Apr 29, 2009

நற்றிணை, புறநானூறு, சுஜாதா

காயாங் குன்றத்து கொன்றை போல
மாமலைவிடரகம் விளங்க மின்னி
மாயோள் இருந்த தேஎம் நோக்கி
வியலிரு விசும்பகம் புதையப் பாய்ப்
பெயல் தொடங்கினாலே பொய்ய வானம்
நிழல்திகழ் சுடர்த்தொடி நெகிழ ஏங்கி
அழல் தொடங்கினளே ஆயிழை அதெனதிர்
குழல் தொடங்கினரே கோவலர்
தழங்கு குரல் உருமின் கங்குவாளே


மேலே பாடலில் ஒருவரி புரியவில்லை? எனக்கும் தான். கலவரப்படாதீர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தின் நற்றிணையில் வரும் இந்தப் பாடல் இன்றைய தேதியில் தமிழ்ப் புலவர்களுக்கு மட்டுமே பிடிபடும்.

இப்போது இந்தப் பாடலை சுஜாதா எளிமைப் படுத்தியிருப்பதைப் பார்க்கலாம். “வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என்று முயற்சிக்காமல், பாடலின் சாரத்தை அழகு குன்றாமல் இன்றைய தமிழில் தந்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டு, அத்துடன், பாடலின் சாரம் பற்றி ஒரு சின்ன அறிமுகமும் செய்கிறார் சுஜாதா: “வீடு திரும்பும் காதலன் தன் தேர்ப்பாகனிடம் சொல்லும் இந்தப் பாடல் இந்தக் காலத்து மாருதி டிரைவர்களுக்கும் பொருந்தும்”.

கருநீல மலர்மரங்களுக்கு இடையில்
சரக் கொன்றைகள் போல மின்னல் மின்னுகிறது
மலை விளிம்புகள் தெரிகின்றன
பெய்யாத மழை பெய்யத் தொடங்கிவிட்டது.
இருள் வருகிறது, இடி உருமுகிறது
இடையர்கள் குழல் ஊதத் துவங்கிவிட்டார்கள்
அவள் தங்கும் இடத்தை நோக்கிச் செல்கிறது மழை.
பயந்து போய் அழ ஆரம்பிப்பாள்
சீக்கிரம் போ!

சுஜாதாவின் எளிமை முயற்சியில் ’அந்தக் காட்சி’ -வீட்டில் தனிமையில் இருக்கும் தலைவியை நினைத்து, விரைந்து வீடு திரும்பத் துடிக்கும் தலைவன் மனநிலை- நமக்குக் கவிதையாக விரிகிறது. ஔவையார் எழுதியதாக நற்றிணையில் வரும் இந்தப் பாடலின் நடையை வைத்து, “ஔவையார் என்று அந்தக் காலத்தில் ஒருவருக்கு மேற்பட்டோர் இருந்திருக்க வேண்டும். இவர் நிச்சயம் ஆத்திச்சூடி எழுதிய ஔவையார் இல்லை” என்று சுஜாதா கருதுகிறார்.

சுஜாதாவின் ‘செல்ல’ வடிவமான ஹைக்குவில் இதே காட்சியைக் கொண்டுவர முயல்கிறேன்:

பெருமழை இடி மின்னல்
மின்வெட்டு எங்கும் இருள்
பயந்து போயிருப்பாள்.
சீக்கிரம் போம், டிரைவரே!

புறநானூற்றில் பாரி மகளிர் என்ற கவிதாயினி எழுதியதாக வரும் இன்னொரு கவிதை அவ்வளவு கரடுமுரடாக இல்லை.

“அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்று எறி முரசின் வேந்தர்
எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே”.

