Apr 2, 2010

”அண்ணாச்சித் தெரு”

’அங்காடித் தெரு’ படத்தைத் திரைப்படம் என்று பார்க்க முடியாமல் போவதற்கு, ”காட்சிகள் கற்பனை அல்ல; அத்தனையும் அண்ணாச்சி கடைகளின் நிஜம்” என்பதை நாம் உணர்வதே காரணம். சில விமர்சனங்களில் சொல்லியிருப்பது போல காட்சிகளில் ஏதும் மிகை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லாம் நாம் ’தெரிந்துகொள்ள விரும்பாத’ நிஜங்கள்.

ண்ணாச்சி கடைகளில் காலை 8 மணி (அல்லது அதற்கும் முன்னால்) முதல் இரவு 11-12 வரை ஓய்வேதும் இல்லாமல் வாரம் 6 நாள் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். ஏழாம் நாள் ஏதாவது ‘படத்’துக்குப் போகிறார்கள். (”மதிய உணவுக்கு 20 நிமிஷம் தான் தருவார்கள்” என்று ரங்கநாதன் தெரு அண்ணாச்சி கடையில் வேலை செய்யும் பெண், முன்னொரு நாள் என் தங்கை போயிருந்தபோது சொல்லியிருந்தாள்). எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாத இதற்குக் காரணம் கிராமத்து அறியாமை, மற்றும் கொடுமையான வறுமை. ஒருவர் விடாமல் எல்லா அண்ணாச்சிகளும் சின்ன வயதில் இப்படி மாடாக உழைத்து மேலே வந்திருப்பதால், ‘மாடாகத் தேய்வதே உழைப்பு’ என்ற பொய்யான எண்ணத்தில் இருக்கிறார்கள்.

ண்ணாச்சிகள் ஸ்டைல் -சம்பளத்திற்கு மேல் தங்க இடமும் மூன்று வேளை சாப்பாடும் தருவது. இதெல்லாமே சொற்பமாக சல்லிக்காசாக இருந்தாலும் அதை விட்டுச் செல்ல யாரும் விரும்புவதில்லை -பிற வேலைகளில் உள்ள “நிச்சயமின்மை’ பயமுறுத்துவதால். நம்மைப் போல் “labor law regulations" "exploitation of illiteracy" "abuse of poverty" என்றெல்லாம் பேசத் தெரியாத அந்தத் தொழிலாளர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்தது: இந்த வேலையை விட்டால் நடு ரோடு தான் கதி என்பது. அதனாலேயே வேலை பறி போவதை சிறிதும் விரும்புவதில்லை. ’கொத்தடிமை’, ’ஜெயில் கைதி’ என்றெல்லாம் நினைப்பதும் கிடையாது. வறுமை மற்றும் அறியாமை.

Child labor ஜப்பான் மற்றும் மேல்நாடுகளில் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று. Sexual harassment, power harassment, limited working hours பற்றியெல்லாம் இப்போது பெரிய கம்பெனிகள் மிகக் கவனமாக இருக்கின்றன. நமக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. அதிகாரிகளும் ‘நம்ம பை கொஞ்சம் நிறைந்தால் சரி’ என்று இருக்கிறார்கள். அதுவரை Demand-Supply தியரியின் படி அண்ணாச்சிகள் காட்டில் அடைமழை தான்.

ண்ணாச்சிகளைக் ‘குறிவைத்து’ அடிக்கும் இந்தப்படத்திற்கு அண்ணாச்சிகள் தரப்பில் கூடிய சீக்கிரம் அரசியல் ரீதியாக எதிர்ப்பு வரலாம். (Aftar all, முதல்வரின் ‘துணைவி’ அண்ணாச்சி ஆளாச்சே!)

(டத்தின் எளிமையான மெயின் காரக்டர்களும் ‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ போன்ற வரிகளை ஜெயமோகன் நைஸாக நுழைத்திருப்பதும் என்னைக் கவர்ந்தன. ஸ்னேகா வருவது போன்ற கலகலப்பான காட்சிகளைக் கூட்டியிருக்கலாம்).

0 comments:

Post a Comment