Feb 11, 2009

"அம்மா அழாதே"

இலங்கைப் பிரச்சனை ‘நிறைவுரை’யை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சுஜாதா ‘நல்ல கவிதை’ என்று அடையாளம் காட்டியிருந்த "அம்மா அழாதே" என்ற ஈழத்துக் கவிதையின் சில வரிகள்:


"துயிலா இரவுகளில் அப்பா என்று
அலறித் துடிக்கிற சின்ன மழலைக்கு
என்னதான் சொல்வாய் ?
உலவித்திரிந்த நிலவைக் காட்டி
மார்பில் தாங்கி
அப்பா கடவுளிடம் போனார் என்று சொல்லாதே.
துயரம் தொடர்ந்த வகையைச் சொல்.
குருதி படிந்த கதையைச் சொல்.
கொடுமைகள் அழியப் போரிடச் சொல்...."


படித்தவுடன் ‘எடு, கையில் துப்பாக்கியை’ என்று ’புலி’த்தனமான கோபம் வரும் இந்தவகையிலான கவிதை ஈழத்திலிருந்து தான் வரமுடியும். இதை எழுதுவதற்கு தமிழ்நாட்டில் சூழ்நிலை இல்லை என்கிறார், சுஜாதா.

0 comments:

Post a Comment