”உலக இலக்கிய அளவுக்குத் தமிழை உயர்த்தும் கவிதைகளில் ஒன்றா”க சுஜாதா வியக்கும் இந்தப் பாடலின் இன்றைய தமிழ்ப் படிவம் கீழே:

“அந்த மாதம் அந்த நிலவில்
அப்பா இருந்தார். கோட்டையும் இருந்தது.
இந்த மாதம் இந்த நிலவில்
வெல்லும் போர் முரசு மன்னர்கள்
கோட்டையைப் பறித்தார்கள்.
அப்பாவும் இல்லை”


போரின் தாக்கத்தை எளிமையாக ஆனால் ஆழமாகச் சொல்லும் கவிதை. இதில் வரும் “அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்” என்ற வரிகள் நமக்கு ஓரளவு பரிச்சயம்; கண்ணதாசனும் வைரமுத்துவும் வேறு சூழ்நிலைகளை விவரிக்கையில் காதலி பாடுவதாக இதே நிலவை எழுதுகின்றனர். ”அன்றொரு நாள் இதே நிலவில்... அவன் இருந்தான் என் அருகில்” (கண்ணதாசன்). “அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்.... கொற்றைப் பொய்கை ஆடுகையில், ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா?” (வைரமுத்து -”இருவர்”).

”அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவு” கவிஞர்களைக் கவர்ந்ததைக் கவனித்து, அதை “கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்” படத்தில் எழுதியிருந்தார் சுஜாதா. நற்றிணையையும் புறநானூற்றையும் அவற்றின் கவித்துவத்தையும் நமக்குத் தெரியக் கொண்டுவந்து காட்டியதும் அவரே.

சு..ஜா..தா... What a Loss!

Apr 21, 2009

இகேபானா (Ikebana)


’இகேபானா’ கண்காட்சிக்கெல்லாம் போகிற ஆள் இல்லை நான்.

இகேபானா (flower arrangement) ஜப்பானில் கலை என்று ஒதுங்கவும் முடியாமல், ஹாபி என்று லைட்டான விஷயமாகவும் இல்லாமல் கதம்பமாக இருக்கும் ஒரு கலாச்சாரம். விதவிதமான பூக்களைப் பீங்கான் தட்டிலோ, கோப்பையிலோ முறைப்படுத்தி அலங்கரித்து வைப்பதைத் தமிழில்“மலர் அலங்காரம்” அல்லது “பூந்தொகுப்பு” என்று மொழிபெயர்க்கலாம் ‘கதம்பம்’ தமிழின் நல்ல வார்த்தை; ஆனால் வேலைப்பாட்டைச் சிறப்பாகச் சொல்லாமல் நாரில் கோர்க்கப்படும் பூக்களையோ, விதவிதமான பூக்களின் கலவையையோ மட்டுமே குறிக்கப் பயன்படுகிறது. இகேபானா தமிழ் நாட்டில் இருந்திருந்தால் தமிழில் சரியான வார்த்தை கிடைத்திருக்கும்.

தீர்மானமாக ஜப்பானியர்கள் விடமறுக்கும் பழைய வழக்கங்களில் இகேபானாவும் ஒன்று. (நம்மூரின் கோலமும், கொலுவும் இந்த ”மரபு வழிக் கலை” யில் வரும் என்றாலும், இகேபானாவிற்கு அதிக முயற்சியும், நேர்த்தியும், கலைஉணர்வும் தேவை. இகேபானாவின் elegance நமக்கு ரொம்ப தூரம்). இகேபானாவிற்கென தனி கோச்சிங் இருக்கிறது. சென்ற நூற்றாண்டில் இகேபானவின் தேர்ச்சி, பெண்கள் திருமணமாவதற்கு ஒரு முன்தேவை (pre-requisite) அல்லது விரும்பக்கூடிய தகுதி (desirable qualification) யாக இருந்தது என்கிறார்கள். (நம்மூரில் இன்றும் சில மாமி வீட்டுப் பெண்பார்க்கும் படலத்தில் “பெண் நன்னாப் பாடுவாளோ இல்லியோ?” என்ற கேள்வி இருப்பது போல்). இப்போது பெரும்பாலும் பெண்களின் ஹாபி அல்லது அதற்கு ஒரு படி மேலே. ”கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லை; ஆனால் தெரிந்திருந்தால் அது நிச்சயம் ஒரு ப்ளஸ் பாயிண்ட்” என்கிறாள், என்னுடன் வேலை செய்யும் சுகியுச்சி. "நான் கல்யாணம் ஆன புதிதில் இகேபானா ரொம்பவும் செய்வேன்; அம்மா கற்றுக்கொடுத்தது. இப்போ அவ்வளவா செய்யறது இல்லை...”

