம் அது.
கனவிலும் கோல்ஃப் விளையாடும் உத்தேசமோ கோல்ஃப் மட்டையால் ராத்திரி 2 மணிக்கு ‘வீட்ல’ அடிவாங்கும் எண்ணமோ இல்லாததால் ‘கிளிக்’ மட்டும் செய்துவிட்டு நகர்ந்தேன்.

Mar 19, 2010

"You're ordinarily Extradinary"

பெங்கால்' பக்கம் புத்திசாலிப் பெண்கள் கொஞ்சம் ஜாஸ்தி போல..! அதெப்படி, அவங்க மட்டும் இவ்வளவு ஆணித்தரமாக, தெளிவாக, அழகாக, நேரிடையாகப் பேசறாங்க? தாகூரில் ஆரம்பித்து சத்யஜித் ரே (அல்லது ‘ராய்’), மிருனாள் சென், அருந்ததிராய், அமார்தியா சென் வரை பொதுவாகவே பெங்கால்காரங்களுக்கு ஜீன் கொஞ்சம் வேற மாதிரி. சமீபத்தில் விகடனில் வெளிவந்த நந்திதா தாஸின் பேட்டியிலிருந்து excerpts:
--------------------------------------------------------------------------------------------------------------------

நந்திதா தாஸ்... சர்வதேச அரங்கில் இந்திய சினிமாவின் பிராண்ட் அம்பாஸடர்களில் ஒருவர். கோவைக்கு வந்திருந்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம் பேராசிரியைபோல் இருக்கிறார். 'காபி டைம்' சந்திப்பில் இருந்து...
''அறிமுக இயக்குநர் முயற்சியிலேயே செவாலியே விருது... வாழ்த்துக்கள்!''

''வாவ்... தமிழ்நாடு வரை தெரிஞ்சுவெச்சிருக்கீங்க. சந்தோஷம்! ஓ.கே. செவாலியே ஜெயிச்ச 'ஃபிராக்' படத்தைப் பொறுத்தவரை, 'ஒன் ஃபைன் மார்னிங் எனக்கு அந்தக் கதை தோணுச்சு'ன்னு சொல்ல மாட்டேன். எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து அனுபவிச்ச வேதனைகளைத்தான் திரையில் காட்டியிருக்கேன். 'ஃபிராக்' படம் வன்முறைக் காட்சிகளே இல்லாத வன்முறைப் படம்னு ஒரு விமர்சனம் இருக்கு. ஆமாம்... அது நிஜம்தான். நந்திதா தாஸ் எனும் தனி மனுஷிக்கு வன்முறையைத் திரையில் பார்க்கப் பிடிக்காது. அதனால்தான் வன்முறைகளைக் காட்சிப்படுத்தாமல், அதற்குப் பின் மக்களின் வாழ்க்கை எந்தவிதத்தில் பாதிக்கப்பட்டது என்பதைக் காட்டியிருந்தேன்.

''அடிப்படையில் நீங்கள் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். ஆனால், இன்று சினிமாவில் தியேட்டர் பின்னணியில் இருந்து வரும் ஹீரோயின்கள் கிட்டத்தட்ட இல்லையே?''

''கசப்பாக இருந்தாலும் உண்மை! இப்போதைய டிரெண்டுக்கு ஹீரோயின் பார்க்க அழகா, கவர்ந்து இழுக்கக்கூடிய அம்சங்களுடன் இருந்தால் போதும். திறமையெல்லாம் தேவையே இல்லை. கல்லூரி, பல்கலைக்கழகங்கள்னு நான் சந்திக்கிற பெண்கள் எல்லாம் என்கிட்ட தவறாம கேக்குற ஒரே கேள்வி, 'மாநிறமா இருந்தும் எப்படி ஒரு ஹீரோயினாக உங்களால் ஜெயிக்க முடிந்தது?' ஆரம்ப நாட்களில் சாதாரண கேள்வியாகத்தான் இதை எதிர்கொண்டேன். ஆனால், ஆழ்ந்து யோசிச்சப்பதான் நம்ம பெண்களின் ஆழ்மனத்தில் படிஞ்சு கிடக்கிற தாழ்வு மனப்பான்மை, 'அழகு' பற்றிய அவர்களின் மனப் பிம்பம்பற்றித் தெரியவந்தது. ரொம்ப வருத்தமா இருக்கு. மிருணாள் சென் என்னைப் பார்க்கும்போது, 'யூ ஆர் ஆர்டினரிலி எக்ஸ்ட்ரா ஆர்டினரி'ன்னு ஆச்சர்யப்படுவார். என் சரும நிறம் நினைவுக்கு வரும்போது எல்லாம், இதைத்தான் நினைச்சுக்குவேன். கறுப்பாக இருப்பதால் தன்னைத் தாழ்வாக நினைத்துக்கொள்ளும் அத்தனை பெண்களுமே எக்ஸ்ட்ரா ஆர்டினரிதான்!