தீபிகா ஒரு கிளாஸ் போய், அங்கே இகேபானாவிற்கான ’தட்டு முட்டு’ சாமான்கள் எல்லாம் கொடுத்ததால், அவ்வப்போது எங்க வீட்டிலும் இகேபானா தலைகாட்டும். இகேபானா கோப்பைகளில் தண்ணீர் ஊற்றி, 2 வாரம் வரை ஒரு முறை தொகுத்ததைக் கெடாமல் வைத்திருக்க முடியும்.

அண்மையில் இகேபானா கண்காட்சி ஒன்றுக்கு complimentary ticket ஒன்று கிடைத்தது. ”sabishi-ne!” (தனியாக இருக்கியே, பாவம்) என்று இரக்கப்பட்டு தனக்கு வந்த டிக்கெட்டை எனக்குக் கொடுத்தாள், சுகியுச்சி. (“அவ ஏன் இரக்கப்படணும்?”). இடம்: Kobe Daimaru டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் மாடிகளில் ஒன்று. Daimaru ஜப்பானிலேயே மேல்தர, ‘ஜன்னல் ஷாப்பிங்’குக் கூட நான் போகத் தயங்கும் ஷாப்பிங் செண்டர். அங்கே நடக்கும் கண்காட்சி சனிக்கிழமை என்பதால் போனேன் -கொஞ்சம் பயந்தபடி தான். கண்காட்சி,

பயந்த மாதிரி இல்லாமல் எளிமையாக, நேர்த்தியாக இருந்தது. பூக்களின் கிளைகளை விதவிதமாக வளைத்து (அதன் செய்முறை எளிதல்ல), பல டிஸைன்களில் ஆனால் இயற்கையாகத் தோன்றும்படிச் செய்திருந்தனர். மாடர்ன் ஆர்ட் போலவும் சில இருந்தன. பெரும்பாலான தொகுப்புக்கள், ஒரிஜினல் வடிவம் சிதையாமல், செடியில் அன்றுதான் பூத்த அழகு குலையாமல் இருந்தன. இகேபானாவின் சிறப்பு, பூக்களின் இயற்கை எழில் கெடாமல் அதைத் தொகுப்பதில் இருக்கிறது வந்திருந்த பலர் மிக நுணுக்கமாகப் பார்த்தபடி, கண்ணாலேயே 100 மெகா பிக்செலில் படமெடுத்துக்கொண்டிருந்தனர். காமெராக்களில் இகேபானாவின் அழகைக் கொண்டுவருவது கடினமே. சில முயற்சிகள்:
















.
இகேபானா பூக்கள்

வளைந்தும் நொடிந்தும் நெளிந்தும்...
அழகாய்ப் பிறந்தால்
ஆபத்து தான்.

Apr 20, 2009

சின்னதாக ஒரு டான்ஸ்

சின்ன குரூப்பாக, ஜப்பான் மாதிரி முற்றிலும் ‘அந்நிய’ நாட்டில் இருப்பதில் இழக்கும் விஷயங்களில் ஒன்று, நமக்கே உரிய இந்திய விழாக்களும் கொண்டாட்டங்களும். (இந்தியர்கள் அதிகம் இல்லாத ஆர்லண்டோவிலேயே வரலட்சுமி விரதத்திலிருந்து புது வருஷப்பிறப்பு வரை -தமிழ், தெலுங்கு ஒவ்வொன்றும் தனித்தனியாக- கோவிலில் உள்ள ஹாலில் கூடி, கலக்கி விடுகிறார்கள்).

இங்கே சுமார் 20 இந்தியக் குடும்பங்கள் மட்டும் உள்ள எங்க ஊரில் New Year போது சின்னதாகக் கூடிவிடுவோம். சென்றமுறை புதிதாய்த் திறந்திருந்த “ஆசியா ரெஸ்ட்ராண்ட்டில்’ Dec-31 இரவு கூடி, சின்னதாக ப்ரொக்ராம் கொடுத்து, புத்தாண்டு பிறந்த நள்ளிரவு கேக் ....

மதுவும், ஸ்ருதியும் (செல்வகுமார்-ரேணுகா பெண்) சின்னதாக ஒரு டான்ஸ் பண்ணினார்கள் (Choreographer -தீபிகா). இணைத்திருக்கும் விடியோவில் பார்க்கலாம்.

Apr 15, 2009

ஸகுரா

எங்கெங்கும் ஹனாமி!
இரவில் ஸகுரா (நான் தீபிகாவைச் சொல்லவில்லை! :-)







சென்ற வாரம் வருடந்தோறும் நடப்பது போல் நாடுமுழுவதும் ஜப்பான் ஸகுரா மலரைக் கொண்டாடியது. வருஷத்தில் ஒரேயொறு வாரம் மட்டும் மரத்தின் இலைகள் ஏதுமின்றி மரம் முழுவதும் வெள்ளைப் பூக்களாகக் காட்சி அளிக்கும் ஸகுரா, சரியாகக் குளிர் முடிந்து ஸ்ப்ரிங் (இளவேனிற்காலம்?) தொடங்கும்போது மலர்கின்றது. ஒரே வாரம் தான்; பூக்கள் எல்லாம் இழந்து, மறுபடியும் வைரமுத்து எழுதிய “பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி போல” அடுத்த வருஷம் வரை மீண்டும் காத்திருக்கிறது. "வாழ்வது கொஞ்சகாலம் என்றாலும் சிறப்பாக, பூத்துக் குலுங்குவது போல வாழவேண்டும்" என்று வாழ்க்கையின் தத்துவத்தையே ஸகுரா தெரியப்படுத்துவதாக ஜப்பானியர்கள் இந்த மலர் வாரத்தை ரசிக்கின்றனர். ஸகுரா ஜப்பானின் தேசிய மலர்.

Hana-mi (பூ பார்த்தல்) என்றழைக்கப்படும் இந்த நிகழ்வின் போது ஸகுரா மரங்கள் இருக்கும் பார்க் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி, பிளாஸ்டிக் பாய் விரித்து அமர்ந்து.... வேறென்ன, சாப்பிடுகிறார்கள். காரோகே செட் கொண்டு வந்து பாடுவோரும் உண்டு. ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தும், பெரும்பாலோர் சாப்பாட்டுடன் ’ஸாகே’ எனப்படும் உள்ளூர் தேவபானம் பருகியும், எந்த வித அசம்பாவிதமும் நிகழாமல் இருப்பது ஜப்பானுக்கே உரிய மற்றுமொரு வியப்பான விஷயம். இரவில் ஸ்பெஷலாகப் போடப்பட்ட விளக்குகளின் வெளிச்சத்தில் ஸகுரா மரத்தடியில் இட்லி சாப்பிடுவது இன்னொரு ‘கிக்’- நாங்கள் மிஸ் பண்ணுவதில்லை.

முதல் முதல் இந்த முறை ஸகுரா தனிமையில் கழிந்தது. Himeji castle-ஐச் சுற்றிலும் இருக்கும் ஹனாமிக்கு மிகப் பாப்புலரான பூங்காவை வலம் வந்தபோது உலகமே ஜோடி-ஜோடியாக, அல்லது குடும்ப சகிதமாக இருந்தது (போல் தெரிந்தது). ’தனியாக யாரும் இருக்கிறார்களா?’ என்று தேடிப்பார்த்தேன்; இரண்டொரு ஸீனியர் சிட்டிஸன்’கள் கையில் AK-47 அளவில் காமெரா, காமெரா ஸ்டாண்ட், இத்யாதி ...தூக்கிக்கொண்டு தரைக்கு 4 மீட்டர் உயரத்தில் எதையோ உற்றுப்பார்த்து நடந்துகொண்டிருந்தனர். Professionals! இத்தனை கூட்டத்திற்கு நடுவிலும் தனியாக ஒரு இளம்பெண். ஆச்சரியத்தில் கிட்டப் போய்ப் பார்த்தால்...

ஹனாமி கூட்டத்தில்
தனிமையில் அவள்.
இல்லை,
நாய்க்குட்டியுடன்.


என்று ’சட்’டென்று ஒரு ஹைக்கு எழுதி, அவளை ஒரு ‘கிளிக்’கிட்டு, கூட்டத்தினுள் கலந்தேன். (ஹைக்கு இலக்கணம் தெரிந்தவர்கள் மன்னிக்கவும்).


Apr 11, 2009

அந்தக் கண்கள்....