சினிமாவில் பெண்கள் பங்குபத்திக் கேட்டீங்கள்ல. ம்ம்ம்... என்ன சொல்ல, சினிமா ஆணாதிக்கத் துறை. 50 வயசுக்கு மேலயும் ஹீரோ தன் மகள் வயசு பெண்ணுடன் டூயட் பாடலாம். ஆனால், 25 வயதைத் தாண்டிட்டால், ஹீரோயின்கள் 'ஆன்ட்டி'கள்தான். அப்படியும் தயக்கங்களை உதறி சினிமாவில் போராடிட்டு இருக்கும் பெண்களுக்கு என் மெசேஜ் ஒண்ணே ஒண்ணுதான்... 'உண்மையின் மீது நம்பிக்கை வையுங்கள். அது உங்கள் தைரியத்தைப் பன்மடங்காக்கும்!''

'' 'சில்ரன்ஸ் ஃபிலிம் சொசைட்டி ஆஃப் இந்தியா'வின் தலைவர் நீங்கள். இந்திய சினிமாவில் குழந்தைகள் சினிமாக்களுக்கான தளம் இருக்கா?''
''ஏதோ ஒரு மூலையில் சின்னச் சின்ன முயற்சிகள் நடந்துட்டு இருக்கு. ஆனா, குழந்தைகள் சினிமாக்களுக்கான முயற்சிகள் முறையாக இன்னும் துவக்கப்படவே இல்லை. இன்னும் பெரியவர்களுக்கான சினிமாவைத்தான் குழந்தைகளும் பார்த்துட்டு இருக்காங்க. Right to Entertainment for Children என்ற விஷயத்தில் நாம் இன்னும் கவனம் செலுத்தணும்!''

''தமிழ் சினிமாவை மறந்துட்டீங்களா?''
''தமிழ் சினிமாதான் என்னை மறந்திருச்சு. 'அழகி', 'கன்னத்தில் முத்தமிட்டால்' படங்களுக்கு அப்புறம் நல்ல வாய்ப்புகள் வரலையே. எனக்கு எப்போதும் மொழி ஒரு தடையாக இருந்தது இல்லை. கதைதான் முக்கியம்!''

Mar 11, 2010

Hiking Mt.Takamikuira


                                         (Panaromic view of Mt.Takamikura from our 11th floor apartment in Takasago)

Mt.Takamikura is located just 4-5 kms from Takasago. It is a chain of a number of hills, and thus has several hike routes -which has prevented me from hiking there, as stepping into the 'wrong' trail could take one to a different area altogether!

Kayoko-san whom I met in Takasago International Association (TIA) came to my help. She, along with some 20 guys in Takasago has formed a Hikers Club and has been actively hiking throughout the year. She has hiked in the Himalayas, and in almost every mountain I know of in Japan. A housewife who is reluctant to call herself a 'pro'.

We started at 10am sharp from the backside of popular Kashima-jinja .... and quickly went into a steep route. Unlike Mt.Rokko and Tendaki Falls area where you had 1 2-ft width trail along the edges of the mountains, this trail was mostly on rocks. ("When you hike during rainy days, take extra care" said she, without knowing that I won't even go out for shopping on a rainy day!). She kept on giving me several tips even as we hiked -"have shorter steps" "walk on your toes". She also said it is an unwritten rule that those who go uphill should get the way of priority to those who come downhill (which is contrary to driving practice where the down-comers get the priority). It is because those who hike uphill could only have limited visibility -about 1m above their spot.


As we reached the peak (304m) at 12 noon, it was time to sit for lunch. She took out from her bag something that was of the size of a soap-case, which in minutes turned out to be a stove and kettle. She made coffee (There was no vending machine anywhere on the trail or at the peak). There were many enthusiastic hikers I saw on the way; many were hiking individually -not as a group or with the company of anybody. There were some couples. At least there was one group of children from a nearby elementary(!) school. I also saw families with young children -they hiked the less-difficult trail- there are many in Mt.Takamikura. Near the peak some people were posing for a photo behind a board that showed the map of trails. It was then I realized that I had hiked Mt.Takamikura several years ago (in 1993) when Shibu was hardly 3. Fushino-san family took us on the less-difficult route, but I had not known then it was Mt.Takamikura (see pic).

                                                                   A 1993 pic in Mt.Takamikura with Fushino-san family

We climbed down through another route to Nagao -which took around 45 minutes. The entire trail was of 5 km long, and we were hiking on the highest points of the mountains for the most part (see pic).

And that's how Hiking Mt.Takamikura became a regular weekly activity for me -like jogging or going to gym once a week- since I first started in Oct 2009.

Mar 10, 2010

ஆஸ்கர்-2009

                                                                  Kathryn Bigelow wins Oscar (2009) for Best Director

ஆஸ்கர் 2009:  “கம்பன் வீட்டு ex-கட்டுத்தறியும் கவி பாடும் போல!”


( இல்லத்தரசிகள் மன்னிக்கவும்! :-)