அண்மையில் பழைய புத்தகங்களைத் தேடியபோது அவ்வப்போது கண்ணில் படும் 1985-ல் நான் எழுதிய டயரி மீண்டும் ’பட்டது’. அதில் எனக்குப் பிடித்த கவிதையாக அப்துல் ரகுமானின் “அந்தக் கண்கள்...” என்ற கவிதையைக் கத்தரித்து ஒட்டியிருக்கிறேன்.

அந்தக் கண்கள்....
என்னிடம் எதைத் தேடுகின்றன?
இந்தச்
சாம்பல் மேட்டில்
கனலும் இல்லை
பொறியும் இல்லை.
இப்போது
அந்தக் காதலும் இல்லை;
காதலின்
நினவுகளும் இல்லை.
இதயத்தில் பற்றிய நெருப்பில்
எதுவுமே மிஞ்சவில்லை.
நீ
யாருடை சித்திரத்தைக்
கண்களில் வைத்துக்கொண்டிருக்கிறாயோ
அந்தக் காதலன்
நான் அல்ல.
நான்
அவனுடைய மௌனச்சிதை!

இந்த உலகத்தில்
அன்பு குற்றம்.
நம்பிக்கை குற்றம்.
ஏங்குவதோ பாவம்.
இங்கே
காதலுக்கு இடமில்லை.

அப்துல் ரகுமானின் புதுக்கவிதை வரிகளில் பெர்ஸனலாக ஏதோ ஒரு மெஸேஜ் இருப்பதை உணரலாம். பல்வேறு காலகட்டங்களில் இந்த வரிகள் என்னுடன் ’நெருக்கமாவதை’ உணர்ந்திருக்கிறேன். பெரும்பாலும் தனிமை நேரங்களில்.

இருந்தும், 85-ல், கனவுகள் மட்டுமே இருந்த அந்த நாட்களில், இந்தக் கவிதை என்னை ஏன் கவர்ந்தது என்று புரியவில்லை.

.

குனியக் குனியக் குட்டு!


ஜப்பானில் மரியாதை நிமித்தம் குனிவது மரபு. ஒரு சின்ன நன்றியும் மன்னிப்பும் கூட குனிதல் இல்லாமல் வருவதில்லை. ஒருவர் குனியும்போது, அதற்கு மரியாதையாக குனிதலைப் பெறுபவரும் குனிகிறார். பெரிய மனிதர்களைப் பார்க்கும்போது, 90 டிகிரி வரை குனிவதும், ‘பெரியவர்’ நிமிர்ந்த பின்னும் ஜூனியர், ஒரு சில நிமிடங்களாவது அதிகம் குனிந்திருக்க வேண்டும் என்பதும் இன்று வரை வழக்கத்தில் உள்ள மரபு. ”நான் உன்னிலும் எந்த வகையிலும் உயர்ந்தவன் இல்லை” என்று ஒருவருக்கொருவர் உணர்த்தி நட்பு பாராட்டுவதாக ஆரம்பித்த வழக்கம்.

மேற்கத்திய நாடுகளில் குனிதல் வேலையை, கை கொடுத்தல் செய்கிறது. “என் கைகளில் எந்த ஒரு ஆயுதமும் இல்லை; நாம் நண்பர்கள்” என்பதைக் குறிக்கும்படி தொடங்கியது. (நம் ஊரின் இரு கை கூப்பி வணங்குதலின் சரித்திரக் காரணங்கள் தெரியவில்லை).

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சவூதி மன்னரை சந்தித்த போது மரியாதை காரணமாகக் குனிந்து வைக்க, அது ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. http://www.youtube.com/watch?v=4gJtIss7xso குனிவது sub-servient; அமெரிக்க ஜனாதிபதி யாருக்கும் குறைந்தவர் இல்லை; Protocol violation, இத்யாதி, இத்யாதி. வெள்ளை மாளிகை “ஒபாமா குனியவில்லையே; சவூதி மன்னரின் கையைக் குலுக்குகிறார், அவ்வளவே” என்று மறுத்து, இன்னும் கொஞ்சம் தமாஷ் காட்டியது! ”என்ன இருந்தாலும் ஒபாமா முஸ்லிம் தானே... அதான்” என்கிறது Washington Times: "The bow was an extraordinary protocol violation. Such an act is a traditional obeisance befitting a king's subjects, not his peer. There is no precedent for U.S. presidents bowing to Saudi or any other royals....Mr. Obama's bow to the Custodian of the Two Holy Mosques does not help his image with those who believe he is secretly a Muslim, and why he chose to bow only to the Saudi King and not to any other royals remains unexplained..... Mr. Obama is proving that one can be elected president without knowing how to behave presidentially”.

இந்தக் கூத்தில், எனக்குப் புரியாதது -குனிவது அராபியர்களின் வழக்கமா, என்ன? ஒபாமா ஏன் சவூதி மன்னரிடம் குனிய வேண்டும்? பதிலுக்கு ச. மன்னர் கொஞ்சமும் குனிய முயற்சி செய்ததாகத் தெரியவில்லை!

Apr 4, 2009

Aminjikarai beggars & Tokyo homeless.


ரொம்ப வருஷத்திற்கு முன் அமிஞ்சிக்கரை முருகன் ஸ்டோர்ஸில் சித்தப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு பிச்சைக்காரர் வந்தார். சில நிமிடத்தில் அடுத்தவர். பின் இன்னொருவர். மற்றொருவர்... பிச்சைக்காரர் traffic அன்று வழக்கத்திற்கு அதிகமாக இருந்தது. என்ன என்று கேட்டால் வாரத்தில் ஒருநாள் என்று முறை வைத்துக்கொண்டு எல்லா பிச்சைக்காரர்களும் ஒவொரு ஏரியா போவார்களாம். அன்று திங்கட்கிழமை (அல்லது செவ்வாய்க்கிழமை); அன்று அமிஞ்சிக்கரை முறையாம். வாரத்தின் மற்ற 6 நாட்களும் அமிஞ்சிக்கரை கடைகள் பக்கம் ஒரு பிச்சைக்காரரும் வருவதில்லையாம். என்ன ஒரு disciplined/ organised workforce, தங்களுக்குத் தாங்களே வரைமுறை வைத்துக்கொண்டு சூபர்வைசரோ போலீஸோ இல்லாமல் தாங்களே அதை முறையாக பின்பற்றிக்கொண்டு!

டோக்கியோவின் homelss பற்றி சமீபத்தில் இங்கே செய்தித் தாளில் படித்ததும் அதே எண்ணம் தான் தோன்றியது. பிளாட்பாரத்தில் அட்டைப் பெட்டிகளுடன் கடைவாசலில் தூங்கும் இவர்கள் கடைப்பிடிக்கும் maaners: (Click at the newspaper clipping above)

(1) சாப்பாட்டு மீதிகளைக் குப்பைத்தொட்டியில் தவிர வேறு எங்கும் எறிவது கிடையாது. Cleanliness!

(2) New comers க்கு ஸீனியர்கள் பிளாட்பாரத்தை எப்படி சுத்தமாக வைப்பது, எப்படி கடை வாசலை காலையில் கடைக்காரர் வரும் முன் க்ளீன் செய்வது என்று கிளாஸ் எடுக்கிறார்கள். Indoctrination & Training!

(3) இலவசமாக வாலண்டீர்கள் சப்ளை செய்யும் உணவுப்பொட்டலங்களை வரிசையில் நின்று வாங்குகிறார்கள். Orderliness!

(4) Extra pack கிடைத்தால் அதைத் தானே வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுடன் - உணவுப் பொட்டாலம் கிடைக்காதவர்களுடன் பகிர்ந்து கொள்வது. Sharing & Distribution!

(5) வரிசையில் நிற்கும்போது குடித்திராமல் இருப்பது. Disciplined when on duty!

"இப்போ வர்ற புது homelss ஆளுங்கள்லாம் முன்னே மாதிரி இல்லை. அன்னைக்கு ஒரு புதுமுகம் வழக்கமா இன்னொருத்தர் படுக்கும் இடத்தில் படுக்கிறார்; கேட்டால் இது public place தானே என்கிறார். வர வர ஒரு ஒழுங்குமுறையே இல்லாமல் போய்விட்டது..." என்று அங்கலாய்க்கிறார், ஒரு நீண்ட நாளைய homeless.

ப்பானின் தனித்தன்மைகளில் ஒன்று எதையும் முறைப்படி செய்வது. எதற்கும் ஒரு முறை இருப்பது, அதை எல்லோரும் தவறாமல் பின்பற்றுவது. அதற்கு நிகராக இந்தியாவில் அமிஞ்சிக்கரை பிச்சைக்காரர்களை மட்டுமே நான் சொல்வேன்.

பகலவன் - சென்னை 25




AR.ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்ததும் நான் முதலில் நினைத்தது பகலவனைத்தான். அதுபற்றி அப்புறம்.

மிகச் சில தம்பதியருக்கே பொருத்தம் பெயரிலேயே தொடங்குகிறது. பகலவனின் மனைவி -வெண்ணிலா.


பகலவனும் முழுத்தமிழில் பெயர் அமைந்ததாலோ என்னவோ கவிதை, எழுத்து என்று முன்னமே ஆர்வமாக இருந்தான். வைரமுத்துவை ’டயமண்டு’ என்று செல்லமாகத் திட்டினாலும், திரைக்கு வெளியே வைரமுத்து எழுதிய ”அது ஒரு காலம் கண்ணே, கார்காலம்” போன்ற கவிதைகளைப் படிப்பவன். திரையில் வைரமுத்துவின் வரிகளை சட்டென்று கண்டுபிடித்துவிடுவான். (சிவாஜியின் ”பூம்பாவாய்.. ஆம்பல், ஆம்பல்... உன் புன்னகையோ மவ்வல், மவ்வல்”பாடலில் ஆம்பலுக்கும் மவ்வலுக்கும் அவனிடம் தான் அர்த்தம் கேட்கவேண்டும்). ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ”கணியன் பூங்குன்றனார்” என்றெல்லாம் எங்கள் குரூப் ஈ-மெயில்களில் quote பண்ணியிருந்தான். (”யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற காலம் கடந்த சொற்றொடரை எழுதியவர்). இன்னும் அவன் மு.க. அபிமானியாக இருப்பதற்கு அரசியல் அன்றி மு.க.வின் சிலேடைப் பேச்சை ரசிப்பதுதான் உண்மையான காரணம்.

சந்தேகமின்றி, சுஜாதாவின் தீவிர ரசிகன். மரியாதையாக சுஜாதா “எழுதியிருக்கிறார்...” என்பான், ‘ன்’னைத் தவிர்த்து.

கல்லுரி காலங்களில் பாலச்சந்தரின் கதைசொல்லும் நேர்த்தியை வியந்த இளைஞர் அணியில் அவனும் ஒருவன். கிண்டி ஹாஸ்டலில் அவன் ரூமில் பாலச்சந்தர் பற்றி ஒரு புதுக்கவிதையே எழுதி வைத்திருந்தான்:

”சினிமா
சிக்கலில் இருந்தபோது
சிக்கலையே சினிமாவாக்கியவன்”

(அதற்குக் கீழே நான் இன்னொரு வரியாக “....அதில் சில்லறை சேர்த்தவன்” என்று எழுதிவைத்ததாக, 2003-ல் நான் -பகலவன் -பொன்ராஜ் குடும்பமாக ஃப்ளோரிடாவில் ஒருவாரம் ஒரு மெகா வேனில் சுற்றியபோது சொன்னான்)

தமிழார்வம், பாலச்சந்தர் ஈர்ப்பு, புதுக்கவிதை நாட்டம் இவற்றுடன் கல்லூரி காலங்களில் இள ரத்தமும் சேர்ந்து தனக்கென சீர்திருத்தக் கருத்துக்கள் கொஞ்சம் வைத்திருந்தான். விதவைத் திருமணத்தை சமூகம் அங்கீகரிக்காததைப் பற்றி சூடாகப் பேசி, “மணந்தால் ஒரு விதவையையே மணப்பேன்” என்று அவன் சொன்ன தீவிரத்தைப் பார்த்து வசீகரன் சொன்னது: “இவன் இருக்கிற வேகத்தைப் பார்த்தால், யாரையாவது விதவையாக்கிட்டு தான் அந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணுவான் போல...”

தமிழர்கள் பலரும் போல் இசையின் உச்சம் இளையராஜாதான் என்று நம்புகிறவன் (இன்றுவரை). இ.ராஜாவை மேஸ்ட்ரோ என்று மட்டுமே குறிப்பிடுவான் -பெயரைத் தவிர்த்து. AR.ரஹ்மானின் ஆரம்ப காலங்களிலும் அதற்கப்புறம் ஒவ்வொன்றாக மெகா ஹிட்கள் வந்தபோதும் “AR.ரஹ்மான் ஒரு jingles guy" என்பான். “இசைஞானியுடன் ஒப்பிடுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை...”.

ண்மையில் AR.ரஹ்மான் ஆஸ்கர் பெற்றபோது, இளையராஜா ரசிகர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாததைப் பார்த்தேன். "ARR happens to be at the right place at the right time, with the right group..." என்கிற ரீதியில் தான் நிறையப்பேர் சொல்கிறார்கள். இதுபற்றி நான் எழுதியதும், பகலவனின் பதிலும் கீழே:

நான்:
Its a month since AR Rahman received his two Oscars. I happened to talk to a friend of mine who is an ardent Ilayaraaja fan. When asked about Rahman's Oscar, He did not think it special. What this Oscar had brought out was, according to him, that any average-level professional who is at the right place at the right time could fetch Oscar.

He recalls that AAR has done much better songs earlier in Indian films, and certainly Slumdog Millionaire is not THE BEST for Rahman. According to him, "Naan KadavuL" would not have had the impact but for Ilayaraaja's soundtrack and also the songs -especially the very first song. So, what Kamal has said ("Oscars follow 'scales' set by the Americans") is not entirely a statement made out of jealous.

Raja had done a lot more even in 'Sinthu Bairavi' days. He didn't win Oscar because none of his movies was at a level enough to reach Oscar nomination. I got curious to know what Pagals thinks of ARR's Oscar -at a time when his Maestro has done an excellent work in Naan KadavuL.

One thing is clear though. Once AR Rahman won the Oscars, for our people, Oscar ceased to be a Great Award! I.For Raja fans its "not a big deal" ("அப்படி ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை போல"!); they don't believe ARR has gone a step ahead of their Maestro!
-----------
பகலவன்:
Remember our old discussion during 1997/98 time frame in this forum (on MBAsand management gurus, I think)? ARR is "smart" whereas Ilaiyaraja is "brilliant". This IMO is indeed the difference. Being brilliant does not take you anywhere. Onehas to be smart to find the correct approach and mechanics involved to reach thetop. ARR mentioned in the cine-musician's meeting, (they showed on Sun-TV acouple of weeks back), that he wondered why not an Indian get an Oscar. Apparently,ARR employed / consulted a Hollywood consultant and took the guidance and here is ARR with Oscar..!!

Will Raja ever get any award (I mean Padmabhushan and such)? Probably not, becausea) he is not a self-promoting guy (its very well known that he does NOT have any PR skills)b) he is in a divine world where all these awards and such does not matter much to him(for him, music is life, or so it has become). Like ARR mentioned, Raja is beyond all these awards. Harris Jayaraj added even further.

That said, I remember mentioning ARR being a "jingles guy" those days and I standby that.

Ever since, he has grown to be smart enough to make jingles into good songs indeed. His approach is different in the sense, he comes up with a short verse and develops layers of music around it to make it grandeur. He also lets the singer come up with subtle variations and accept them into his compositions. On the other hand, Raja is more theory based approach, defining the raaga, scale, harmony everything to fit to the situation described to him. His music *is* written on the paper and singers are *not* allowed to change even a bit. (Look at videos in Youtube, where Raja is adamant about the singers singing the original notes)

In a way, these styles make both ARR and Raja a unique composers, IMO.
Am I happy that ARR got an Oscar? Yes, I do, as a Tamizhan. Do I think his work is outstanding in SDM ? No, I do not think so. Its like a "kichhadi" (for the lack of betterterm, sorry). Would SDM ever get nominated if the same was made by any Indian director?(You know the answer), a big "NO"

Regarding Raja's work in Naan Kadavul, its simply outstanding. Its a great subject matter for many Indian musicians to analyze and educate themselves on how a RR should be done.--Pagalavan
--------------
AR.ரஹ்மானின் ஆஸ்கருக்குப் பின்னால் ஒரு கன்ஸல்டண்ட் இருந்ததாக வரும் செய்தி எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. இத்தனக்குப் பிறகும், இளையராஜா ரசிகர்கள் இ.ராஜாவை AR.ரஹ்மானுடன் ஒப்பிட்டால் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள். இந்த மெண்டாலிடியை கொஞ்சம் ஆராயவேண்டும்!